Saturday 19 March 2016

பெருகும் கொலைகள்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

     🏮 பெருகும் கொலைகள் 🏮

🗯அன்பார்ந்த சொந்தங்களே
 இன்று இந்த உலகில் வாழக் கூடிய எந்த நாட்டை சேர்ந்த மக்களாக இருந்தாலும் சரி
 எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரியே  மனிதாபிமானம் என்பதை  வெளிப்படுத்துபவர்களும் இருக்கின்றார்கள் .

🔘மனிதாபிமானம் என்பது கையாளாகாதவன் செயல்,  அது இந்த காலத்திற்கு ஏற்றது அல்ல என்று அதை வெறுக்க கூடியவர்களும் இதே உலகில் தான் இருக்கிறார்கள்.

🔘இன்று இந்த உலகில் கொலைகள் என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது, பணத்திற்காகவும்,  விளையாட்டிற்காவும் கூட சிலர் கொலை  செய்கிறார்கள்.

🔘சிறியவர் முதல் பெரியவர் வரை  கொலை செய்ய தயங்குவதில்லை.

🔘ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்து எதற்கு கொலை செய்கிறோம் என்று கூட தெரியாமலேயே கொலை செய்கின்றனர்.

🔹கள்ளக்காதலிற்காக கொலை

🔹பணத்திற்காக கொலை

🔹பாசதிற்காக கொலை

🔹நேசத்திர்க்காக கொலை

🔹மதிப்பிற்காக கொலை

🔹மரியாதைக்காக கொலை

👆🏻இது போன்று காரணங்கள் நீண்டுகொண்டே  போகிறது

🔘தமிழ் நாட்டை எடுத்து கொண்டாலே முன் இருந்ததற்கு இப்பொழுது கொலைகள் அதிகமாகி இருப்பதை நாம் தெளிவாக  அறியலாம்.

🔘தினசரி நாம் இதை பார்த்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் எச்சரித்த மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று தான் இந்த கொலைகள் பெருகி விடும் என்பதை நாம் நினைவு கூற்வது  கிடையாது.

 ☝🏻அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் .

🗯எதற்க்காக  இந்த உலகிற்கு நாம் வந்தோம் என்பதை மறந்துவிட்டோமா❓

🗯அல்லது மறுமை நாளை மறந்து விட்டோமா❓


🔘எம் தூதர் கூறினார்களே கொலை பெருகி விடும்,  கொலை செய்தவருக்கு அவனை ஏன் கொலை செய்தோம் என்று தெரியாது,கொலை செய்யப்பட்டவர்க்கும் தெரியாது

👆🏻இன்று பார்க்கிறோமா இல்லையா❓

🗯முஸ்லிம் சமுகமே❕

🔘இன்று மறுமை நாள் வராது நாளை வராது என்று எண்ணி கொண்டு இருந்தால் கேடு தான்

☝🏻அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை பாருங்கள்👇🏻

📓எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
(அல்குர்ஆன் : 75:5)

📓கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
(அல்குர்ஆன் : 75:6)

❌வேண்டாம் மனிதா வேண்டாம்❌

☝🏻அல்லாஹ் கொடுத்த அருளை நினைத்து பாருங்கள் யாரும் தப்ப முடியாத அந்த நாளில் அல்லாஹ்விடம் சென்றடைவோம் என்பதை மறவாதீர்கள்.

📓4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.

🗯அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு கொலை செய்வது சரியான தீர்வாகாது.

👍🏻பொறுமை காக்கவேண்டும்.

🗯கொலையைவிட அல்லாஹ் பெரிய ஆயுதத்தை கையில் கொடுத்துள்ளான்.

🔘அந்த ஆயுதம் வேறெதுவுமில்லை அநீதம் இழைக்கப்பட்டவரின் துஆ ஒப்புக் கொள்ளபடுவதுதான்.

🗯இங்கே நபி அவர்களின் அழகிய முன்மாதிரியாக ஒரு நபிமொழி தொகுப்பை காணலாம்.

📓6394. அனஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு “குர்ரா“ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் கவலைப் பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் “குன}த்“ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்“ என்றும் சொன்னார்கள்.
ஷஹீஹ் புகாரி.

👆🏻இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கோபத்தின் உச்சநிலைக்கு சென்றாலும் பொறுமைகாத்து பஜர் தொழுகையின் போது துஆ செய்தார்கள்.

🔹காரணம் என்னவெனில்❕❕

📓2448. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி.

👍🏻நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு துஆவின் மூலம் வெற்றிகண்டார்களோ அதேபோல் நாமும் வெற்றிகண்டால் உலகிலே கொலைகள் இல்லாமல் எங்கும் அமைதி நிலவும் .


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  19 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment