Monday 4 November 2019

ஒற்றுமையே வெற்றி

ஒற்றுமையே வெற்றி

சமூகத்தின் ஒற்றுமை ஒற்றுமையில் உள்ளது வேற்றுமையில் இல்லை

சமூகம் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விளையாடுகிறான்.

நாம் இந்த ஒற்றுமை என்ற விஷயத்தில் சிறிய விரிசல் கண்டாலும் ஷைத்தான் நம்மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்த முற்படுகிறான்.

இறைவனின்  அடிமைகள் நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் நம்மை  எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான்.

மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத்
தம் சிந்தையில் ஆழப் பதிக்கத் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

நமது சிந்தனையின் இலக்கு எதுவாக  இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும், வெகுமதியும் அமைகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்பு சமூகமே

சமூகம் பிளந்து கிடக்கும் காரணத்தை உற்று நோக்கினால் ஒற்றுமை குலைய காரணம்
உலக இலாப-நஷ்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும்.

நாம் சிந்திக்க வேண்டும் நமது வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது வேற்றுமையில் கிடையாது.

பலம் நிறைந்த சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால் அதுவே பகையாக மாறிவிடகூடாது

நமது சமூகம் அன்று பத்ர் என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் வெற்றி பெற்றபோது இறைவன் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் பலனையும் ஒருங்கே புகட்டினான் .

அங்கே அவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு ஒற்றுமையும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுகிறான்

அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள்.உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

நமது  சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சகோதரர்களே நாம் சிந்திக்க வேண்டும் முஸ்லிம்களின் எதிரிகள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் சீர் குலைத்திட வேண்டும் என்பதைத்தான்.

முஸ்லீம்களுக்குள் பிளவை உண்டாக்க வேண்டும் என்பது தான்.

அன்பு சொந்தங்களே❗❕

நாம் எந்த நிலையிலும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாக கூடாது என்பதை மனதில் ஆழமாக பதியவேண்டும்.

ஆக இஸ்லாமிய சொந்தங்களே

ஒற்றுமையே வெற்றி தரும்👍என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்து வல்ல ரஹ்மானுக்கு கட்டுப்பட்டு நண் மக்களாக ஒற்றுமையாக வாழகூடிய பாக்கியத்தை இறைவன் நமக்கு வழங்குவானாக!!!

✴✴✴✴✴✴✴✴✴✴

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

இஸ்லாம் என்றால் என்ன


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்பதின் பொருள் இறைவனுக்கு கட்டுப்படுதல்.கீழ்படிதல்,
என்பதாகும்

அதன் இன்னொரு பொருள் அமைதி,சாந்தி
என்பதாகும்.

அதாவது இந்த உலகத்தை  படைத்து பராமரித்து,கண்கானித்துவரும் இறைவன் கூறும் கட்டளை&விலக்கல்களுக்குக் கீழ்படிந்து நடப்பது

மேலும் தனிநபர் வாழ்விலும் அதன்மூலம் சமூக வாழ்விலும் கட்டுப்பாடும்(discipline) நல்லொழுக்கமும் உண்டாகிறது.

அதன்மூலம் ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம்.

அவ்வாறு பேணுதலோடு வாழ்வோருக்கு இம்மையிலும் மறுமையிலும் அமைதி தொடர்கிறது என்பதில் துளிஅளவும் சந்தேகம் இல்லை

அதாவது நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;  எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்

(அல்குர்ஆன் : 3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

(அல்குர்ஆன் : 3:85)



ⓂAKKAL ⓂEDIA

சத்திய மார்கத்தை பேணுவோம்

சத்திய மார்க்கத்தை      பேணுவோம்

த்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும்.

எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான்.

மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல பிழையான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர். சிலர் சத்தியத்தை மறைக்கக் கூடியவர்களாகவும், இன்னும் சிலர் சத்தியத்துடன் அசத்தியத்தை கலக்கக் கூடியவர்களாகவும், மேலும் அசத்தியத்தைக் கொண்டு மாற்று விளக்கம் கூறக்கூடியவர்களாகவும், பல விளக்கங்களுக்குத் தோதுவாக அமையக்கூடிய ஆதார வரிகளை தேடிப் பின்பற்றக் கூடியவர்களாகவும், ஆதாரங்களை அதற்குரிய இடத்தில் பிரயோகிக்காமல் முறைதவறிய அமைப்பில் பயன்படுத்தக்கூடியவர்களாகவும், அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுடைய வாசனங்களுடன் விளையாடக்கூடியவர்களாகவும், வழிதவறிய விடங்களுக்கு நற்பெயர்களை சூட்டி அலங்கரித்துக் காட்டக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே, சத்தியத்தைப் பற்றியும், அதனை விட்டும் திசைதிருப்பக்கூடிய அம்சங்களைப் பற்றியும் பேசுவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், இவ்விடயத்தில் ஒருவர் ஈடேற்றத்தைக் காண்பது மிகச் சிரமமாகும்.

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.

1.அநியாயம் செய்தல்
நாம் அநியாயம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் அதன் காரணமாக அல்லாஹ் எங்களை விட்டும் சத்தியத்தை தூரப்படுத்துவான். இது குறித்து சுமார் 10க்கு மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் வெளிப்படையாகக் கூறியுள்ளான். எடுத்துக்காட்டாக:

மேலும் அல்லாஹ் அநியாயம் புரியக்கூடிய கூட்டத்தாருக்கு நேர்வழி காட்டமாட்டான்.

(அல்மாயிதா: 258)

மேலும், இதே கருத்தில் இடம்பெறக்கூடிய சில வசனங்களைப் பார்க்க வேண்டும் என்றால் பின்வரும் வசனங்களை வாசித்துப் பாருங்கள்!

ஆலு இம்றான்: 86, மாயிதா: 51, அன்ஆம்: 144, தவ்பா: 19, 109, கஸஸ்: 50, அஹ்காப்: 10, ஜுமுஆ: 5, ஸப்: 7

எனவே, அநியாயத்தை விட்டும் விலகியிருக்கும் வரை எம்மை சத்தியம் நெருங்கமாட்டாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2. அறியாமை

இப்பண்பு அனைத்து வகையான பாவங்களுக்கும் அடிப்டையாகக் காணப்படுகின்றது. யார் ஒரு விடயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லையோ அவர் அது தொடர்பான அறிவுக்கு எதிரியாக மாறிவிடுவார் என்பது எதார்த்தமானது. அதன் அடிப்படையிலேயே எம் சமூகத்திற்கு மத்தியில் பல சத்தியத்திற்குரிய அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வடிப்படையைப் பற்றி அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்.

குர்ஆனாகிய அதன் அறிவைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியாததைப் பொய்யாக்குகின்றனர்

(யூனுஸ்: 39)

ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களை விட்டும் நுபுவ்வத்துடைய ஒளி துண்டிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் பித்னாவுடைய இருளில் வீழ்ந்து விடுவார்கள். மேலும், அவர்களுக்கு மத்தியில் பித்அத்கள், பாவமான காரியங்கள் மற்றும் தீங்கான அம்சங்கள் நிகழ்ந்துவிடும்.

(மஜ்மூஉல் பதாவா: 17/310)

இதற்கான பரிகாரம்: மார்க்கத்தை நல்ல முறையில் கற்று எம் மத்தியில் காணப்படும் அறியாமையை போக்குவதாகும்.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அமல்களில் மிகச் சிறந்தது எதுவெனக் கேட்கப்பட்ட போது: “அறிவு” என்றார்கள். அப்போது கேள்வி கேட்ட அம்மனிதர், அதே கேள்வியை மீண்டும் கேட்க, அந்நபித்தோழரும் அதே பதிலை அளித்துவிட்டு அம்மனிதரை நோக்கி, “உனக்கு நாசம் உண்டாகட்டும்! நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றிய அறிவுடன் குறைவான அறிவும், கூடுதலான அறிவும் உனக்குப் பிரயோசனமளிக்கும். மேலும், அல்லாஹ்வைப் பற்றிய அறிவீனத்துடன் குறைவான அறிவும், கூடுதலான அறிவும் உனக்கு பிரயோசனமளிக்க மாட்டாது” என்றார்கள்
ஸுனனுல் பைஹகி)

3. கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல்.

சத்தியம் எதுவென்று தேடிப்பார்க்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை எச்சரித்து அல்லாஹுத்தஆலா பல அல்குர்ஆன் வசனங்களை இறக்கி வைத்துள்ளான். எடுத்துக்காட்டாக,

மேலும், அவ்வாறே உமக்கு முன் எந்தவொரு கிராமத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோரில் ஒருவரை அனுப்பிய போதும் அவர்களிலுள்ள வசதி படைத்தவர்கள் அவரை நோக்கி: நிச்சயமாக எங்களுடைய மூதாதையினரை ஒரு வழியில் இருக்க நாங்கள் அடைந்து கொண்டோம். மேலும், நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்பவர்களாக இருக்கின்றோம் என்று பதிலளிப்பார்கள்”.

(அஸ் ஸுஹ்ருப்: 23)

எனவே, இத்தகைய தடைக்கல்லுக்கு சிறந்த சிகிச்சையாக, நாங்கள் எப்பொழுதும் மார்க்க விடயங்களை ஆதாரத்தோடு எடுக்கக்கூடியவர்களாக மாற வேண்டும்.

4. மன  இச்சையைப்   பின்பற்றுதலும்  உள்ளத்தின் தீர்ப்பை அமல் படுத்துவதும்.

மன இச்சையைப் பின்பற்றுவது தொடர்பாகப் பல தடைகள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா நெடுகில் பதிவாகியுள்ளன. அந்தவிதத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்

“நீர் மன இச்சையைப் பின்பற்றாதீர்! (அவ்வாறு பின்பற்றுவீரென்றால் அதன் காரணமாக) அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் அது உன்னை வழிதவறச் செய்து விடும்”
(ஸாத்: 26)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்:

“ஜாஹிலிய்யாக் காலத்தில் ஒருவர் வெண்ணிறக் கல்லை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வணங்கிவருவார். அதனை விட மிக அழகானதொரு கல்லைக் காணும் போது இரண்டாவது கண்ட கல்லை வணங்க ஆரம்பிப்பார். முதலாவதை விட்டுவிடுவார்”.
(இப்னு கஸீர்: 6/113)

இது தான் மன இச்சையைப் பின்பற்றுதலின் எதார்த்த நிலையாகும்.

மேலும், இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

“மன இச்சையைப் பின்பற்றுபவரை அவருடைய மன இச்சை குருடனாகவும் செவிடனாகவும் மாற்றிவிடும்”.

(மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா: 5/176)

Tuesday 29 October 2019

உலக சிக்கன தினம்! இஸ்லாமிய பார்வையில்

ஒரு குறிப்பிட்ட தினத்தை தேர்வு செய்து  தந்தையர் தினம் அன்னையர் தினம் மகளிர் தினம் நண்பர்கள் தினம் என பல தினங்கள் கொண்டாடப்படுகிறது
அந்த வரிசையில் தான் இன்று உலக சிக்கன தினம்


இஸ்லாம் இது போன்ற விடயங்களை எவ்வாறு பார்க்கிறது என்பதை நாம் ஆராய்வோம் ஒரு குறிப்பிட்ட தினத்தை குறிப்பிட்டு அன்று மட்டும் அந்த விடயங்களை அனுசரிப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது


தினமும் நமக்கு அன்னையர் தினம் தான் தாயை மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிறது தினமும் நமக்கு தந்தையர் தினம் தான் தந்தையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது அது போல் ஒவ்வொரு நாளும் எந்தெந்த தினங்கள் அனுசரிக்கப்படுகின்றனவோ அவை அனைத்தையும் நாம் தினமும் கடைபிடிக்க வேண்டியது அவசியமானது ஆகும்


இன்று உலக சிக்கன தினமாம்

சரி இஸ்லாம் சிக்கனத்தை பற்றி எவ்வாறு கூறுகிறது என்பதை நாம் ஆராய்வோம் உதாரணத்திற்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டோமானால் கால் வயிறு சாப்பிட்டு அரை வயிறு எடுத்து வைப்பது சிக்கனம் அல்ல வயிறார சாப்பிட்டு வீண்விரயம் செய்யாமல் இருப்பதே சிக்கனமாகவும்

மேலும்......

சிக்கனம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாக, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.

தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும். “மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.


அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)


தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணாகிறது.


உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டுகிறது.


உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.


இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்துகள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.


அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.


தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக்கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங்களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.



தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம்,

அதேபோல் மின் சிக்கனம் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு, 200 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் சில மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் உள்ளது.

மின்சாரம் என்பது வற்றாத வளம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்; நாட்டுக்கு பெரிய அளவில் செலவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில், மின் உற்பத்தியும் ஒன்று.

'அவசியத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறோம்' என்று கூறும் நம்மில் பலரின் அலட்சியத்தால் மின்சாரம் வீணாக்கப்பட்டு பற்றாக்குறை ஏற்படுகிறது.ஒவ்வொரு மின் நுகர்வோரும் குறைந்தது, 40 வாட்ஸ் மின்நுகர்வைக் குறைத்தாலே 1,000 மெகாவாட்ஸ் பற்றாக்குறையைச் சரிசெய்யலாம் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் ஆளே இல்லாத அறையில் மின் விசிறி சுற்றிக்கொண்டிருக்கும், மின் விளக்குகள் எரியும். ஆனால், இதை நாம் கண்டுகொள்வதில்லை. மின்வெட்டு சமயங்களில் அரசுகளை திட்டி தீர்க்கும் நாம்; பயன்பாட்டில் பொறுப்பின்றி இருக்கிறோம்.இயற்கை வளங்கள், செயற்கை வளங்கள் எதுவாயினும் அதை சேமிக்கும் வழக்கம் நமக்கு கட்டாயம் வேண்டும்.




நமது முன்னோர்கள் இப்பழக்கத்தை சரியாக செய்தனர். அவர்கள் பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இருக்கும்போதே சேமித்துக்கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் ஏற்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும். இன்று வரை சிக்கனம் என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது சேமிக்க தொடங்குங்கள். மகிழ்ச்சியாக வாழ்வோம்!. இறையருளைப்பெறுவோம்!

Thursday 17 October 2019

பட்டாசு வெடிக்கபோரீங்களா

பட்டாசு வெடிக்க போறீங்களா
ஒரு நிமிடம் யோசிங்க


அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே
நம்மவர்களில் சிலர் மாற்றார்களை போல்  தீபாவளி பண்டிகை ,நிக்காஹ் போன்ற சில விசேஷங்களின் போது   பட்டாசுகளை வெடித்து
தங்கள் ஹலாலான பணத்தை கூட சில நேரம் வீண் வழியில் செலவு செய்து விடுகின்றனர்.


கேட்டால் அந்த காரணத்தை பிள்ளைகள் மீது போடுகிறோம்.


பிள்ளைகளை திருத்துவது நம் கடமை இல்லையா


பிள்ளைகளிடம் அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவினால் இறைவன் நமக்கு உதவுவான் என்றும் வீண்
விரயம் செய்யகூடாது என்றும் நாம் தானே சொல்லி தர வேண்டும்.
வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங் கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது.


வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 6:141)


(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
நூல் : அபூதாவுத் (3512)


மேலும் இறைவன்  நமக்கு அளித்த செல்வத்தை எப்படி  எந்த வழியில் செலவு  செய்தாய்  என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வரை நம் கால்கள் அவ்விடம்  விட்டு நகராது.


நாம் பட்டாசுகளை வெடிப்பதால் என்ன பயன் துளியும் பயனில்லை.


மாறாக யாருக்கும் பயனில்லாமல் நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு கரியாகும்.


அடுத்து நம் சூற்றுசூழலுக்கு நச்சு காற்று உண்டாகும்.நச்சு காற்றினால் அலர்ஜி மற்றும் சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும்.
பயங்கரமான வெடிகளை நோயாளிகளை அதிர்ச்சி அடைய வைக்கும்.


ராக்கெட் வெடிகள் போன்றவை குடிசைகளை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.


இவைகளை இஸ்லாம் அனுமதிபதில்லை.


அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல் முஸ்லிம் 73.


நல் வழியில் செலவு  செய்தால் மட்டுமே ஈருலகிலும் வெற்றி பெறாலாம். இல்லையேல் அதற்குரிய தண்டனை  கிடைக்கும்.

எனவே தானதர்மங்களை செய்து 
அல்லாஹ்வின் கோபத்தில் இருந்து தப்பிப்போம்.


(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 2:268)


ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    
(அல்குர்ஆன் : 7:31)


உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
(குர்ஆன் 17:26, 27)


இதன் மூலம் சைத்தானிற்க்கு மறுமையில் என்ன நிலையோ அதை நிலையே அவனின் கூட்டாளி க்கும் என்பது தெளிவாகிறது.


மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 13:21)


அன்பார்ந்த சகோதர
சகோதரிகளே சிந்தியுங்கள் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள் மாற்று மதத்தில் கூட இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் நம் கஷ்டத்தில் அல்லாஹ் உதவி செய்வான்.


இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக.ஆமீன்

Tuesday 15 October 2019

தாய் பாலின் அவசியம்! தாய்மார்களே அவசியம் படியுங்கள்...

பெற்றோர்களே!!! தாயாமாற்களே!!! உணரவேண்டாமா???


குர்ஆனில் சொல்லப்பட்ட அனைத்து அறிவிப்புகளும்  சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்கள் மூலமாக  உண்மை படுத்தப்பட்டு வருகிறது

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக ஏற்று அதன்படி வாழ்ந்து வரும் நமக்கு நம்பிக்கை இருந்தும் செயல்படுத்துவதில் பொறுப்பற்றவர்களாக இருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விஷயம் தான்.


குழந்தை பெற்ற தாய் குழந்தைக்கு இரண்டாண்டுகள் கட்டாயம் முழுமையாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியும் அதை  பெரும்பாலான பெண்கள் பின்பற்றுவதில்லை.

 அவர்களாகவே சில காரணங்களை முடிவு செய்துகொண்டுகுழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறார்கள்

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தாய்பால் கொடுக்க சொன்னாலும் குழந்தைக்குப் போதுமான பால் இல்லை அதனால் புட்டிப்பால்  கொடுப்பதாக சொல்லி சமாளித்து விடுகிறார்கள்


இன்னும் சிலர் தாய்ப்பால் கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும் என்றும்
சிலர் இரத்தத்தை முரித்துத்தான் பால் சுரக்கிறது குழந்தைக்கு பால் கொடுத்தால் ரத்தம் குறைந்து விடும் என்ற தவறான முடிவிலும் தாய்ப்பால் நீண்ட நாள் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று பயந்தும் அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு சில மாதங்கள் மட்டும் கொடுத்து
நிறுத்தி விடுகிறார்கள்



பெற்றோர்களும் கட்டாயப்படுத்துவதில்லை அதன் விளைவு மருத்துவர்கள் சொல்கிறார்கள்


பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள்


மேலும் இந்தியாவில் மூன்று நகரங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய்
அதிகமாக இருக்கிறது என்று அதில் சென்னையை முதலில் குறிப்பிடுகிறார்கள்

மார்பகபுற்றுநோய் வருவதற்கு இன்னும்சிலகாரணங்களையும் சொல்கிறார்கள்

  • மதுப்பழக்கம்


  • உடல்பருமன்


  • அதிககொழுப்புள்ளஉணவுகள்


  • உடற்பயிற்சி இல்லாதது



போன்ற சில காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள்

அல்லாஹ் சொன்னதை அவர்கள் மெய்ப்பிக்கிறார்கள் அல்லாஹ் சொல்லியிருக்கும் அனைத்திற்கும் பல காரணங்கள் இருக்கலாம்

இது எதிர்காலங்களில் மனித அறிவுக்கு தெரிய வரலாம் அல்லது தெரியாமலும் போகலாம்


ஆனால் அல்லாஹ் கூறிய வார்த்தைகள் அனைத்தும்  நமது நன்மைக்குத்தான் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அது தான் உண்மையும் கூட தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் இருக்கும் என்பது மட்டுமல்லாமல்


குழந்தையின் உடல் நலம் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்கால ஆரோக்கிய வாழ்வு
இவை அனைத்திற்குமே தாய்பால் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

அல்லாஹ் தாய்ப்பால் கொடுப்பதை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி சொல்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்

ஒரு பெண் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றாலும் அவர்களுடைய குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அதற்காக ஆகும் செலவுகளைஅந்தப் பெண்ணுக்கு குழந்தைகளுடைய தந்தையே கொடுக்க வேண்டும்
என்று மார்க்க சட்டம் சொல்கிறது

இதிலிருந்து தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை நம்மால் உணர முடிகிறது

அல்லாஹ் அனைவரையும் இந்த கொடிய நோயிலிருந்து
காத்தருள்வானாக!!!!