Sunday 13 March 2016

🔷முதியோர் கல்வி🔷 🍀பகுதி9⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
 
       🍁கல்வி🍁

  🔷முதியோர் கல்வி🔷

           🍀பகுதி9⃣

🔅முதியோர் கல்வி என்றால் என்ன?
முதியோர் கல்வித்திட்டம் ஏற்படுத்த என்ன அவசியம் ...

📓நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள்

(அல்குர்ஆன் 21:7)


🔅இன்றைய காலத்தில் கல்வி என்பது குழந்தைகளுக்கும் பருவ வயதினருக்கும் மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறார்கள்.

🔅இன்று பெரும்பாலும் 40 வயதை கடந்த பலருக்கு குர்ஆன் ஓதும் முறையும் ,தொழுகை முறையும் தெரிவதுகிடையாது ...

🔺காரணம் ...

🔅என்றோ அறியாமை நாட்களில் கல்வியை அலட்சியம் செய்து வயதை வீணடித்து இன்று 40 வயதை தாண்டிவிட்டோம் ,இனி எதற்காக மீண்டும் கல்விக்காக நாம் அவமானப்பட வேண்டும் என்று நினைத்து
அவர்களின் காலங்கள் அறியாமையிலேயே நீடிக்கிறது ..

🔷ஒரு சிலர் கற்க  வேண்டும் கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமை என்ற ஆர்வத்தில் படித்து கொள்கின்றனர்

🔅ஆனால் பெரும்பான்மையாக மக்கள் கல்வியை கற்க முன்வருவது  இல்லை

🔺 காரணம் என்னவென்று பார்த்தால்

 🔅இவர் சொல்லி தான் நாம் தெரிந்து கொள்ள  வேண்டுமா?
அதற்கு நான் கற்காமலே இருந்துவிடுவேன் என்று கூறுவார்கள்.


🔅சிலருக்கு  ஒன்றும் தெரியாது ஆனால் அனைத்தும் அறிந்தது போன்று தன்னை காட்டி கொண்டு கொள்வார்கள்.

🔅பிறரிடம் இருந்து நாம் ஏன் கற்க வேண்டும் என்ற கர்வத்தை மனதில் வைத்துக் கொள்வார்கள்.


🔅இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ...

🔅இஸ்லாம் எல்லாகாலங்களிலும் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்துகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

🔅நமது நபி (ஸல்)அவர்கள் உட்பட ,பெரும்பாலான ஸஹாபாக்கள் 40 வயதிற்கு மேல் தான் அறியாமை கால வாழ்க்கையை விட்டு நீங்கி ,கல்வியின் ஆர்வத்தின் மூலம் நேர்வழி பெற்று சிறந்த நபிதோழர்கள் என்கிற பட்டம் பெற்றார்கள் ...

🔅அவர்கள் இனிமேல் நமக்கு எதர்க்கு இந்த கல்வி என்று நினைத்திருந்தால் கல்வி கற்றிருக்க முடியாது

🔺அல்லாஹ்வையும் அறிந்திருக்கவும் முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

🔅கல்வி.கற்பதில் மக்களுக்கு பயந்து அவமானத்திற்கு ஆளாகவேண்டும்  என்று நினைப்பவர்கள்

🔅மறுமையில் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் பலஆயிரக்கனக்கான கோடி மக்களுக்கு மத்தியில் அவமானப்படபோவதை நினைத்து பார்க்க வேண்டும் ...

📓உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக் கொள்பவரும், கற்றுக் கொடுப்பவரும் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)


................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 30 JAN 2016

No comments:

Post a Comment