Saturday 29 September 2018

பேய் பிசாசு பொய்யே ➖தொடர் 1

🤑 பேய் பிசாசு பொய்யே ➖தொடர் 1/6

*ⓂAKKAL ⓂEDIA*

1⃣ *இறந்தவர்கள் ஆவி உலகிற்கு திரும்ப வராது*

💯 *மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.*

🤔 *மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.*

❓ *இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம்*

📖 *உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.*
திருக்குர்ஆன் 39:42

✍🏼பேய், பிசாசுகள்  கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கைவசத்தில் வைத்திருப்பதாக இவ்வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.

✍🏼 ஆவிகள் அனைத்தும் இறைவனது கைவசத்தில் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

😱 *பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.*

✍🏼நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

🤲🏻 *உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன். (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ மன்னித்து அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு’ என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.*
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரி   6320, 7393 முஸ்லிம் 5257

💯 *மனிதன் தூங்கும் போது தற்காலிகமாகவும், மரணத்தின் போது நிரந்தரமாகவும் மனித உயிர்களை அல்லாஹ் தன் கைவசத்தில் எடுத்துக் கொள்கிறான் என்று இந்த நபிமொழியும் தெளிவாக்க் கூறுகின்றது.*
திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது.

📖 முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
திருக்குர்ஆன் 23:99,100

💯 *அல்லாஹ் மரணத்திற்கு பிறகு எந்த ஆன்மாவையும் உலகிற்கு அனுப்ப மாட்டேன் என்று கூறி விட்டான்.ஏன்  நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்❓*

*...தொடரும்...*

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

Wednesday 26 September 2018

தாய் பால் ஏன் கொடுக்க வேண்டும்


*ⓂAKKAL ⓂEDIA*

*தாய் பால் ஏன் கொடுக்க வேண்டும்!!!*

🗣 அல்லாஹ் கூறுகிறான்

*தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.*

அல்குர்ஆன் (2 : 233)

☝🏻 அல்லாஹ் தனது திருமறையில் கட்டளையிட்டிருக்கின்றான்
குழந்தை பெற்ற பெண்கள்
இரன்டு  ஆண்டுகள்
தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று
*அறிந்தும்  அதர்கு மாறு செய்கிறார்கள் நமது பெண்கள்*

👆இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.

🗣 *லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் கூறியுள்ளார்.*

🗣 தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளுக்கு
நோய்  எதிர்ப்புசக்தி
வீரியமாக இருக்கும்
*அவர்களை இன்ஷா அல்லாஹ் எந்த வியாதிகளும் எளிதில் தாக்கிவிட முடியாது*
உடல் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள் என்பது மற்றொரு
ஆராச்சி முடிவு 

👆 ஆராய்ச்சி செய்தது சில தான் இதர்க்கு மேலும் அல்லாஹ்
மறைமுகமாக  என்னென்ன தன்மைகளை வைத்துள்ளான் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

🍼 *வேறு  (மாற்று) பால் குடித்து ஹராமான மிருக கொழுப்பு கலந்த உணவு வகைகளை  உண்டு வளர்வதால் குழைந்தைகளின் இயற்கை குணம் மாறலாம்.*

🗣 சில நிமிட இன்பத்திர்காக
நடப்பது  என்னவென்று அறியாத பச்சிளம் குழந்தையை
பலபேர் சேர்த்து  வன்புணர்வு  கொள்கிறார்கள்!!!!

🗣 பெற்ற மகளையே கர்ப்பமாக்குகிற கேவலமான தந்தை

🗣 பெற்ற குழந்தைகளை
கொலை செய்யும் கேவலமான தாய்   

🗣 *இவைகள் நிகழ எந்த வயதில்  என்ன  உணவு  தேவை என்று அல்லாஹ்  முடிவு செய்துள்ளதை விட்டு மாற்றம் செய்ததன் விழைவு*

🗣மனிதன் மனித தன்மையில் இருந்து மாறி விட்டதையே இவைகள் காட்டுகிறது

🌳 முன்பெல்லாம் தாய்மார்கள்
நிரைய பிள்ளைகளை பெற்று
இரன்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்து
வீட்டு வேலைகள் அனைத்தும் அவர்களே செய்து
இன்னும் திடகாத்திரமாக
இருக்கிறார்கள்.

🗣 ஆனால் இப்ப  அவர்கள்
மகளுக்கும் பேத்திக்கும்
அறிவுரை சொல்கிறார்கள்
3 , 4 , மாதம் தாய்ப்பால் கொடுத்தால் போதும்
அதற்க்கு மேல் கொடுத்தால் உனது உடம்பு வலுவிழந்து விடும்  என்று

👆 இதென்ன காலம் ஏர்ப்படுத்திய மாற்றமா???

🗣 *அல்லது இறைவனின் வார்த்தைகளில் நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா?*

🗣 *தாய்மார்களே இறைவனின் வார்த்தைகளை நீங்கள் பின்பற்றுவதால் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நஷ்டம் ஏற்படாது.*

🌳 இன்ஷா அல்லாஹ்
இளம் பெண்களுக்கு
கவுன்சிலிங் கொடுத்து
இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கொடுக்க   வேண்டுமென அறிவுரை சொல்லுங்கள்.

*இறைவனின் வார்த்தைகளை நாம் பின்பற்றுவதில் அணு அளவுக்கும் தோல்வி தராது அல்லாஹ் போதுமானவன்.*

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

😱 *சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்* 😱

*ⓂAKKAL ⓂEDIA*

💯 *நல்லவர்கள் எப்படி எங்கும் உள்ளார்களோ அதே போல் தீயவர்கள் (முன் பின் அறிமுகம் இல்லாதோரை அறிமுகமாக்கி சீரழிக்கும் கயவர்கள்) எங்கும் உள்ளார்கள்.*

💯 *அறிமுகம் இல்லாதோர் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்பது குருட்டு நம்பிக்கையே பலரின் வாழ்க்கைகளை பாழாக்கி உள்ளது.*

👉🏼📖 *“எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷைத்தான் வந்துவிடுகிறான்.”*

👉🏼📲 _பேஸ்புக்கை,IMO வை எடுத்துக் கொண்டால், அதிலுள்ள சாட்டிங் வசதியினைப் பயன்படுத்தி ஆண் பெண் இருவரும் தனிமையில் உரையாட முடியும்_.

👉🏼👫 _இவ்வாறு சாட்டிங் செய்யும் போதுதான் அவர்களுக்குள் தவறான உறவுகள் உருவாகின்றன_.

👉🏼🗿 *இறுதியில் அவை சமுதாய சீர்கேடுகளுக்கு வழியமைக்கின்றன*.

👉🏼💃🏻 _*அதோடு இன்றைய கலாச்சார சீர்கேட்டின் உச்சகட்டமாக பெண்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போதல்.*_

👉🏼📰 *இன்றைய ஆய்வுகளின் படி, அந்நிய ஆடவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தங்களின் கற்பை இழந்து, நடுவீதிகளில் நிற்கும் பெண்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தினந்தோறும் நாம் படித்துவருகின்றோம்*

👉🏼💻 *இதில் அதிகமானவர்கள் பேஸ்புக் மூலமாகவே ஏமாற்றப்படுகிறார்கள்.  என்பது தெரியுமா உங்களுக்கு* ⁉

✍🏼 *பலர் தமது மானம் போகிடும் என்றே பிரச்சனைகளை வெளியில் சொல்வதில்லை*

👆🏼இவ்வாறான சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டே தான்  இருக்கின்றன.

♻தனது பெற்றோருக்குத் தெரியாமல்,

♻கணவனுக்குத் தெரியாமல்,

🔰 *அந்நிய ஆடவனுடன் வெளியேறி அவனிடம் தன் பணம், கற்பு  போன்றவற்றை பறிகொடுக்கிறாள்.*

👉🏼🏃🏼அந்த ஆடவனோ *தனது தேவை முடிந்ததும்* எங்காவது ஒரு இடத்தில்  *காணாமல் போய்விடுகிறான்.*

👉🏼💃🏻அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய இப்பெண்ணோ,

👉🏼🙍🏻மீண்டும் வீட்டிற்கு வர முடியாமல் அன்றாடம் உணவுக்கே திண்டாடுகின்ற நிலைமையில் தனது வாழ்வாதாரத்தை இழந்து அவல நிலையுடன்  காணப்படுகின்றாள்.

