Wednesday 16 March 2016

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 12

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 12

   
👩🏻 பெண்ணுரிமை 👩🏻


🌀✨இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

👆🏻இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் இஸ்லாத்தை சரியாக விளங்காத சிலர் கூறும் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்

💈அதை நாம் தெளிவாக ஆராய்ந்தால் ஏன் அவ்வாறு உள்ளது என நாம் விளங்கி கொள்ளலாம்.

💈அவை சம்மந்தமாக சிறிய விளக்கம் 👇🏻

💈இஸ்லாம் கூறி இருக்கும் அனைத்திலும் ஒரு காரணம் இருக்கும் இவை சம்மந்தமாகவும் பல காரணங்கள் உள்ளன.

🌀அவற்றில் சில👇🏻

1.ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான்.

💈குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.

2.தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் அனைத்து உறவினர்கள் சிரமத்தில் இருக்கும்  போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

👩🏻பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

💈இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமில்லை பல  சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் கண்கூடாக காணலாம்.

👆🏻இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை  குறை சொல்பவர்கள்
என்பதை விளங்கி கொள்ளலாம்.


💈நாம் சிந்திக்க வேண்டும் யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும், யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும், வழங்குவது இயற்க்கை நியதி தானே❓

🌀 அதை எந்த விதத்தில் குறை கூற முடியும்❓

✨என்பதை குறை கூறுபவர்கள்  சிந்திக்க வேண்டும்❓

💈மேலும் ஒரு ஆண் சொத்துரிமை  மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது இஸ்லாம் பொறுப்புகள் தந்து உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


💈ஆனால் ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து இஸ்லாம் அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

💈காரணம் இஸ்லாம் பெண்களுக்கு எந்த செலவினங்களையும் கடமை ஆக்கவில்லை.

👩🏻பெண் தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


✨எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பதை நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும்.!


🔑இன்ஷாஅல்லாஹ் அடுத்த குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய்ந்து தெளிவு பெறுவோம்🔑


 💠தொடரும்💠


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  16 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment