Saturday 12 October 2019

முஃமீன்கள் என்றால் யார்?

சொர்க்கத்தை அடைய போகும் அந்த முஃமின்கள் யார் ?

📖(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். *(உண்மையாகவே) நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் உயர்ந்தவர்கள்.
(அல்குர்ஆன் : 3:139)

💯முதலில் உண்மையான முஃமினாக மாறாத வரை உயர்வு இருக்காது.

📖 முஃமின்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.
(அல்குர்ஆன் : 23:1)

📖 அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:2)

📖 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டும் விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 23:3)

📖 ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.*
(அல்குர்ஆன் : 23:4)

📖 மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத்தலங்களைக் பாதுகாத்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 23:5)

📖 ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 23:6)

📖 ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 23:7)

📖 இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:8)

📖 மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் : 23:9)

📖 உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (மேலும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)

📖 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நல்ல முறையில் செலவு செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 8:3)

📖 இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்
(அல்குர்ஆன் : 8:4)

👆🏾மேற்கூறப்பட்ட தன்மைகள் எதுவும் இல்லாது உயர்வு வேண்டும் வெற்றி வேண்டும் ஆட்சி வேண்டும்  என்றெல்லாம் கோஷம் போடுவதிலும் கூக்குரலிடுவதிலும்,போராடுவதிலும் எந்த பலனும் துளியளவும் இல்லை
.
😱 நாம் முஃமின்களாக வாழவிட்டால்  அல்லாஹ் நமக்கு உயர்வை தரவ போவதில்லை

💯 சஹாபாக்கள் முஃமின்களாக வாழ்ந்ததால் தான் இவ்வுலகிலே ஆட்சி,அதிகாரம்,வெற்றி போன்றவற்றை அல்லாஹ் கொடுத்தான்.

🌐 மேலும் சஹாபாக்கள் முஃமீன்களாக இருந்ததால் தான் உலகில் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவியது.

👉🏻எனவே முஃமீன்களாக வாழ்ந்தால் தான் ஈருலகிலும் வெற்றி என்பதை உணர வேண்டும்.நம்மை நாமே   கேட்டு சீர்திருத்தி கொள்ள வேண்டியவைகள்❓

🤔 நம் சமுதாயம் உள்ளச்தோடு பேணுதலாக  தொழகையை நிறைவேற்றுகிறதா❓

🤔 நம் சமுதாயம் முழுமையாக ஜகாத் கொடுக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் கேடுகெட்ட இசை,ஆபாசம், சினிமாவில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் போதை,மதுவில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் வீணான காரியங்களில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் வட்டியில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் பொய்,புறம் பேசுவதில் இருந்து விலகி இருக்கிறதா❓

🤔 நம் சமுதாயம் முழுமையாக ஹிஜாபை பேணிப் பாதுகாக்கிறதா❓

🤔 நம் சமுதாயம்   அமானிதத்தை,வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுகிறதா❓

🤔 அல்லாஹ்வை நினைத்து  நமது  உள்ளம் பயப்படுகிறதா❓

📖 மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; *எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;* இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 13:11)

👍🏼 முதலில் உண்மையான முஃமினாக வாழ்வோம் பிறகு உயர்வு நம்மை தேடி தானாக வரும்

🤲🏻 இதனை நாமும் படித்து அறிந்து கொண்டு பிறருக்கும் பகிர்ந்து நன்மையை அடைவோமாக! ஆமீன்.

No comments:

Post a Comment