Friday 13 May 2016

ஸலாம்-பகுதி - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    💥ஸலாம்💥
    💥பகுதி - 3⃣

🌴அன்புசகோதரர்களே❕ நாம் சென்ற தொடரிலே ஸலாம் சம்மந்தமாக சில விசயங்களை பார்த்தோம் இந்த தொடரிலே வீட்டில் ஸலாம் கூறுவதை பற்றி பார்ப்போம்👍


🏤வீட்டில் நுழையும் போது சலாம்
கூறுங்கள்✔

🏤வீட்டிற்குள்
நுழையும் போது சலாம் சொல்லி நுழையும் பழக்கம் நம்மில்அதிகமானோரிடத்தில் இல்லை.

🏤நாகரீகத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலக்கட்டத்தில் கூட அதிகமானோர் இந்த விசயத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.

🏤தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் சலாம் சொல்லியே வீட்டிற்க்குள் நுழையவேண்டும் என நம் மார்க்கம் நமக்கு கற்றுதருகிறது.

⁉ஏன் மார்க்கம் இவ்வாறு கட்டளை இடுகிறது⁉

🏤ஒருவருடைய
 வீட்டிற்கு நாம்செல்லும் போது அவர் எந்த
நிலையில் இருப்பார் என்பது நமக்கு தெரியாது.

🏤 பெண்கள்
பெரும்பாலும் வெளியே
 தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில் மறைக்கமாட்டார்கள்.

🏤தன்னுடைய
வீடுஎன்பதால் ஆடை விஷயத்தில் கவனக்குறைவாக
இருப்பார்கள் வருபவர் சலாம் கூறி அனுமதி பெற்றுநுழைந்தால்
யாரோ ஒருவர் வருகிறார்
என்று அவர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள்.

   🏤பிறரது
வீட்டில் அனுமதியின்றி
நுழைவது ஒழுக்கக்
கேடானசெயலாகவும் உள்ளது.

⁉மனிதனுக்கு
ஒழுக்க மாண்புகளை
கற்றுத்தருகின்ற இஸ்லாம் இந்த ஒழுங்குமுறையைமிகவும் வலியுறுத்திச் சொல்கிறது.

🏤சலாம் கூறாமலும் அனுமதி பெறாமலும்வீட்டிற்குள்
நுழைவதை இஸ்லாம் தடை செய்கிறது.

☝🏻அல்லாஹ் கூறுகிறான்👇🏼

   📓நம்பிக்கை
கொண்டோரே!
உங்கள்வீடுகள் அல்லாத வேறு வீடுகளில்அவர்களின் அனுமதி பெறாமலும்
அவ்வீட்டாருக்கு ஸலாம்
கூறாமலும்நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச்சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

📓அங்கே
எவரையும் நீங்கள்காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை
அங்கே
நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!''
என்று
உங்களுக்குக் கூறப்பட்டால்திரும்பி விடுங்கள்! அதுவேஉங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள்செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் (24 : 28)


☝🏻அல்லாஹ்வின் தூதர்
நபி (ஸல்) அவர்கள்
ஒருவருடைய இல்லத்திற்குச் செல்லும் போது மூன்றுமுறை சலாம் கூறி அனுமதி
கோருவார்கள் பதில் வந்தால் வீட்டின்
உள்ளே செல்வார்கள் இல்லெயென்றால்திரும்பச் சென்றுவிடுவார்கள்.

📓நபி (ஸல்) அவர்கள்
சஃத் பின்உபாதா அவர்களிடம் (வீட்டின் உள்ளேவர) அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹ் என்று சலாம் கூறிஅனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்)அவர்களுக்குக் கேட்காதவாறு(வேண்டுமென்றே) வஅலைக்கும் சலாம்வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை சலாம்சொல்ல சஃதும் மூன்று முறைபெமானாருக்குக் கேட்காதவாறுபதில்சலாம் கூறினார்கள். நபி (ஸல்)அவர்கள் திரும்பிவிட்டார்கள். சஃத்அவர்களை பின்தொடர்ந்து சென்றுஅல்லாஹ்வின் தூதரே என்தாயும்தந்தையும் தங்களுக்குஅற்பணமாகட்டும். நீங்கள் கூறிய சலாம்அனைத்தும் என்காதில் விழாமல்இருக்கவில்லை. உங்களுக்குக்கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில்கூறினேன். உங்களது சலாத்தையும்பரகத்தையும் நான் அதிகம் பெறவிரும்பினேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அஹ்மத் (11957,14928)


🌴ஆகவே நமது வீடாக இருந்தாலும் சரி மற்றவர்கள் வீடாக இருந்தாலும் சரி ஸலாம் கூறி அனுமதி பெற்று நுழைவோம்👍


    💥  தொட.....ரும்....

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 MAY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment