Sunday 13 March 2016

முஹம்மது நபியும் முன்னறிவிப்பும் பகுதி 9

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇

             ⭕பகுதி9⃣


💥பிற மத வேதங்களில் 
முஹம்மது நபி பற்றிய முன் அறிவிப்பு👇🏻


🐪ஒட்டகங்களில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்❓

📖பைபிளின் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள ஏசாயா ஆகமத்தில் மேலும் ஒரு முன் அறிவிப்புக் காணப்படுகிறது.


👆🏻இந்த முன் அறிவிப்பு இயேசுவைத் தான் குறிக்கிறது என பைபிள் புதிய ஏற்பாடு சாதிக்கிறது.

💥 ஆனால், இந்த முன் அறிவிப்பில் 10க்கும் மேற்பட்ட அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. 

💥அவற்றிள் ஒரே ஒரு அம்சம் தான் இயேசுவுக்குப் பொருந்துகிறது. அதில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் பொருந்தக் கூடிய ஒரே தீர்க்கதரிசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.

👆🏻இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்👇🏻

🍀கழுதையில் ஏறி வந்தவர்

⛪இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன் மேல் ஏறிப் போனார். இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்தில் அறியவில்லை இயேசு மகிமை அடைந்த பின்பு இப்படி இவரைக் குறித்து எழுதியிருப்பதையும் தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவு கூர்ந்தார்கள்.

(யோவான் 12:15)

💥எதிர்காலத்தில் வரக்கூடிய தீர்க்கதரிசி கழுதையில் ஏறிச் செல்வார் என்று முந்தைய வேதங்களில் எழுதப்பட்டுள்ளது எனவும் இயேசு கழுதையில் ஏறியதன் மூலம் அது நிறைவேறியது எனவும் இந்த வசனம் கூறுகின்றது.

💥பைபிளின் பழைய ஏற்பாட்டைப் புரட்டிப் பாரத்தால் கழுதையில் ஏறி வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கூறப்படுகின்றது. 

🌸அதைத் தான் யோவான் இங்கே குறிப்பிடுகிறார் என்று கிறித்தவ உலகமும் ஒத்துக் கொள்கின்றது. அந்த வசனம் இதுதான்.

📖அவன் ஒரு இரதத்தையும் ஜோடு ஜோடான குதிரை வீரரையும் ஜோடு ஜோடாகக் கழுதைகளின் மேலும் ஒட்டகங்களின் மேலும் ஏறி வருகின்றவர்களையும் மிகுந்த கவனமாகக் கவனித்துக் கொண்டே இருந்து.... (ஏசாயா 21:7)

💥ஜோடு ஜோடாக கழுதைகளின் மேலும் என்ற சொற்றொடர் ஒவ்வொரு கழுதையிலும் இரண்டிரண்டு நபர்கள் ஏறி வருவதைக் குறிக்கிறது என்பதை அனைவரும்  அறியலாம். இரண்டு கழுதைகளின் மேல் ஒருவர் ஏறுவது என்பதே இதன் பொருள் என்று மாத்தேயு விளங்கிக் கொண்டு பின்வருமாறு கூறுகிறார்.

📖சீஷர் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழதையையும் கழுதைக் குட்டியையும் கொண்டு வந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போடவே அவர் அவைகளின் மேல் உட்கார்ந்தார். (மத்தேயு 21:7)

⛪இயேசு ஒரே நேரத்தில் இரண்டு கழதைகளின் மீது ஏறியதாக மத்தேயு கூறியது ஏன் தெரிகிறதா? ஜோடு ஜோடாக கழுதைகளின் மேல் என்பதை ஜோடிக் கழுதை எனப் புரிந்து கொண்டது தான் காரணம்.

👆🏻இந்த முன்னறிவிப்பில் ஜோடி ஜோடியாக வரக்கூடிய குதிரை வீர்ர்கள், கழுதையில் ஜோடி ஜோடியாய சவாரி செய்து வரக்கூடியவர்கள். ஒட்டகத்தில் ஜோடி ஜோடியாக வரக்கூடியவர்கள் என்றெல்லாம் கூறப்படுகிறன்றது. 

💥தனி ஒரு மனிதரைப் பற்றி இந்த முன்னறிவிப்புகள் கூறவில்லை. ஒரு சமுதாயத்தைப் பற்றி ஒரு குழுவைப் பற்றி கூறப்படுகின்றது. என்பதை  அனைவரும் விளங்க முடியும்.

💥ஒரு மனிதரைப் பற்றிய முன்னறிவிப்பு என்றே வைத்துக் கொண்டாலும் கழுதையில் ஏறியது மட்டும் தானே புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இரண்டு ஒட்டகங்கள் மீது இயேசு எப்போது ஏறினார்? ஜோடு ஜோடான குதிரை வீரர் எங்கே? இதையெல்லாம் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

👆🏻இந்த வசனத்தில் கூறப்படும் முன்னறிவிப்பு எது❓ 

👆🏻இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இதைத் தொடர்ந்து கூறப்படும் மற்ற வசனங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

🔺 அந்த வசனங்களைப் பாருங்கள்👇🏻


💥இன்ஷா அல்லாஹ் 

💥  தொடரும் ...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 26  FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment