Saturday 8 October 2022

காதியாணிகள் என்றால் யார்? அவர்கள் முஸ்லீமா!!! முழு விவரம்

முஹம்மது நபிஸல் அவர்களுக்கு  பிறகு நானும் நபியே என்று வாதிட்ட பொய்யன் தான் மிர்சா குலாம் மிர்சா குலாம் அகமது இவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார். இவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநில காதியான் என்ற கிராமத்தில் 13.02.1835 ல் பிறந்தார் ,  மே 26.05.1908 அன்று இறந்தார்

முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு பிறகு நான் தான் நபி நான் இறை தூதர் என பிரகடப்டுத்தினார், அவரை நபியாக  பின்பற்றுபவர்களே காதியாணிகள், அல்லது அஹ்மதியாக்கள் என கூறப்படுகின்றார்கள்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம்  சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே, காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தியதாகும்.

ஆனால் இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். இவர்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் எந்தசம்மந்தம் இல்லை என்றும் காதியானி என்பது தனி மதம் என அறிவித்தார்கள் இதற்க்கு காரணம் முஹம்மது நபி ஸல் அவர்களே இறுதி இறைத்தூதர் என குரானில் உள்ள வசனம் தான்