Sunday 13 March 2016

🔴கல்வி கற்றுத்தருபவரின் சிந்தனைக்கு🔴 🌱பகுதி 13

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
 
           ♨கல்வி♨


  🔴கல்வி கற்றுத்தருபவரின் சிந்தனைக்கு🔴


         🌱பகுதி1⃣3⃣

📓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது.

ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்.

இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

👆🏻மேலுள்ள இந்த நபிமொழியிலிருந்து அல்லாஹ் தந்த கல்வி ஞானத்தைக் கொண்டு தாம் கற்றதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதென்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளளாம்.


✨ ஆனால் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலை ஒரு தொழிலாக மட்டும் கருதி அதன் சிறப்பையும் அதிலுள்ள ஏராளமான நன்மைகளையும் மறந்து கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை.

✨ நாம் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மை நம்மிடம் கற்றவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து பின்னர் அவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து இவ்வாறு சங்கிலித் தொடர் போல் பயனடையும் அத்தனை நபர்கள் மூலமாகவும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.


📖கல்வி கற்றுத்தருபவரின் சிந்தனைக்கு 👇🏼

1⃣கல்வி கற்றுத்தருபவரிடம் பெருமை கூடாது..

🔺காரணம் பெருமையோடு போதிக்கும் கல்வி நாளை மறுமையில் வெற்றி தராது ..

2⃣கல்வி கற்றுத்தருபவர் முழு நேரமும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் ..

🔺காரணம் கல்வி கற்றுக்கொள்பவர்கள் நாம் தரும் கல்வியை மட்டும் பெறுவதில்லை ..கூடவே நம்மிடமிருந்து ஒழுக்கத்தையும் செயல்முறைக்கல்வியாக பயின்றுசெல்கிறார்கள் ..
நம்மிடமுள்ள ஒழுக்கமே அவர்களிடமும் எதிரொலிக்கும் ..

ஆம் உண்மை அதுதான் ..

 நபி ஸல் அவர்களிடம் இருந்த சொல்,நம்பகத்தன்மை,செயல்,
அனைத்தும் ஸஹாபாக்களிடமும் வெளிப்பட்டதே இதற்கு மிகப்பெறும் உதாரணம் ..

3⃣கல்வி கற்றுத்தருபவர்..அவர் கற்பிக்கும்போது ஏகத்துவத்தை எல்லா நிலைகளிலும் போதிக்க வேண்டும் ..

🔺உதாரணமாக ..
 சிறையில் நபி யூசுப் அலை அவர்களிடம் கனவுக்காக விளக்கம் கேட்கும்போது கூட முதலில் ஏகத்துவத்தை முன்வைத்துதான் கல்வியை தொடங்கினார்கள் ..

 அதை குர்ஆன் விளக்கும் அழகிய வசனம் இதோ 👇👇👇👇
 
   📓என்னுடைய சிறைத் தோழர்களே! (நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!) பல்வேறுபட்ட கடவுளர்கள் சிறந்தவர்களா? அல்லது யாவற்றையும் அடக்கியாளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா?

(அல்குர்ஆன்: 12:39)


✨மாணவர்களை சமூகத்திற்கு ஒரு நல்ல பொறுப்புள்ள ஆளாக உருவாக்குவதில் ஆசிரியர்களே ஆணிவேராக இருக்கின்றனர்.

✨ஆசிரியர்கள் சீராக இருந்தால் தான் மாணவர்களுக்கு சீரிய வழியைக் காட்ட முடியும்.

✨கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமை அல்ல. மாறாக, கல்வியோடு சேர்த்து

🔺ஒழுக்கம்

🔺பழக்கவழக்கங்கள்

🔺 கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துதல்

🔺மாணவர்களின்   தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல்

👆🏻ஆகியவற்றுடன் ஏராளமான நற் பண்புகளை கற்பித்தல் ஆசிரியர்களின் கடமைகளாகும்.


📓ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 58:11)

📓நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவ்கள் அறிஞர்கள்தாம். (அல்குர்ஆன் 35:28)



................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 03 FEB 2016

No comments:

Post a Comment