Monday 21 March 2016

வரதட்சனை ஒரு வன்கொடுமை

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❌வரதட்சனை ஒரு வன்கொடுமை❌

🌍உலகத்தை படைத்த இறைவன் எல்லா உயிரினங்களையும் படைத்து அவற்றை ஒவ்வொன்றையும் ஜோடியாக வாழவைத்துள்ளான்.

✨விலங்குகளாக இருந்தாலும் பறவைகளாக இருந்தாலும் மற்றுள்ள எந்த உயிரினங்களாக இருந்தாலும் அவை தமக்கென்று ஜோடிகளை தேர்ந்தெடுக்கின்றன.

✨இந்த உயிரினங்கள் ஜோடிகளை தேர்ந்தெடுப்பதில் எந்த வித ஒப்பந்தங்கள் இல்லாமல் இயற்கையாக தனது துணையை ஆக்கி கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றன.

☝🏻இறைவன் படைத்த படைப்புகளில் சிறந்தாக , சிந்தனை ஆற்றலையும் கொடுத்து படைக்கப்பட்ட படைப்பு மனித இனம் மட்டுமே!!

✨இத்தகைய மனிதனும் இவ்வுலகில் வாழ துணையை தேடுகிறான்.

❌எந்த ஒரு மனிதனும் துணையில்லாமல் வாழ முடியாது❌

✨அப்படி அவர்கள் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை முழுமை அடையவில்லை என்றே கூறலாம்.

💥இப்படி ஒரு ஆணும் பெண்ணும் வாழ வேண்டி ஏற்படுத்தப்பட்ட பந்தமே திருமணம் என்ன மணவாழ்க்கை.!

👆🏻இந்த திருமணப்பந்தத்தை சரியான முறையில் கற்று தந்த மார்க்கம் இஸ்லாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

❗ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்  இந்த திருமணப்பந்தங்கள் ஏதோ வியாபாரம் போல ஆகி விட்டது.

❌இன்னும் சொல்லப்போனால் மாட்டு வியாபாரத்தை விட கேவலமான வியாபாரமாக மாறிவிட்டது.

💥ஒவ்வொரு ஆண்மகனும் ஒவ்வொரு விலைக்கு பேசுக்கின்றன.!!

💥இத்தகைய விலைபேசுவதை தான் இஸ்லாம் நமக்கு கற்று தந்ததா❓

💥இத்தகைய சீர்கேடுகளை உருவாக்கியது யார்❓

💥இன்றைய காலத்தில் குறிப்பாக முஸ்லீம் சமூகத்தில் தான் இந்த வரதட்சனைக் கொடுமை அதிகரித்து வருகிறது.!!!!

💥இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.!

📜நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
(அல்குர்ஆன் : 4:4)

👊ஆனால் நாம்  கொடுப்பதற்குப் பதிலாக

🔺நம் உடன் வாழ எல்லாத்தையும் தியாகங்களையும் செய்து

❄திருமணத்திற்கு பிறகு
உங்கள் குழந்தையை சுமக்கிறால்(பிறசவ நேரத்தில் மரணத்தின் எல்லைக்கு சென்று வரும் அளவுக்கு வலி தாங்கி கொள்கிறாள்)

❄எல்லா நேரங்களிலும் உனக்கும் தாயாக இருக்கிறாள்.!!

❄உனக்கும் , உன் குழந்தைக்கும் சம்பளம் இல்லாத வேளைகாரியாக இருக்கிறாள்.!!

❄உனக்காக பல வருடமாக கூட இருந்த சொந்தங்களை விட்டு விட்டு.!!!

❄இதற்கு எல்லாம் நீ கொடுக்கும் பரிசு தான் வரதட்சணை யா??

❄இறைவனுக்கு அடுத்த படியா உன்னை மட்டும் நம்பி வந்த பெண்ணிடம் வரதட்சணை என்று பிச்சைக் கேக்கிறாயே அசிங்கமாக இல்லையா.?

🔶நீ சிந்திக்க வேண்டாமா.?

🔶பணம் மட்டும் உன் குறிகோள் என்றால் அல்லாஹ் சொன்ன வேறு வழி சம்மாதிக்க வேண்டிய தானே.!!!

♻இதை போல் உங்கள் விட்டு பெண்களை பணத்திற்காக விற்பாயா.?

👆🏻இந்த அவல நிலையை  காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது.

♻நீ வரதட்சணை வாங்கி சந்தோசமாக வாழ்கிறாய் என்று நினைக்காதே.!!!

♻வரதட்சணை கொடுமையால் நடக்கும் தற்கொலையின் ஒரு பங்கு உன் மேல் எழுத படுகிறது நினைவு வைத்து கொள்.!!!

💥இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது.

💥அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

📓மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

💥தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

📓நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45)

👆🏻வரதட்சணை வாங்குவதின் மூலம் பெண் வீட்டார் எந்த அளவு வேதனை அடைவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.!!!

💥எதிர்கால மணமகன்களே❗❗

💥மனைவியாலும் மனைவியின் குடும்பத்தாராலும் உளமார நீங்கள்  மதிக்கவும் நேசிக்கவும்பட வேண்டுமாயின்.!!

💥இஸ்லாம் வெறுக்கும் வரதட்சணையை ஒவ்வொரு மணமகனும் வெறுத்து மறுத்து விடுவதுதான் ஒரே வழியாகும்.

❌எனவே இலட்சத்திற்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும்👍🏻

👍🏻ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும்👍🏻

☝🏻வல்ல ரஹ்மான் அதற்கு உதவி புரிவானாக❗❗❗

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்:  21 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment