Tuesday 15 March 2016

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 7
   
👩🏻பெண்ணுரிமை👩🏻

💠நாம் இத்தா வை பற்றி ஆரம்பிப்பதற்கு  முன் மார்க்கம் இத்தாவைப்பற்றி என்ன தெளிவுபடுத்துகிறது என்பதை ஆராய்வோம்..

☀காரணம் என்னவென்றால் அறியாமையின் காரணமாகவும்,
வெறுப்பு கண்ணோத்துடனும் சிலர் கூறுவார்கள்

👳🏻ஆண்கள் மட்டும் மறுமணம் எப்போது நினைக்கிறார்களோ அப்போது செய்துகொள்ளலாம்.

          🔹ஆனால்🔹

👩🏻பெண்களுக்கு மட்டும் நான்கு மாதம் மூன்று மாதம் குழந்தை பிறக்கும் வரை இத்தா இருக்கனும்
(அதாவது தனிமையில் இருக்கனுமாம்)

👩🏻பெண்களை தனிமையில் வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

❌அவர்களுக்கு சுதந்திரம்  வழங்குவதில்லை❌

❌அபசக்குணம் என்று கூறி நற்காரியங்களில் ஒதுக்கி வைக்கிறார்கள்.


❌போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

👆🏻இதுவெல்லாம் இஸ்லாம் ஒரு போதும் சொல்லவில்லை✔

🔆இஸ்லாம் இந்த இத்தா விஷயத்திலும் பெண்களின் நலன் கருதியே அந்த சட்டத்தை முன்வைக்கிறது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

🔆இஸ்லாம் ஏன் இத்தாவை கட்டாயப்படுத்த வேண்டும் என நாம் சிந்தித்தால் நமக்கு விளக்கம் கிடைக்கும்.

🔆பிறகு இத்தாவை எதிர்பவர்களே அதை ஆதரிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

🔆அதை பற்றிய தெளிவுப்பெறுவதற்கு முன் அல்குர்ஆன் விளக்கத்தை பார்ப்போம்.


📓விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அல்குர்ஆன் (2 : 228)

📓கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்குர்ஆன் (65 : 4)

👆🏻இந்த வசனங்கள்  அந்த குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பிணி பெண்கள் விதி விலக்கு ஏற்படுகிறார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

🔹எனவே      
           சிந்தித்துப்பாருங்கள்❓

👆🏻இந்த குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்தால் வரும் பிரச்சனைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

👍🏻எனவே இஸ்லாம் தெளிவான விளக்கத்தை தருகிறது.

❌தேவையற்ற குற்றச்சாட்டுகளை தவிர்த்திடுங்கள்❌

✔ இத்தா காலக்கட்டத்திலும் பெண்களுக்கான சில தேவைகளை நிறைவேற்ற அனுமதி வழங்குகிறது.

❌ஆனால் வீணாக ஊர் சுற்றுவது கூடாது❌


🔆அது சம்மந்தமாக கீழே உள்ள ஹதீஸ்👇🏻


📓என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (‘இத்தா’வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார்.

(இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார்.

ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், ”ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.
அறிவிப்பவர் :

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­)
நூல் : முஸ்லிம் (2972)

👆🏻இத்தா சம்மந்தமாக இன்னும் பல வசனங்கள் பல ஹதீஸ்கள் தெளிவாக உள்ளது நமது நோக்கம் அதை விவரிப்பது கிடையாது.

🔆மார்க்கம் ஒரு விசயத்தை சரி என கூறினாலும் தவறு என கூறினாலும்

    🔹சுப்ஹானல்லாஹ்🔹

அதை ஆராய்ந்தால் ஆயிரம் தெளிவுகள் கிடைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

✔ஆராய்ந்து தெளிவுப்பெறுவோம்✔

❓ஏன் இஸ்லாம் இத்தாவை  வலியுறுத்த வேண்டும்
 இன்ஷா அல்லாஹ் தெளிவாக அடுத்த தொடரிலே பார்போம்.


  💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment