Sunday 13 March 2016

❤ காதல் ❤ பகுதி - 6

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

            ❤ காதல் ❤

               பகுதி - 6⃣

♻நாம்  காதலிக்கலாமா ❓
         காதலிப்பது தவறா❓


✅காதல் என்பது கணவன் மனைவி ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நேசத்தைக் குறிக்கும் வார்த்தையாகும்.

💕 அதுபோல கணவன் மனைவியாக ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்படும் நேசத்தையும் குறிக்கும்.
                                                         
✅ ஒரு சூழ்நிலையில்
 ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதிர்பாலர் மீது விருப்பம் ஏற்படலாம்.
அந்த விருப்பம் திருமண பந்தத்தின் மூலம் இணைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட எதுவும் கலக்காமல் இருந்தால் அது தவறல்ல.

                                                                                                           💕காதலன், காதலி என்று சொல்லப்படுபவர்கள் ஒருவர் மீது ஒருவர் நேசங்கொண்டு திருமண பந்தத்தின் மூலம் இணைய விரும்புகிறவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தானே ❗தவிர கூடாத காரியங்களை செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல.

💖காதலிப்பவர்கள் அனைவரும் திருமணம் செய்யாமலும் போகலாம்.

♻அப்படித்தான் பலருக்கும் நடக்கிறது.

♻இவ்வாறு இருக்கையில் மேற்கண்ட தவறுகளை செய்துவிட்டு பிரிந்தால் இறைவனுக்கு மாறு செய்த குற்றத்தோடு வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்த குற்றமும் வந்து சேரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


✅ஒழுக்கத்தையும் கவுரவத்தையும் விரும்பும் ஒருவன் இது போன்ற தீமைகளைத் தூண்டுகிற சூழ்நிலைகளை விட்டும் தூரமாக இருக்க வேண்டும்.

♻திருமணத்திர்க்கு விருப்பம் வேண்டும் அந்த விருப்பத்தை நியாயமான முறையில் அடைய வேண்டும்

♻உதாரணத்திர்கு கதிஜா (ரலி)அவர்களை கூறலாம் அவர்கள் நமது நபி அவர்களை திருமணம் செய்ய விரும்பினார்கள்

♻விரும்பிய அவர்கள் என்ன செய்தார்கள் நமது நபியிடம் சென்றா கூறினார்கள்?

🔺இல்லையே❗

♻அவர்கள் என்ன செய்தார்கள் பணிப்பெண்ணிடம் விருப்பத்தை கூறி அனுப்பினார்கள் அதர்க்கு நமது நபி (ஸல்)அவர்கள் என்ன கூறினார்கள் எனது சிறிய தந்தையை கேளுங்கள் என கூறி அனுப்பினார்கள்.

👆🏻அல்ஹம்துலில்லாஹ் திருமணம் முடிந்தது  இது பெரிய வரலாறு இதன் மூலம் விளங்குவது என்ன வென்றால் விருப்பத்தை எவ்வாரு நிறைவேற்றிக் கொள்வது எனவிளங்கி கொள்ள வேண்டும்


 ♻    ஆனால் அதில் மார்க்கம் நமக்கு வகுத்த வரையறையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

                                                                                                ✅ஒரு ஆண் அந்நியப் பெண்ணை பார்த்து ரசிக்கக் கூடாது என்பது மார்க்கத்தின் உத்தரவு.

♻இதை மீறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

☝🏻 அல்லாஹ் கூறுகிறான்👇🏼  
                                                                                                                                                                 📘“இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மறைவிடங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும். இது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
மேலும் இறைநம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும்.”
 [அல்குர்ஆன் 24:30,31]  
                                                                                                                        👆🏻இந்த வசனங்களில் ஆண்&பெண் இருதரப்பினரையும் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளவும், கற்பைப் பேணிக்கொள்ளவும் என அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான்.
                                                                                                                                        ♻இந்த கட்டளை  அனைவருக்கும் பொதுவான கட்டளைதான்.

♻ஒருவர் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்பதற்காக இந்த கட்டளையை  மீற கூடாது. ஏனென்றால் அவள் இவரது மனைவியல்ல.

♻ ஒரு வேலை இவர் அவளைத் திருமணம் செய்ய இயலாமல் கூடப் போகலாம் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

  ♒நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 📘“ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல.”

நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.

                                       
♻ஆக, பார்வையிலும் அதற்குரிய வரையறைகளைப் பேணவேண்டும்
 மற்ற அனைத்திலும் வரையறைகளையும் பேண வேண்டும்.

💖தான் விரும்பும் பெண்ணை தொடர்ந்து பார்ப்பதையும்  தவறு என்று மார்க்கம் தெளிவாக கூறும்போது

♻காதலில் எதுகூடும் எது கூடாது என்பதை
நாமே தெரிந்து கொள்ளலாம்.
 ♻இறை நம்பிக்கையுடன் அவனது வழிகாட்டுதல் படி செயல்படவேண்டு மென்று நினைப்பவர் இதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

♻அவனது கட்டளைக்கு முழுவதும் அடிபணிந்து அவனுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!!!


⏩இன்ஷா அல்லாஹ் தொடரும்.....⏩


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  13 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment