Sunday 13 March 2016

❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇ ⭕பகுதி8⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇

             ⭕பகுதி8⃣
🏮முகம்மது(நபி) மற்றும் இஸ்லாத்தைப்பற்றிய முன்னறிவிப்பின் தொடர்ச்சியை காண்போம்.

💥இறைவனைப் பற்றிச் சரியாக அறியாத – இறைத்தூதர்களின் வருகை நின்று போயிருந்த – ஒரு சமுதாயத்திற்கு ” இதோ நான் இருக்கிறேன்” என்று கர்த்தர் கூறுவார் என்று முதல் வசனம் கூறுகிறது.

✳ஏசாயா தீர்க்கதரிசிக்குப் பின் இயேசு வரை எத்தனையோ தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலர்களில் தோன்றினார்கள்.

✳அவர்கள் அல்லாஹ்வைப்பற்றிச் சரியான முறையில் இஸ்ரவேலர்களுக்கு விளக்கினார்கள்.

✅இயேசு பிறக்கக் கூடிய காலத்திலும் அவர் பிறப்பதற்கு முன்பும் கர்த்தரைச் சரியாக விளங்கியிருந்த மக்கள் பலர் இருந்தனர்.

✅இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய யோவான், மேரியை வளர்த்த யோவானின் தந்தை ஸகரியா ஆகியோர் கர்த்தரை நன்கு அறிந்திருந்தார்கள். ஒழுக்கத்திற்கும், பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்த மக்களும் அன்று இருந்தார்கள்.

🏮 அதனால் தான் கணவனின்றி குழந்தை பெற்றதாக மேரியைப் பழித்தனர்.

🏮சிலர் தவறான கொள்கையிலும், சிலர் தவறான நடத்தையிலும் ஈடுபட்டிருந்தாலும் மற்றும் சிலர் நல்லடியார்களாகவும் இருந்து வந்தனர்.

💥 எனவே இந்த முன்னறிவிப்பு இயேசுவின் காலத்து மக்களையோ, இயேசுவையோ குறிப்பிட வில்லை.

✳நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு எந்தத் தீர்க்கதரிசியும் அதற்கு முன் வந்ததில்லை.

✳ ஒரு சில நல்ல மனிதர்கள் கூட அன்றைக்கு இருக்கவில்லை.

 💥எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை.

🔴இயேசுவின் காலத்திலும் கூட மக்கள் அனைவரும் அல்லாஹ்வை விளங்காமல் இருந்தனர் என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட இது இயேசுவின் சமுதாயத்திற்கு அறவே பொருந்தாது.

ஏனென்றால் இந்த வசனத்தில்
👇👇👇
 ”அத்தகைய மக்களால் நான் தேடப்பட்டேன், அவர்களால் கண்டறியப்பட்டேன் எனக் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அறியாதிருந்த அந்தச் சமுதாயம் அல்லாஹ்வை தேடும், அல்லாஹ்வை சரியாக அறிந்து கொள்ளும் என்று இந்த வசனம் கூறுகிறது.

✳❎இயேசுவின் காலத்து மக்கள் தவறாக நடந்து கொண்டால் கூட இயேசு வந்ததும் அல்லாஹ்வை தேடவுமில்லை. அல்லாஹ்வை கண்டறியவுமில்லை. மாறாக (கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி) இயேசுவையே சிலுவையில் அறைந்து கொள்ளும் அளவுக்குக் கொடூரமானவர்களாகவும், அல்லாஹ்வின் மகிமையை உணராதவர்களாகவும் இருந்தனர்.

✳✅நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தவர் அல்லாஹ்வை விட்டு எந்த அளவுக்கு விலகியிருந்தார்களோ அந்த அளவுக்கு நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் அல்லாஹ்விடம் நெருங்கினார்கள்.

✔அல்லாஹுக்காக தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்தார்கள்.

✔அல்லாஹுக்காக சொல்லொணாத துன்பங்களையும் சகித்துக் கொண்டனார்.

♦7வது வசனத்தில் இஸ்ரவேல் சமுதாயத்தை நோக்கி
📖 ”உங்கள் அக்கிரமத்துக்காகவும், உங்கள் முன்னோர்களின் அக்கிரமத்திற்காகவும் (புதிதாக வரக்கூடியவர்கள்) மடியில் கணக்குத் தீர்ப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார்.

💥இஸ்ரவேல் சமுதாயம் செய்த அக்கிரமங்களுக்குத் தண்டனையாக இஸ்ரவேல் அல்லாத இன்னொரு சமுதாயத்திற்கு அந்தஸ்தும் மதிப்பும் அளிக்கப்படுவதையே இவ்வசனம் தெளிவாகக் கூறுகின்றது.

💥மனோ இச்சைப்படி நடக்கின்ற முரட்டுத்தனம் கொண்ட – கல்லையும் மண்ணையும் வணங்கி வந்த – தாழ்ந்தவர்களாகவும் கருதி வந்த – மக்களே கர்த்தரைக் கண்டறிவார்கள் என்று 3,4,5 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 ✳இஸ்ரவேலர்கள் செய்த அக்கிரமத்துக்குத் தண்டனையாக இன்னொரு சமுதாயம் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் என்று இவ்வசனம் கூறுகிறது.

❌ இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு நிச்சயமாகப் பொருந்தாது.❌

 ✳✅இயேசுவின் காலத்து இஸ்ரவேலர்கள் உட்பட அனைத்து இஸ்ரவேலர்களும் செய்து வந்த அக்கிரமத்தின் காரணமாகத் தான் இன்னொரு சமுதாயத்திடம் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பு வழங்கப்படுவதாக

♦7வது வசனம் கூறுகிறது.

 ✔ஆகவே அதுவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையைக் குறித்த முன்னறிவிப்பு என்பதில் ஐயமில்லை.✔

♦சிந்தித்து பாருங்கள்♦

✔உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.
💥இன்ஷா அல்லாஹ்

💥 நாளை தொடரும் ...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 25  FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment