Tuesday 15 March 2016

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

மகளிர் தினம் ஓர் பார்வை

          பகுதி-2

💐அல்ஹம்துலில்லாஹ்💐

✳மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி எதற்கு தேர்வு செய்தார்கள் என்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம்.

✳கடந்த பகுதியில் மகளிர் தினம் மார்ச் 8யில் அமைய காரணமாக இருந்த நிகழ்வை பார்த்தோம்.

💥இன்ஷா அல்லாஹ் அதை தொடர்ந்து அந்த நாள் எப்படி உறுதி செய்யப்பட்டு  சர்வதேச நாளாக அமைந்தது என்பதை பார்ப்போம்💥
👇👇👇

🏮1909-இல் அமெரிக்க
சோஷலிஸ்ட் கட்சியால்        அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-இல் கொண்டாடப்பட்டது.

♦அதன்பிறகுபிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது.

🏮 1910-இல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடிப் பெண்கள் தினத்தைச் சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து, சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


🏮1911 மார்ச் 19ல் நடைபெற்ற பெண்கள் தினத்தில் லட்சகணக்கில் பெண்கள் பங்கேற்றனர்.

💥அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் வேளைக்கு சென்ற பெண்கள் 140 பேர் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் கருகி இறந்தனர்.

💥இதனால் அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

🏮1917ல் ரஷ்ய வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் போரில் பலியான சமயத்தில் பெண்கள் அமைதிக்காக போராட்டம் நடத்தினர்.

💥அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது .

✅அன்று ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23 ஆகும்.ஆனால் அது உலகம் மக்கள் பின்பற்றக்கூடிய கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள்.

 💥ஐ.நா.-வும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமத்துவக் கோரிக்கைகளுக்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.


📜1945-இல் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி, பெண்களுக்குச் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது.

🔶பெண்கள் தொடர்பானசர்வதேசக் கொள்கைகள்

🔶வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் திட்டங்கள்

🔶லட்சியங்கள்

உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உழைத்தது.


🏮 1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.


🏮1977-இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


✳அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்தது.

✳சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

 💥பெண்கள் நலன் குறித்துச் சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

🚻அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.


✳சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின.

🔶பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், 🔶பொதுக்கருத்து உருவாக்குதல்,
🔶சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி,
🔶ஆராய்ச்சி நான்கு வழிகளில் வழிகாட்டி,
 முயற்சியும் செய்து வருகிறது.


💥நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும்,

💥அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள்.


✔இதுவரை மகளிர் தினத்தின் வரலாற்றை அறிந்தோம் .

💥 இனி மகளிர் தினம் என்ற தலைப்பை ஷரீஅத்தின் கட்டமைப்பில் விரிவாக காண்போம் ..
           
   இன்ஷா அல்லாஹ்              
         
 👗தொடரும்.....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 08 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment