Sunday 13 March 2016

🔰ஒழுக்கமில்லா கல்வி🔰 🍀பகுதி7⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
 
       🍁கல்வி🍁

🔰ஒழுக்கமில்லா  கல்வி🔰
           🍀பகுதி7⃣


♨நாம் கல்வி சம்மந்தமாக பார்த்து கொண்டு இருக்கிறோம்

♨கல்விக்கு மிக முக்கியம் ஒழுக்கம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

♨அதைபற்றி நமது நபி அவர்கள் கூறுவதை பாருங்கள்


📓من لا أدب له ولا علم له

யாரடத்தில் ஒழுக்கமில்லையோ அவரிடத்தில்  கல்வி இல்லை

(முஸ்லிம்)


♨எவரிடத்தில் ஒழுக்கம் இல்லையோ அவரிடத்தில் கல்வி இருக்காது என்று மேலே உள்ள ஹதீஸ் நமக்கு தெளிவாக விளக்குகிறது


♨ஆனால் இன்றைய காலக்கட்டதில் அவை உள்ளதா என்றால் 💯இல்லை


♨அதற்க்கு பல உதாரணங்களை நாம் கூறலாம்

🔺இன்றைய மாணவர்கள் படிக்கும் காலத்திலே ஆசிரியர்களை மதிப்பதில்லை

🔺 பெற்றோரை மதிப்பதில்லை

🔺பெரியவர்களுக்கு கண்ணியம் செலுத்துவதில்லை

♨காரணம் ஒழுக்கம் அவர்களிடத்தில் இல்லை


♨அதனால் ஏற்படும் விளைவு பெற்ற பிள்ளைகளே பெற்றோரை திட்டும்.அடிக்கும் அவல நிலையை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

♨கல்வி கற்றபின் ஒரு ஆணவம் வந்துவிடுகிறது பெரியோர்களை.உறவினர்களை மதிப்பது கிடையாது.


♨ஒருவர் கல்விகற்று உயர்ந்த பதவியில் இருக்கும் நபருக்கு உபதேசம் செய்தால் உபதேசம் செய்பவரை ஏளனமாக கேவலமாக பார்ப்பது


♨இன்னும் இது போல் சொல்லிக்கொண்டே போகலாம் ஒழுக்கமில்லாமல் கற்கும் கல்வியினால் ஏற்படும் அவலநிலையை

♨இதற்கு முக்கிய காரணமாக பெற்றோர்களாக
இருக்கிறார்கள்

♨அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் போதே ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்

♨இஸ்லாமிய முறைப்படி வளர்க்க படும் குழந்தைகள் ஒழுக்கமுள்ளதாக இருக்கும்

♨ஆனால் கல்வியை கற்பது ஏதோ Exam இல் எழுதுவது மட்டும் இல்லை

 ♨ மாறாக அதனை நமது வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டும்.


♨ஆனால் இன்றைய கல்வியின் நிலமை முற்றிலும் அதற்க்கு  மாற்றமாக தான் உள்ளது


♨நபி (ஸல்) அவர்களின் காலத்தில்  கற்ற கல்வி.செயல் வடிவமாக இருந்தது

♨அதன் காரணமாக அவர்கள் உலகையே ஆண்டனர் அதற்கான தகுதியும் அவர்களுக்கு வந்தது

♨ஆனால் இன்று கல்வியினால் எந்த ஒழுக்கத்தை கற்க வேண்டுமோ அதை கற்கவில்லை இந்த கல்வியாளர்கள்


♨இந்த காலத்தில் 80% மாணவர்.மாணவியர்கள் தான் ஒவ்வொரு தப்பும் செய்கிறனர்.

♨படிக்கும் போதே

🔺ரேகிங்(Raging)செய்வது

🔺புகைப்பிடிப்பது

🔺 மது அருந்துவது
இன்னும் பல விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

♨இந்த உலக கல்வியை ஒழுக்கம் இன்றி கற்பதினால் பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு  பயப்படும் அவல நிலை உருவாகிவிட்டது.

♨அந்த கல்வி இந்த உலகத்தில் வெற்றிபோல் காட்சி அளித்தாலும் மறுமையில் வெற்றியை கொடுக்குமா என்றால் நிச்சயமாக.இல்லை


♨கல்வியினால் என்ன வர வேண்டும்

🔺கல்வியினால் நாம் தெளிவு பெற வேண்டும்

🔺கல்வியினால்  இறைவனின் பொருத்தத்தை அடைய வேண்டும்

🔺கல்வியினால் நம்மிடம் ஒழுக்கம் வர வேண்டும்

🔺நாம் கற்கும் கல்வி இம்மை&மறுமை இரண்டிலும் உதவ வேண்டும்

🔺கற்கும் கல்வியினால் இறைவன் பொருந்திகொள்ள வேண்டும்

👆🏻இது  தான் உண்மையான கல்வி நிலை

♨இந்த விஷயங்கள் தான் நாம் கல்வி கற்பதின் மூலம் வர வேண்டும்.

♨அடுத்த தொடரிலே.கல்வி&கலை பற்றி தெளிவாக பார்போம் இன்ஷா அல்லாஹ்


📓அல்லாஹ்வை அவனுடைய அடியார்களிலிருந்து அஞ்சுபவரெல்லாம் அறிஞர்களே.

(ஃபாதிர்:28)

................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 28 JAN 2016

No comments:

Post a Comment