👉🏼🎛 *ஆண்கள் பாவத்தில் ஈடுபடுவதற்குப் பெண்களும், பெண்கள் பாவம் செய்வதற்கு ஆண்களும் உதவிசெய்கின்ற நடைமுறைக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம் அதிகமாக உதவுகின்றது*

⌨ஒரு பெண் அல்லது ஒரு ஆண் சாட்டிங் செய்யும்போது,

👉🏼🔮 *நாம் மார்க்க விசயங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோம் அல்லது சமூகத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவோம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்*.

⚠ அவ்வாறு கூறி தன்னையொரு நல்லவர் என காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.

🤑 *அதற்காக பெண்களிடம் நான் உங்களின் சகோதரனைப் போன்றவன் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.*

⚠ *ஆனால் பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது*.

💯 *இஸ்லாத்தைப்ப பொறுத்தவரைக்கும் அது, உடன்பிறப்புக்களை மாத்திரமே சகோதரர்களாக பார்க்கிறது.*

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

*ஒரு அந்நிய ஆண், ஒரு அந்நிய பெண்ணுக்கு எந்த வழியிலும் சகோதரனாக முடியாது*

👉🏼❌ _*இது போன்ற கருத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.*_

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

Saturday 22 September 2018

அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா பாகம்_2

🧠 *அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா பாகம்2⃣❓*🧠

*ⓂAKKAL ⓂEDIA*

🗣 மூன்று தன்மைகள் அமையப் பெறாத எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார் அவை👇🏻

1⃣ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.
2⃣இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3⃣மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது.
நூல்: புகாரி (6041)

💗எல்லாருடைய நேசத்தையும் விட அல்லாஹ்வையே நாம் அதிகம் நேசிக்க வேண்டும் என்ற விஷயம் மூன்றாவதாகக் கூறப்பட்டாலும் நன்கு கவனித்துப் பார்க்கும் போது முதலிரண்டு விஷயங்களும் அல்லாஹ்வை நேசிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் தான் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

🤲🏻 அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

🗣 *(இறைவா) உன்னை நேசிப்பதையும் உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
நூல்: திர்மிதி (3159)

🗣 *சிலர் அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய அளவுகடந்த பாசத்தை அடியார்கள்,படைப்பினங்கள் அவ்வலியாக்கள் மேல் வைத்து விட்ட காரணத்தினால் தான் இணை வைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.*

🗣 *நமது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதற்கு என்று ஒரு தனி இடத்தை உள்ளத்தில் ஒதுக்க வேண்டும்.*

🗣 *ஆனால் அல்லாஹ்விற்குக் கொடுக்க வேண்டிய அந்தஸ்தை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் கொடுத்து விடக் கூடாது.*

🗣 *ஒருவன் அல்லாஹ்வை நேசிக்காமல் நபி (ஸல்) அவர்களை மட்டும் நேசிப்பான் என்றால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் நபி (ஸல்) அவர்களை நேசித்தவனாகவும் ஆக முடியாது.*

💯 *நபி (ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர். வாழ்க்கை வழிகாட்டி என்பதற்காக அவர்களை நேசிக்கிறோம் இந்தத் தூதுப் பணியை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்காவிட்டால் நபி (ஸல்) அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.*

💗 *எனவே அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதரை நேசிக்கக்கூடிய நாம், அகில உலகை படைத்து கோடான கோடி படைப்புகளை படைத்து நம்மையும் நேர்வழியில்  செலுத்தும் அல்லாஹ்வை அதை விடவும் கடுமையாக நேசிக்க வேண்டும்.*

*அல்லாஹ்வை நேசிப்பது எப்படி👇🏼*

🗣 *நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!*
அல்குர்ஆன் (3:31)

💗 *நம் நேசத்திற்குரியவர்களுக்கு எதிராக யார் நடந்தாலும் அவரை நாம் விரும்ப மாட்டோம் நம்மால் நேசிக்கப்படுபவர்கள் யாரை வெறுக்கிறார்களோ அவர்களை நாமும் வெறுப்போம்.*

🗣 இந்த அடிப்படையில் அல்லாஹ்விற்கு மாற்றமான காரியங்களை *நமது தாயோ, தந்தையோ,சகோதர, சகோதரிகளோ, மனைவியோ, பிள்ளைகளோ யார் செய்தாலும் அவர்கள் அல்லாஹ்விற்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதால் அவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.*

🗣 *அப்படியானால் தாய், தந்தை, மற்ற உடன்பிறப்புகளை நேசிப்பதை விட அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை இதிலிருந்து உணர முடிகிறது.*

💗அல்லாஹ்வை நேசிப்பது என்பது
🔹அல்லாஹ் ஏவிய நல்லவைகளை செய்வதும்
🔹அல்லாஹ் தடுத்த பாவமான காரியங்களை விட்டுவிடுதலும்
🔹முஹம்மது நபியை முழுமையா பின்பற்றுதலுமே ஆகும்.இவைகளை அல்லாஹ்விற்காகவே செய்வதே நேசம் ஆகும்.

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

Thursday 20 September 2018

அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா _1

🧠 *அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா❓*🧠

*ⓂAKKAL ⓂEDIA*

👉🏻 *இந்த உலகத்தில் வாழும் போது ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது*

1⃣அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது

2⃣அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தைத் தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை.

3⃣அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை.

👆 *இந்த மூன்று நிலைகளில் நாம் இறந்து சொர்க்கத்தை அடைந்து விட்டால் அல்லாஹ்வை அஞ்சுவது மற்றும் அவனது சொர்க்கத்தை எதிர்பார்ப்பது ஆகிய இரு நிலைகள் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும்.*

🗣 சொர்க்கத்தை அடைந்த பின்னர்சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் பூர்த்தியாகி விடுகின்றது.

👉🏻 *ஆனால் இந்த உலகத்தில் வாழும் போதும் சரி மறு உலகத்தில் சொர்க்கத்திற்குச் சென்ற பிறகும் சரி எப்போதும் நம் உள்ளத்தை விட்டு நீங்காமல் என்றும் நிலைத்திருக்கக் கூடியது அல்லாஹ்வின் நேசம் மட்டும் தான்.*

🗣தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் ஏராளமானோர் அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

🗣 எனவே தான் *தன், தாய்,தந்தை, நண்பர்கள், இன்ன பிற உறவினர்களை விரும்பும் அளவு கூட அல்லாஹ்வை  நேசிப்பதில்லை.*

🤔தொழுகைக்கு வருபவர்களில் உண்மையில் அல்லாஹ்வின் மீது உள்ள நேசத்தால் தொழக்கூடியவர்கள் எத்தனை பேர் என்பதை நாம் சிந்திக்க கடைமைப் பட்டுள்ளோம்.

💯அல்லாஹ்வை விரும்பியதால் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்கள் எத்தனை பேர் இந்த நேசத்தை நம் மனம் சுவைக்காத காரணத்தினால் தான் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் சுமையாகத் தெரிகிறது.

🗣 *இறைவனை வழிபடுவது மலையாகத் தெரிகிறது.* அவனுடைய நேசத்திற்கு ஒரு பெரும் பகுதியை நம் உள்ளத்தில் ஒதுக்கியிருந்தால் தொழுவதே நமக்கு இன்பமாக மாறியிருக்கும்.

🗣நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை அதிகம் நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக் கூடியதாக இருந்தது.

📖 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.*
நூல்: நஸயீ (3879)

🎙 *அல்லாஹ்வின் நேசம் ஒருவரை நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டும்*

📖 *அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.*
அல்குர்ஆன் (76:8)

🗣 *அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய அளவு நேசத்தை உள்ளத்தில் வைக்காமல் அவ்வலியாக்கள் மற்றும் படைப்புகளின் மீது விட்டுவிட்டவர்கள்  வழி தவறியவர்களாக தான் இருக்கிறார்கள்*

📖 *அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்.*
(அல்குர்ஆன் : 2:165)

✍🏼 நயவஞ்சகன் தான் அல்லாஹ்வை நேசிக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள்.

📖 ஒருவரை ஏசும் போது அல்லாஹ்வை விரும்பாத நயவஞ்சகன் இவன் என்று நபித் தோழர்கள் கூறியிருக்கிறார்கள். நூல்: புகாரி (425)

🗣 *நாக்கு ருசியை உணர்வது போல நல்ல, கெட்ட விஷயங்களை சுவைக்கும் பண்பு உள்ளத்திற்கும் உண்டு.*

👆 இக்குணம் மனிதனின் உள்ளத்திற்கு வந்து விட்டால் அவன் உள்ளம் நல்ல கருத்துக்களை உள்ளே வைத்துக் கொண்டு கெட்டக் கருத்துக்களை வெளியே அனுப்பி விடுகிறது.

🗣 *ஆனால் நம் உள்ளம் இந்த பாக்கியத்தை அடைய வேண்டுமென்றால் மூன்று விஷயங்கள் நம்மிடத்தில் வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*👇🏻

*அவை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ்*

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

Tuesday 18 September 2018

இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டுகிறதா


*இஸ்லாம்  தீவிரவாதத்தை தூண்டுகிறதா❓*

*சிறிய கட்டுரை விளக்கம்*

*ⓂAKKAL ⓂEDIA*

🏳 *இஸ்லாம்” என்ற சொல்லே “அமைதி” (Peace) என்ற பொருளைக் கொண்டது.*

📖 *அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றவன் மனிதர்கள் யாவரையும் கொலைச் செய்தவன் போலாவான்.மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.* (அல்-குர்ஆன் 5:32)

📖 *அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.* (அல்-குர்ஆன் 25:68)

💣 *குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலரின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோகும். ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட குர்ஆன்  வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள். இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மறுமையில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதே குர்ஆன் கூறும் எச்சரிக்கையாகும்*

⚔ *இஸ்லாம் எப்போது போரை அனுமதிக்கிறது.மற்றும் போர் செய்யும் போது குர்ஆன் விதிக்கும் கட்டளைகள் என்ன என்பதை அறிந்தால் ஒருவர் இஸ்லாத்தை பற்றி விமர்சிக்கமாட்டார்.அவைகளை கீழே கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.👇🏼*

⚔ *வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.*

⚔ *சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:191, 22:40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.*

🚫 *போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் செய்யக் கூடாது என்று 2:192 வசனம் கூறுகிறது.*

⚔ *அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் செய்ய வேண்டும் என 4:75, 22:39-40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.*

🚫 *சமாதானத்தை விரும்புவோருடன் போர் செய்யக் கூடாது என்று 8:61 வசனம் கூறுகிறது.*

🚫 *மதத்தைப் பரப்ப போர் செய்யக் கூடாது என்று 2:256, 9:6, 109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.*

🚫 *தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது இஸ்லாமிய முறைக்கு ஏதிரானது*

⚔ வெட்டுங்கள் கொல்லுங்கள் என்ற வசனங்கள் ஏன்❓வீடீயோ👇🏼

https://youtu.be/hTwtsdw19NQ

http://tamilmuslim.com/ta/?p=293

✍🏼 *பின் ஏன் இஸ்லாம் எதிர்ப்புக்கு உள்ளாகிறது❓கட்டுரை வடிவில் கீழே👇🏼*

http://www.quranmalar.com/2012/11/blog-post_24.html?m=1

💯 *சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் தொடுத்தனர்.*

✅ *போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. இதை 2:190, 9:12,13 ஆகிய வசனங்களில் காணலாம்.*

🚫 *போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.*👇🏼

📖 *நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர் ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெண்களையும், சிறுவர்களையும் கொல்ல தடை செய்தார்கள்.* அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், இப்னு மாஜா, அஹ்மத், அல்முஅத்தா.

💣 *இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது.*

📖 *அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.*(அல்-குர்ஆன் 2:195)

📖 *நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.* (அல்-குர்ஆன் 4:29-30)

💣 *குண்டு வைப்பவர்கள் சாதி, மத பேதம் பார்த்து குண்டு வைப்பதில்லை! குண்டு வெடிப்பில் அனைத்து மதத்தினருமே கொல்லப்படுகின்றனர்.*

📖 *எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.* (அல்-குர்ஆன் 4:93)

💯 *மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கடுமையாக சாடுவதோடல்லாமல் அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நாம் அறிய முடிகிறது.*

✅ *எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கேற்ப அந்த செயல் கடுமையான தண்டணைக்குரியது.*

⚖ *இந்தளவு நடுநிலையை யாராலும் போரின் போது சொல்ல முடியாது.*

➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖
*குரூப்பில் இணைய*
https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*