Friday 1 April 2016

ஏப்ரல் 1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

           🚫ஏப்ரல் 1🚫

🎭அறியாமையின் வெளிப்பாடே முட்டாள் தினம்🎭

✳மனிதனை முட்டாள் ஆக்கும் தினம் மார்க்கத்தில் உள்ளதா❓

❤கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே

🏮இந்த உலகத்தில் வாழ்ந்த சில மூடர்கள் அவர்களின் அறியாமையின் காரணத்தாலும் தங்கள் புகழை இந்த உலகத்தில் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் சில தினங்களை தோற்றுவிக்கின்றனர்

⭕அதில் ஒரு தினம் தான் இந்த உலக முட்டாள் தினம்.

 ✅இதற்கு இஸ்லாத்திற்கு எந்த சம்மதமும் இல்லை என்பதை இதற்கு முன் பகுதிகள் வாயிலாக பார்த்தோம்.

🔰ஆனால் நம்மில் இருக்கும் சில சகோதரர்கள் விளையாட்டிற்காகவும், சந்தோஷத்திற்காகவும் இந்த நாள் வந்தவுடன் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிறரிடம் பொய்யை கூறிக்கொண்டு அவர்களை ஏமாற்றுகின்றனர்.



🚫இதை பார்க்கும் எமக்கும் இதில் என்ன இருக்கு?இது ஒரு சாதாரண விளையாட்டு தான் என்று தோன்றும்.


✳இந்த தினத்தை கொண்டாடுவதின் காரம் பல ஹதீஸ்களையும் பல வசனங்களையும் நமது சகோதரர்கள் அறிந்தும் அறியாமலும் நிராகரிப்பதே ஆகும்.


💔இந்த தினத்தை கொண்டாடுவதின் மூலம் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியுமா❓

❌இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவது கூடத் தடுக்கப்பட்டுள்ளது.❌


❌அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.❌

🔰முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் –
📚ஆதாரம்:  (திர்மிதி, அபூதாவூத்)

✅எம்தூதரே உனக்கு கேடு உண்டாகட்டும் என்று சபித்தற்கு பிறகு நீங்கள் யாருடைய சிபாரிசை பெறப்போகிறீர்கள்❓

♦ஒன்று இல்லாத இந்த அர்ப்ப துன்யாவில் உள்ள இந்த அற்ப தினத்திற்காக வேண்டி எம்தூதர் உடைய சிபாரிசை இழக்க தயாராகிறீர்கள்❓


இன்னும் பல வசனங்களும் ஹதீஸ்களும் இந்த தினத்திற்கு எதிராக உள்ளது.


❤சகோதரர்களே❗❕

💥நாம் பல தினங்களை  சம்மந்தம் இல்லாமலே கொண்டாடுகிறோம்.


✳இதை பற்றி நமது இறைவன் நம்மிடம் கேள்வி கேட்டால் நம்மிடம் என்ன பதில் இருக்கிறது❓

♦சிந்தித்துப்பாருங்கள்♦

🔰யார் பிற மத கலாச்சாரத்தை கொண்டாடுகிறார்களோ அவர்களும் அவரை சாந்தவர் என்ற நபி மொழி நினைவு இல்லையா?

💥இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான

♦பொய் பேசுதல்,
♦பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல்,
♦ஏமாற்றுதல்

🔃ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்த்தால் தானே,மற்ற சகோதரர் நம்மை பார்த்து திருந்துவார்கள்.

🔰 இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுவதை கேளுங்கள்👇🏻

🔰“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)

💥அதை போல் அல்லாஹ் மிக தெளிவாக தன் திருமறையில் சொல்கிறான் யார் பொய்யை கூறுகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய வசனத்தை நம்பாதவர்கள் என்று..

✳ஒருவன் குர்ஆனுடைய வசனங்களை நம்பவில்லை என்றால் முஸ்லிம் இல்லை.

🔰அல்லாஹ் கூறுவதை பார்த்தும் நீங்கள் இந்த பொய்யை கூற தயார் என்றால் அதற்கு நிச்சயம் கூலியை மறுமையில் பெறுவீர்கள் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

❤ஆகவே கண்னியத்திற்குயவர்களே நாம் ஒரு முஸ்லிம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு சம்மதம் இல்லாதவற்றிற்கு பக்கம் செல்லாமல் இருப்பதுடன்,

💥இனிவரக்கூடிய காலங்களில் எம்தூதர் எச்சரித்த இந்த பொய்யை பேசாமல் வாழ முயற்சிப்போம்

💥இன்ஷா அல்லாஹ் அதற்கு அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.

💥வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக ஆமீன்.



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 01 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment