Tuesday 15 March 2016

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

மகளிர் தினம் ஓர் பார்வை
          பகுதி-1

🚫மகளிர் தினம் ஒரு சிறப்பு பார்வை 🚫

👩🏻மகளிர் தினம் உருவாக்கப்பட்டதின் பின்னனி  என்னவெனில் ,
பெண்களை சமுதாயத்தில் தரம் உயர்த்தி ஆண்களுக்கு சரிசமமாக பெண்களுக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுதருவதே .

🚫இதற்காக ஒவ்வொரு ஆண்டும்
மார்ச் 8 ஐ மகளிர் தினமாக
கொண்டாடி வருகின்றனர் .

👩🏻மகளிர் தினம் என்று ஏற்படுத்தி கொண்டாடுவது பெண்களின் பிரச்சனைக்கு எப்படி தீர்வாக இருக்க முடியும் என்பதை விளக்குவதற்காகவே
"மகளிர் தினம் ஓர் சிறப்பு பார்வை " என்ற இத்தலைப்பை கையிலெடுத்துள்ளோம் ..

💐அல்ஹம்துலில்லாஹ்💐

💠வாருங்கள்..
 முதலில் மகளிர் தினம் உருவான வரலாற்றை விரிவாக அறிந்து கொள்வோம் .

🌿எதற்காக மார்ச் 8 குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்❓

🌎வரலாற்றை திருப்பி பார்த்தால் வியப்பூட்டும் பல தகவல்கள் கிடைக்கின்றன

🌎உலகம் முழுவதும் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நாளில் பல நாடுகளில் விடுமுறை கூட அளிக்கப்படுகிறது..

🍃இனம்,மதம்,மொழி,
கலாச்சாரம் போன்ற வேறுபாடுகளை மறந்து பெண்கள் என்ற ஒரே எண்ணத்தில் ஒன்று கூடி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர்.

🍂பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர பெண்கள் போராடினர்.

🍂 அதைப்போல் பிரெஞ்சுப் புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம்,சமத்துவம் போன்றவற்றிற்காக போராடினர்.

🔻 ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் !!

🔻 ஆண்களும் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து உற்சாகமாக அரசு மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

🔘உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய மெய்க்காப்பாளர்கள் இருவரையும் கூட்டத்தினர் தாக்கி கொன்றனர் இதை கண்ட அரசன் கூட்டத்தை சமாதானப்படுத்த கோரிக்கைகளுக்கு ஒற்று கொண்டான் பிறகு  முடிதுறந்தான்.

💠இந்தச் செய்தி வேகமாக பரவியது.பெண்கள் அங்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

💠 ஜெர்மனி,ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்க தொடங்கியது.

💠இதுதான் சமயம் என்று வாக்குரிமைகள் கேட்டு இத்தாலியில் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் இறங்கினர்.

💠பிரான்சில்,புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்த நாள் 1848-ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாளாகும்.

💐இந்த காரணம் தான் வித்தாக அமைந்து இன்று உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது

👆மேலே கூறப்பட்டவை வித்ததாக இருந்தாலும் பிறகு வந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளில் அது உறுதி செய்யப்பட்டது..

😊அது என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் பார்ப்போம்
                           
            👗தொடரும்.....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 08 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment