Sunday 13 March 2016

🌺திருமணம் ஓர் அலசல்🌺 🍀பகுதி-8⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺

            🍀பகுதி-8⃣

✳திருமணத்தில் நடைபெறும் மார்க்க விதி மீறல்கள்.

✳திருமணம் செய்யும் நாள் குறிக்க ஜோதிடரிடம் செல்லுதல்.

✳அல்லாஹ் படைத்த அனைத்து நாட்களும் நல்ல நாள் தான்.

📓ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான்.
காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான்.
நான் தான் காலமாக இருக்கிறேன்.
என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826, 6181, 7491

✳ஆனால் நம்மில் சிலர் எல்லா செயல்களுக்கும் நல்ல நாள் பார்க்கும் (மாற்றாரின்)பழக்கம் வந்து விட்டது.

✳இது மிக பெரிய பாவமும் அல்லாஹ் எழுதிய விதியை நம்பாததுமேயாகும்.

🔺உண்மையில்  இது ஈமான் அற்றவர்களின் செயலாகும்.

✳திருமண பத்திரிகை வைக்கிறோம் என்ற பெயரில் பல பர்ளான தொழுகையை கூட தவறவிடுகிறார்கள் குறிப்பாக தொழுகையாளிகள்.

✳மேலும் நிக்காஹ் அன்று மண்டபத்திற்கு வருபவர்களுக்கு தொழுகைக்கு இடம் ஏற்பாடு செய்து  தருவதில்லை.

🔺அதை தவிர மற்ற அனைத்து ஏற்பாடுகளிலும் ஏந்த குறையும் இருக்காது.

✳திருமணம் என்ற ஒரு சுன்னத்தையாவது மார்க்கபடி செய்கிறோமா❓

🔺என்றால் பலரின் பதில் இல்லை என்று தான் வரும்.

🔻மஞ்சள் பூசுவது.

🔻ஆர்த்தி எடுப்பது.

🔻ஆட்டு தலை வைத்து திருஷ்டி கழிப்பது.

🔻மாலை அணிவது.

🔻முறைவாசல் செய்வது

🔻நகைகளை கடனாக வாங்கி அணிவது.

🚫இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்


✳இதுமாதிரி செயல்களையா  மார்க்கம் கற்று  தருகிறது❓

✳நபிகளாரின் வழியை பின்பற்றினால் மட்டுமே இவ்வுலகில் குடும்பத்தில் நிம்மதியும் மறுமையில்    சுவனமும் கிடைக்கும்.

✳யாரையோ திருப்தி படுத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுபவனுக்கு இவ்வுலகிலேயே அவர்களின் அதிருப்தியும் மறுமையில் அல்லாஹ்வின் வெறுப்பை மட்டுமே பெற முடியும்.

🚫என்னுடைய மூதாதையர் சடங்குகளை எப்படி விடுவது என்று சொல்லக்கூடியவர்களே...

📓யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.

நூல்: அபூதாவூத் 3512

🔻அன்பார்ந்தவர்களே சற்று சிந்தித்து பாருங்கள்

🚫நம்முடைய தூதர் ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்று காட்டி தந்தவர்.அதை பின்பற்றினால் மட்டுமே மறுமையில் அவர்களின் சிபாரிசும் ஷஹித் உடைய அந்தஸ்த்தும் கிடைக்கும்.

 🍀நம்முடைய தூதர் காட்டி தந்த வழியை யார் யாருலாமோ பின்பற்றுகிறார்கள்

🚫ஆனால் முஸ்லிம் என்று சொல்லி கொண்டு இருக்கும் நாம் நம் தூதர் காட்டி தந்த வழியை பற்றி தெரிந்து கொள்ள கூட நேரம் ஒதுக்காமல் இருக்கிறோம் .

🍀அல்லாஹ் பாதுகாத்தவரை தவிர

❇அன்பார்ந்தவர்களே அல்லாஹ் நம்மை முஸ்லிமாக பிறக்க வைத்ததே மாபெரும் கிருபை இதை தவறாக பயன்படுத்த வேண்டாம் சகோதரர்களே


     🍀......தொடரும்.....🍀

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 19 JAN 2016

No comments:

Post a Comment