Sunday 3 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫


🌿நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களுக்கு பல கடமைகளை விதித்திருக்கிறான் :

🌿 அவற்றை பாழ் படுத்தக் கூடாது.

 ☘பல சட்ட வரம்புகளை நிர்ணயித்துள்ளான் :

☘ அவற்றை தகர்த்திடக் கூடாது.

🍁பல செயல்களை விலக்கியுள்ளான்:  அவற்றை செய்யக்கூடாது.

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் தனது நூலில்

🔹எவற்றை ஆகுமானதாக ஆக்கியுள்ளானோ அவைகள் அனைத்தும் ஆகுமானவை.

🔹எவைகளை விளக்கியுள்ளானோ அவை அனைத்தும் விலக்கப்பட்டவை.

🔹அல்லாஹ் எதை தெளிவு படுத்தாமல் மவுனம் காத்துள்ளானோ, அவை சலுகைகள்.
எனவே அச்சலுகைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

🔸நிச்சயமாக அல்லாஹ் எதையும் மறந்துவிட மாட்டான்"
 என்று கூறி விட்டு பின்னர் கீழ்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

💥.. உம் இறைவன் மறப்பவனாக இல்லை ",
             
📖 ( ஸூரா மர்யம் 19:64)
📓(முஸ்தத்ரகுல் ஹாகிம்)

🍁அல்லாஹ்வால் (ஹராமாக்கப்பட்டு)விலக்கப்பட்டவை அனைத்தும் அவன் நமக்கு விதித்திருக்கிற வரம்புகளாகும்.

📖இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகள் . ஆதலால் அவ்வரம்புகளை (மீற) நீங்கள் நெருங்காதீர்கள் (2:187)


📖எவன் அல்லாஹ்விற்க்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்படுத்திய வரம்புகளை மீறுகிறானோ,
அவனை நரகத்தில் புகுத்தி விடுவான் ,
அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான்.
இழிவு படுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு..  (4:14)

🍄இன்று வாழக் கூடிய எம் சகோதர சகோதரிகள் சர்வசாதாரணமாக அல்லாஹ் எதையெல்லாம் ஆகுமாக்கப்பட்டதாக ஆக்கினானோ அவற்றை விட்டு தூரமாகி

🍄எதை எல்லாம் அல்லாஹ் விலக்கினானோ அதை நெருங்க கூடிய சமுதாயமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

♻அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்

🌿குறுகிய அறிவும் பலவீனமான உள்ளமும் கொண்டு மனோ இச்சையை பின்பற்றுவோர்,
தடை செய்யப்பட்ட விஷயங்களை பற்றி கேட்கும் போது சலிப்புடன் கூறுகிறார்கள் :

🌿மார்க்கம் இலகுவாக இருந்தும் இந்த அறிஞர்கள் அனைத்தையும் ஹராம் என்று கூறி எங்கள் வாழ்வை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதை கசப்பாக்கி விட்டார்கள்

☘அல்லாஹ் எம்மை முஸ்லிமாக படைத்ததே தமக்கு அல்லாஹ் செய்த மிக பெரிய கிருபை ஆனால் நாம் ஒரு கடுகளவு கூட அவன் செய்த கிருபையை நினைக்காமல் அவனுக்கும் அவனுடைய சட்டத்திற்கும் மாறு செய்கிறோம்.

☘அல்லாஹ்வின் சட்டத்தை மாறு செய்தவர்களை  அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றியதை பற்றி அவன் தன் திருமறையில்  கூறுவதை நீங்கள் பார்க்க வில்லையா❓

🏮ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்


🍁நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதை சட்டமாக்குகிறான்;
அவன் மிக நுட்பமாக அறிந்தவனும் ஞானமிக்கவனும் ஆவான்
அவன் நாடியதை ஆகுமாக்கவும்
நாடியதை தடை செய்யவும் முழு உரிமை பெற்றவன்
நாம் அல்லாஹ்வின் அடிமைகள்
எனவே அவனது சட்டங்களை மனமுவந்து எவ்வித ஆட்சேபனையுமின்றி பொருந்தி கொள்வது கடமையாகும்...

 🍃இன்ஷா அல்லாஹ் தொடரும்.....



🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment