Tuesday 21 June 2016

நோன்பு வைக்க முடியாதவர்கள்-பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠


🌴 *முற்றிலும் நோன்பு வைக்க முடியாதவர் என்ன செய்ய வேண்டும்?*​🌴  

                 💥 *பகுதி-2*

💐இன்னும்  ""நோன்பு நோற்பதே சிறப்பாகும்""      என்ற குர்ஆனின் வாசகம் நீங்காத நோயாலியை பார்த்தும், வயோதிகரைப் பார்த்தும்தான் சலுகை வழங்குகிறது.. என்று இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறினார்கள்  என்று அதா(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்..            நூல்:நஸாயி:2329.  

💐  ​ஆக அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே!!​  2:184 வது வசனத்தில் யார் சக்தி பெற்றுயிருப்பாரோ அவர் ஃபித்யா கொடுக்கட்டும் என்பது,." நோன்பு வைக்க முற்றிலும் கடுமையான சூழலை பெற்றவர்கள்தான் என்பதை மேலே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் விளக்கத்தின் மூலம் புரிந்து கொண்டோம்...

🏮எனவே இந்த. விளக்கத்தின் அடிப்படையில்தான் (யுதீகூனஹு)என்ற வாசகத்திற்கு "நோன்பு வைக்க சக்தி பெறாதவர்கள்""என்று நாம் தமிழாக்கம் செய்கின்றோம்...இது தவறும் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

💥 யாரோ சிலர் கூறுகிறார்கள் என்பதர்காக அல்லாஹ்வின் வஹுயை மறுக்க கூடாது.

💥சிலர் கூறுகிறார்கள்👇🏼

💥நம்மால் நோன்பு நோற்க்க முடியாவிட்டால் யா அல்லாஹ் மன்னித்திடு யா அல்லாஹ் என்று இருந்துவிட்டால் போதும் ..விட்ட நோன்பிற்காக எதுவும் செய்ய தேவையில்லை என்று அல்லாஹ் நிர்ணயித்த சட்டத்திற்கு மாற்றமாக கூறுகின்றனர்.. அதற்கு முட்டு கொடுப்பதற்கு ஒரு குர்ஆனின் வசனத்தையும் கூறுகின்றனர்...

💥يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ َ
286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

💥திருக்குர்ஆன்  2:286.    
இந்த ஆயத்தை வைத்து நோன்பு நோற்கமுடியாதவர் ஃபித்யா கொடுக்க தேவையில்லை என்று சிலர் கூறுகின்றனர்...

💥 ஆனால் இந்த ஆயத்திற்கும் ஃபித்யா கொடுக்க வேண்டும் என்று சொல்லுவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது..

🌴 ஏனென்றால் நாம் இஸ்லாம் ஏவாத யாராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை சொல்லி இருந்தால் இந்த ஆயத்தை அவர்கள் ஆதாரமாக காட்டலாம்..ஆனால் அல்லாஹ் கூறிய ஒரு இழகுவான சட்டத்தை யாராலும் நிறைவேற்றவே முடியாதது போன்று சித்தரித்து நோன்பு பிடிக்க முடியாதவர் ஃபித்யா கொடுக்க தேவையில்லை என்று மார்க்கத்தை துண்டாடுவதை நினைக்கும் சமயம் மிக வேதணையாக உள்ளது....

🌴அன்பான அல்லாஹ்வின் நல்லடியார்களே!!!

🌴  அல்லாஹ் நோன்பு பிடிக்க முடியாதவர்களை நிச்சயமாக நோன்பு நோற்கும்படி எங்கும் கட்டளையிடவே இல்லை...நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் நோன்பு நோற்றே ஆகவேண்டும் என்று கூறினால் அப்பொழுது அவர்கள் மேற்கூறிய ஆயத்தை காட்டலாம்..ஆனால் நோன்பு வைக்க முடியாதவர் ஃபித்யா கொடுக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறான்..


         🌴தொடரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment