Sunday 13 March 2016

🔴குர்ஆன் கல்வி ஏற்படுத்திய உலக மாற்றம்🔴 🌱பகுதி1⃣1⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
 
           ♨கல்வி♨


  🔴குர்ஆன் கல்வி ஏற்படுத்திய உலக மாற்றம்🔴

         🌱பகுதி1⃣1⃣


👆🏻இந்த தலைப்பில் பதிவு போட வேண்டும் என்றால் பல ஆயிரக்கணக்காக பதிவு போடலாம்.

🍥இந்த பதிவின் நோக்கம் ஓர் சிறிய நினைஊட்டலே



📓اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏ 

 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 4:82)


🍥மேலே உள்ள வசனத்தின் அடிப்படையில் நாம் குர்ஆனை கற்று விளங்கி நடந்தாலே பல கல்விஞானம் நமக்கு கிடைக்கும்.

🍥கிரேக்க விஞ்ஞானியான கிறுஸ்துவிற்க்கு முன் பிறந்த ஆர்க்கிமிடீஸ் குறித்தும்
அவரது ஆர்க்கிமிடீஸ் தத்துவம் குறித்தும் பேசுகின்ற நவீன அறிவியல் வரலாறு


🍥அதன் பிறகு கிபி 16 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் பேசுகின்றது
அப்படி என்றால் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் அறிவியல் எங்கிருந்து வளர்ந்தது வந்தது.



🍥அப்போதெல்லாம் அறிவியல் வளர்ச்சி என்பது இல்லையா
இந்த கேள்விக்கு இந்த வரலாற்றை எழுதியவர்களிடம் பதில் இல்லை
அல்லது பதில் சொல்லல அவர்களுக்கு விருப்பமில்லை


🍥உண்மையில் குர்ஆன் அரபிகளை பண்படுத்தி அவர்களிடம் அறிவு தாகத்தை ஏற்படடுத்தி
பின்னால் அந்த முஸ்லிம்கள் ஆட்சி புரிந்த பக்தாதும் டமாஸ்கஸ்ஸும் உந்துலூஸ் என்று அழைக்கப்பட்ட ஸ்பெயினும் நவீன அறிவியல் மற்றும் நாகரீகத்தின் தொட்டில்களாக மாறின
அந்த காலத்தில்  ஐரோப்பா முழுவதும் அறியாமை உலகில் மூழ்கி கிடந்தது

🍥மனிதன் எப்படி வாழவேண்டும்

🔺அண்டை வீட்டாருடன் எப்படி பழக வேண்டும்

🔺தனது வாழ்க்கையை எப்படி செலுத்த வேண்டும்

👆🏻என மனிதனுக்கு தேவையான அனைத்தையும் குர்ஆன் கற்று தருகிறது


🍥இந்த உலகை மாற்றியது குர்ஆன் தான்



🍥குர்ஆன் அரசியல்,ஆன்மீகம்,என
எல்லாவற்றையும்  கூறுகிறது.

🍥உலகில் ஏற்படும் பலமாற்றங்கள் பல கண்டுபிடிப்புகள் அனைத்தும் குர்ஆனில் உள்ளது தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

🔺வானம்

🔺பூமி

🔺சூரியன்

🔺சந்திரன்

👆🏻என எத்தனை  இருக்கின்றனவோ அவற்றை ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


📓நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
(அல்குர்ஆன் : 2:172)

🍥வருமானம் தூய்மையானதாக இருந்தால் தான் உணவு தூய்மையானதாக இருக்கும்
இந்த குர்ஆன் ஒரு மனிதன் நல்ல முறையில் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் மக்களுக்கு கற்று கொடுக்கிறது


🍥மேலும் நாம் எதை உண்ண வேண்டும் எதைவிட்டு விலக வேண்டும் என அனைத்தையும் குர்ஆன் கூறுகிறது.

🍥குர்ஆன் எல்லாகாலத்திலும் எல்லாநிலமைகளிலும் மனிதனுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்பதில் அணுஅளவும் சந்தேகம் இல்லை.

🍥ஆக குர்ஆன் இந்த நவீன காலத்திலும் நாம் கற்கவேண்டுய சிறந்த கல்வி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 01 FEB 2016

No comments:

Post a Comment