Tuesday 15 October 2019

தாய் பாலின் அவசியம்! தாய்மார்களே அவசியம் படியுங்கள்...

பெற்றோர்களே!!! தாயாமாற்களே!!! உணரவேண்டாமா???


குர்ஆனில் சொல்லப்பட்ட அனைத்து அறிவிப்புகளும்  சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்கள் மூலமாக  உண்மை படுத்தப்பட்டு வருகிறது

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக ஏற்று அதன்படி வாழ்ந்து வரும் நமக்கு நம்பிக்கை இருந்தும் செயல்படுத்துவதில் பொறுப்பற்றவர்களாக இருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விஷயம் தான்.


குழந்தை பெற்ற தாய் குழந்தைக்கு இரண்டாண்டுகள் கட்டாயம் முழுமையாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியும் அதை  பெரும்பாலான பெண்கள் பின்பற்றுவதில்லை.

 அவர்களாகவே சில காரணங்களை முடிவு செய்துகொண்டுகுழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறார்கள்

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தாய்பால் கொடுக்க சொன்னாலும் குழந்தைக்குப் போதுமான பால் இல்லை அதனால் புட்டிப்பால்  கொடுப்பதாக சொல்லி சமாளித்து விடுகிறார்கள்


இன்னும் சிலர் தாய்ப்பால் கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும் என்றும்
சிலர் இரத்தத்தை முரித்துத்தான் பால் சுரக்கிறது குழந்தைக்கு பால் கொடுத்தால் ரத்தம் குறைந்து விடும் என்ற தவறான முடிவிலும் தாய்ப்பால் நீண்ட நாள் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று பயந்தும் அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு சில மாதங்கள் மட்டும் கொடுத்து
நிறுத்தி விடுகிறார்கள்



பெற்றோர்களும் கட்டாயப்படுத்துவதில்லை அதன் விளைவு மருத்துவர்கள் சொல்கிறார்கள்


பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள்


மேலும் இந்தியாவில் மூன்று நகரங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய்
அதிகமாக இருக்கிறது என்று அதில் சென்னையை முதலில் குறிப்பிடுகிறார்கள்

மார்பகபுற்றுநோய் வருவதற்கு இன்னும்சிலகாரணங்களையும் சொல்கிறார்கள்

  • மதுப்பழக்கம்


  • உடல்பருமன்


  • அதிககொழுப்புள்ளஉணவுகள்


  • உடற்பயிற்சி இல்லாதது



போன்ற சில காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள்

அல்லாஹ் சொன்னதை அவர்கள் மெய்ப்பிக்கிறார்கள் அல்லாஹ் சொல்லியிருக்கும் அனைத்திற்கும் பல காரணங்கள் இருக்கலாம்

இது எதிர்காலங்களில் மனித அறிவுக்கு தெரிய வரலாம் அல்லது தெரியாமலும் போகலாம்


ஆனால் அல்லாஹ் கூறிய வார்த்தைகள் அனைத்தும்  நமது நன்மைக்குத்தான் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அது தான் உண்மையும் கூட தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் இருக்கும் என்பது மட்டுமல்லாமல்


குழந்தையின் உடல் நலம் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்கால ஆரோக்கிய வாழ்வு
இவை அனைத்திற்குமே தாய்பால் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

அல்லாஹ் தாய்ப்பால் கொடுப்பதை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி சொல்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்

ஒரு பெண் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றாலும் அவர்களுடைய குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அதற்காக ஆகும் செலவுகளைஅந்தப் பெண்ணுக்கு குழந்தைகளுடைய தந்தையே கொடுக்க வேண்டும்
என்று மார்க்க சட்டம் சொல்கிறது

இதிலிருந்து தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை நம்மால் உணர முடிகிறது

அல்லாஹ் அனைவரையும் இந்த கொடிய நோயிலிருந்து
காத்தருள்வானாக!!!!

No comments:

Post a Comment