Sunday 13 March 2016

திருமணம் ஓர் அலசல் பகுதி 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢


🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺


✔ஒரு குடும்பம் உருவாவதற்கு அஸ்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும்.

🔵உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனித குலம் உற்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும்.

🔷அணு முதல் அனைத்திலும் பால் வேறுபாடு காணப்படுகின்றது.

👫ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான்.

👆🏻இதனை இனக்கவர்ச்சி என்பார்கள்.

 🔷பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும்.

🔹மிருக உலகம், தாவர உலகம் உற்பட எல்லா உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

🔹இவ்வாறு அவை எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி உறவு கொள்வதற்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான்.

👉🏽ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அவன் பாலுணர்வின் கடிவாளத்தை கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக விட்டுவிடுவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை


👫ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

🔺சமூகம் என்ற விருட்சத்திற்கு வித்தாக அமைவது குடும்பம்.

🔺குடும்பம் என்ற நிறுவனத்தின் நுழைவாயில் திருமணமாகும்.

🔹இப்பின்னணியிலேயே இஸ்லாம் திருமணத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.

👦🏻இளைஞர்களை மணவாழ்வுக்கு தூண்டுகின்ற பல அல்குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களை காணமுடிகின்றது.

🔹திருமணம் என்பது உலகில் தோன்றிய இறைதூதர்கள் அனைவரினதும் வழிமுறையாகும் என்பதை குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிசெய்கின்றன.

🔹இவ்வளவு தெளிவாக மார்ககம் சொல்லி இருக்கும் நேரத்தில்

.👦🏻ஆண்களுக்கு வாலிபத்தை அடைந்துவிட்டால் திருமணம் செய்யுங்கள் -நபிமொழி

🔹நம் குடும்பத்தில் இதையெல்லாம் பின் பற்றாமல்

🔺தன் நலத்தை கருதி

🔺தங்கை இருக்கிறால்

🔺விடு சின்னது கல்யாணம் ஆனால் பெரியா விடு தேவை என்று .

🔻வரதட்சணை  மிக குறைவாக போடும் இடம்

🔹நீ வாங்கும் சம்பளம் உனக்கே பத்தல இது வேற கல்யாணம் தான் குறையா என்று?


🔷திருமணம் என்றேலே பல குறைகளை கூற ஆரம்பித்து விடுவார்கள்


🔺நீங்கள் முஸ்லிம் என்றால் யாரை பின்பற்ற வேண்டும்  அறிவிர்களா பெற்றோர்களே❓

🔺நபி ஸல் அவர்கள் சொன்ன பிறகும் பேராசையால் வரம்பு  மீறுவது சரியா❓

🔺நீங்கள் தான் மார்க்கத்தை அறிந்தவர்கள் என்று நினைப்பது சரியா❓

இத்தகைய உங்களது காரணங்களால் அவன் வரம்பு மீறினால் அவமானம்  உங்களுக்கு தான்.மறுமையிலும் தண்டனை  உண்டு.அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்  பெற்றோர்களே.

☝🏻அல்லாஹ்வின் மார்க்கம் 1437 வருடத்திற்கு முன் எப்படி இறக்க பட்டதோ அப்படியே அல்லாஹ் பாதுகாக்கிறான்.

🔺எல்லாகாலத்திற்க்கும் ஏற்றார் போல தான் அல்லாஹ் கட்டளையிடுவான்

🔺காலங்களுக்கு தகுந்த படி மாறுவது  அல்ல மார்க்கம் .❓

📓நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காகவே ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகவே நாம் படைத்துள்ளோம்.’
அல்குர்ஆன் 78:8, 51:49, 53:45, 75:39


🔵மனிதன் பிறந்து வளர்ந்து பருவமடைந்ததும் தனக்குரிய துணையைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும் என்பது இறை நியதியாகும்.

..............

🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗
            தொடரும்
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய


♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186


பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard


📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝பதிவு நாள்: 11 JAN 2016

No comments:

Post a Comment