Sunday 13 March 2016

📖குர்ஆனும் விஞ்ஞானமும்🔭

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

📖குர்ஆனும் விஞ்ஞானமும்🔭

🌎பிரபஞ்சத்தின் பிறப்பு : மகாவெடிப்புக் கோட்பாடு ( BIG BANG THEORY )

🔭விஞ்ஞானத்தின் பார்வையில்

🌎இந்த பேரண்டம் எப்படி தோன்றியது என்று விண் இயற்பியலாளர்களிடம்( Astro - physicists) கேட்டால் அனைவரும் பிரபல்யமாக அறியப்படும் ' மகா வெடிப்புக் கோட்பாடு ( BIG BANG THEORY) என்ற கோட்பாட்டை கொண்டே விளக்கம் தருவார்கள்.

💥இந்த மகாவெடிப்புக் கோட்பாட்டின் படி , ஒட்டுமொத்த பிரபஞ்சமும் தொடக்க நிலையில் ஒரு பெரும் பருப்பொருளாக இருந்தது.

🌎இதை பிரைமரி நெப்யூலா ( primary nebula) என்று அழைப்பர் விஞ்ஞானிகள் ,பிறகு மகாவெடிப்பு ஏற்பட்டது அதாவது இரண்டாவது முறையாக தனித்தனியே பிரிதல் ( secondary  separation ) நிகழ்ந்தது.

💥அதாவது வானமும் பூமியும் பிரிந்தது பின்னரே தாரகை கூட்டங்கள் உருவாயின.

👆🏻இது மேலும்

🔸நட்சத்திரங்கள்

🔸கோள்கள்

🔸சூரியன்

🔸சந்திரன்

🌎ஆகிய வான் கோலங்களாக பிரிந்தமைந்தன.

🌏இந்த பேரண்டத்தின் பிறப்பு ஓர் அற்புதமான நிகழ்வாகும்.

👆🏻இது தற்செயலாக நிகழ்ந்தது இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

📖குர்ஆனின் பார்வையில்
குர்ஆன் இவ்வாறாக கூறுகிறது👇🏻

🍃اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌  وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌  اَفَلَا يُؤْمِنُوْنَ‏ 

🍂நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)

💥இந்த திருகுர்ஆன் வசனத்திற்கும் மகாவெடிப்புக் கோட்பாட்டிற்கும் இடையில் உள்ள அற்புதத்தை பாருங்கள்.

🔭எந்தவொரு அறிவியல் வளர்ச்சியும் அடைந்து இருக்காத பதினான்காவது நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த குறிப்புகள் ஒரு வேதத்தில் குறிப்பிட பட்டுள்ளது என்றால் அந்த வேதம் யாரிடம் இருந்து வந்து இருக்கும்❓

🌳اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏ 
🌲அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:82)


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 15 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment