Friday 6 May 2016

நீ செய்யும் தர்மம் யாருக்காக

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍃நீ செய்யும் தர்மம் யாருக்காக🍃

🍃மனிதா நீ கர்வம் கொள்வது ஏன்?

🍃பெருமை அடிப்பது ஏன் நீ செய்யும் தர்மம் யாருக்காக சிந்திக்க மாட்டாயா?

🍃நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்👇🏼


🍃சதி செய்பவனும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்”

 (ஆதாரம் : நஸயி, திர்மிதி)


🍃உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை நடைமுறை படுத்திய மார்க்கமே இஸ்லாம் தான்

🍃ஆனால்.....


🍃ஆனால் இன்றையகாலத்தில் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்க்காகவும் தன்னை மக்கள்  வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்க்காகவும்

🔺தினசரிகளில் விளம்பரம் செய்தும்

🔺போஸ்டர் அடித்து ஒட்டியும்

🔺கொடுக்கும் பொருளில் தன் பெயரை போட வேண்டும் என்று

🍃தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே பாராட்டிக்கொள்ளும் அவல நிலையை நாம் கண்கூடாக பார்கிறோம்.

🍃சிந்தனை செய்⁉

🍃ஆனால் சிலர் இறைவனுக்கு பயந்து அவனுக்கு கட்டுப்பட்டு
இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும்

🍃என்று எண்ணி பெரிய அளவில்  தர்மம் செய்வதை  யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர்.

🍃தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர்.

👆🏽இத்தகையோர்க்கு நற்கூலியை இறைவன் வழங்குவான்.

🍃ஆனால் சிலர்

🍃தான தர்மங்கள் அனைத்தையும் செய்வார்கள் அவரால் பயன்பெற்றவர் அவருக்கு கட்டுப்படவில்லை யென்றால்

🔺என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்.
🔺நான் தான் நீ இத்தகைய நிலைக்கு உயர உதவி செய்தேன்.
🔺நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன?

👆🏽இது  போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர்.

⁉ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

📓“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

🍃சகோதர சகோதரிகளே!!!

🍃நாம் கஷ்டப்பட்டு செய்து சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிவுசெயலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அல்லவா????

🔺சிந்திக்க வேண்டாமா⁉⁉

💫யா அல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து எங்களை காப்பாயாக!!!!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 07 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment