Sunday 20 March 2016

பெருகி வரும் விபசாரம்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💢பெருகி வரும் விபசாரம் 💢

📜நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 17:32)

♻இன்றைய காலம் விஞ்ஞான காலம் என்று சொல்லுவதை விட.!!!

♻விபச்சார காலம் என. சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

♻காலம் மாற மாற விஞ்ஞானம் வளர்ச்சி என்று அடைவதாக சொல்லி கொண்டு

🔹ஆடை அனாச்சாரம்
🔹அசிங்கம்
🔹ஆபாசம்

❇இவைகள் தான் வளர்ச்சி அடைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.!!!!

❇ஒரு சிறந்த சமுதாயமாக ஆக்கபட்ட சமுதாயம் (குன் தும் கைர  உம்மத்)
போல் என்றாவது இந்த சமுகம் வாழ்ந்தது உண்டா.?

🔶பெற்றோர்கள்
 முஸ்லிம் என்ற பெயரில் இருந்ததால்,

🔶 தானும் அதை போல் பெயர் தாங்கிமுஸ்லீம்களாக வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம்.!!!

💠ஒரு இஸ்லாமிய குடும்பத்தில்.!!!

🔶ஒரு அன்னிய ஆணை தன் மனைவியை ரசிக்க வைத்து வேடிக்கை பார்க்க வைத்து கண்ணால் விபச்சாரம் செய்யவைக்கிறோம்.!!!

🔶தன் சகோதரியை ஒரு ஆணை ரசிக்கவைத்து  அனு பொழுதும் அவன் பற்றி  பேச வைத்து மனத்தில் விபச்சாரம் செய்யவைக்கிறோம்.!!!

🔶தன் பிள்ளைகளுக்கு ஆபாசம் , விபச்சாரம் எது என்பதை கூட சொல்லி கொடுக்காமல்.

🔶விபச்சாரம் நிறைந்த படத்திற்கு முதல் நாளே பால் அபிஷேகம், தோரனம் கட்டி கொண்டாடிகிறார்கள்.!!

🔶இதை கண்டு மகிழ்ச்சி வேறு.!!!

👆🏻இப்படி கண்களால் , மனதால் , கை, கால்கள் முலம் விபச்சாரம் செய்ய நாமே பணம் கொடுத்து அனுப்பி வைப்பது வேதனையான விசயம்.


🗯நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓விபசாரத்தில் ஆதமின் மக(ன் மனித)னுக்குள்ள பங்கை இறைவன்
எழுதியுள்ளான்.
அதை அவன் அடைந்தே தீருவான். (மனிதனின் கண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன.)
கண்ணின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும்.
 நாவின் விபச்சாரம் (ஆபாசமான) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது.
மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 46.

♻பிற சமூகத்திர்கு  முன் உதாரணமாக இருக்க வேண்டிய நாமே.!!!

👆🏻இந்த கேவளமான விசயத்தை அரங்கேற்றுவது வேதனையாக உள்ளது.

 ♻பெரும்பலான வீடுகளில் மொத்த குடும்பமே  உட்கார்ந்து இந்த ஆபாசத்தை பார்கிறோமே.!!!

❌நம் குடும்பத்திர்க்கு நாமே விபச்சாரத்தை கற்று கொடுக்கிறோமே இது அசிங்கமாக இல்லையா❓

♻இவையேல்லாம் "ஹராமாக" ஏன் தெரியவில்லை.!!!

♻ஏன் என்றால் இதன் பெயர் சுதந்திரம், பொழுது போக்கு என்று  நினைத்து கொண்டதே காரணம்.

 ♻இதை விட பெரிய முட்டாள் தனம் வேறு இருக்கமுடியாது.!!!

🔶பிறகு எப்படி நம் குடும்பத்தினருக்கு மார்க்கப் பற்று வரும்❓

🔶அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் விபச்சார பற்று தான்
வரும்.!!!!

💠சிந்தியுங்கள்💠

❇எத்தனை பெண்கள் ஹிஜாப் அதன்  நோக்கம் அறிந்து அணிகிறார்கள்❓

❇கண்ணியமாக தன் அழகை தன் கணவன் மட்டும் காட்டவேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டிய கடமை உள்ளவர்களோ.!!

❇அழகு , ஆபாசம், நிறைந்த ஹிஜாபை வாங்கி கொடுத்து

❇அழகை மறைப்பது கூட  அழகாக இருக்க வேண்டும் என்று சொல்லி தன் வீட்டு பெண்களை விபச்சாரம் செய்ய வைப்பதை விட
கேவலம் வேறு இருக்க முடியுமா.?

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 🔶இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.

📓இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப்போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3971

❇கணவன்  , மஹரமான ஆண்களை தவிர பிறருக்கு எந்த வகையிலும் வெளிபடுத்த கூடாது . என்று கட்டளை இடப்பட்ட மார்க்கம்.

📓ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : திர்மிதி 2710

💠"நம்மை ஏவி தீயதை தடுக்கும்" 💠

❇நமது சமுகம் இன்று  விபச்சார நடிகர்கள் பின்னால் சென்று கொண்டு இருப்பது தான் மன வேதனை.

📓இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:48)

🔴எந்தவொரு சிபாரிசு ஏற்றுக்கொள்ளபடாத மறுமை நாளை அஞ்சுங்கள்.!!!

🔶இறைவனால் தடை செய்யப்பட்ட  பிறகும் ஒரு தவறை  செய்து விட்டு.!!!

🔶இறைவன் மன்னித்துவிடுவான் என்று சிந்திக்கும் மக்களே .!!

🔶எந்தஒரு தவறையும் செய்யாதீர்கள் என்று கூறும் இறைவன்.!!!

🔶விபச்சாரத்தை மட்டும் நெருங்காதீர்கள் என்று ஏன் கூறினான்❓

♻இதில் இருந்து அறிந்து கொள்ளுங்கள் விபாச்சரத்தை இறைவன் எந்த அளவு "ஹராம்" ஆக்கியுள்ளான் என்று சிந்தியுங்கள்.!!

☝🏻இறைவன் சொல்லுகிறான்👇🏻

📓இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
(அல்குர்ஆன் : 21:47)

💠இன்ஷா அல்லாஹ்💠

❇இனி வரும் காலங்களில் அல்லாஹ்வை அஞ்சி

❇நம் சமூகம் இறை அச்சம் (தக்குவா) உள்ள சமூகமாக மாற வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக.!!


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 20 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment