Friday 22 April 2016

எத்தனை பேர் இன்று முஸ்லிம்❓

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🔱எத்தனை பேர் இன்று முஸ்லிம்❓

🌟மதினாவை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த பனீ அஸத்,பனூ கத்ஃபான்,பனூ  தைபா,பனூ கர்ரா,பனூ அப்ஸ் ,பனூ துனையான் ஆகிய கோத்திரத்தார்கள் அபூபக்ர்(ரழி) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்பதாக அதில் ஒரு நிபந்தனை வைத்து கலிஃபா அபூபக்ர் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

🌟அது நிபந்தனை என்னவென்றால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பார்கள் ஆனால் ஸகாத் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் அந்த நிபந்தனை.

👆🏻இதை கேட்டவுடன் அபூபக்ர் (ரழி) நான் ஆலோசனை செய்து விட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு உமர்(ரழி) அவர்களிடம் ஆலோசனை செய்தார்கள்

💥அந்த காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு நாலாபக்கமும் நெருக்குதல் அதிகரித்து கொண்டு இருந்தது.

💈இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து சில நாட்களில் பல கோத்திரத்தார்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியும்,பொய்த் தூதர்கள் உருவாகியும் வந்த காலகட்டம் அது!!!

🌟உமர் (ரழி) அவர்களுடன் ஆலோசனை செய்த பிறகு கலீஃபா அவர்கள் கூறினார்கள் ...

🌟இஸ்லாத்தை நீங்கள் எப்பொழுது ஏற்றுக் கொள்கின்றீர்களோ,அப்பொழுதிலிருந்து அது வலியுறுத்தும் அம்சங்களையும் நீங்கள் கடைப்பிடித்தாக வேண்டியது கட்டாயமாகும்.

🌟இஸ்லாத்தில் ஒரு காலும்,ஜாஹிலிய்யத்தில் மற்றொரு காலும் என்று வைத்துக் கொண்டிருக்க முடியாது.

⭕உங்களது மன இச்சைகளுக்குத் தகுந்தவண்ணம் இஸ்லாத்தின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டு,சில அம்சங்களை ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

🌟ஒன்று நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாத்திற்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும்

⭕இறுதியில் ஸகாத் பொருத்தவரையில்,ஒட்டகத்தின் மூக்கணாங் கயிறு அளவிற்கு நீங்கள் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பினும் அல்லாஹ்வின் தூதரது கலீஃபா என்ற தகுதியில் இருக்கும் நான்,அதனை உங்களிடம் இருந்து வசூலிப்பதற்காக உங்கள் மீது போரிடுவதும் கூட என் மீது கடமையானதாகும் என்றார்கள்.

💥மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் ஸகாத்திற்கு மட்டும் பொருந்தாது மொத்த இஸ்லாத்தின் அம்சங்களுக்கும்  பொருந்தும்

💠கண்ணியத்திற்குரியவர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் இன்று நாம் சர்வசாதாரணமாக இஸ்லாத்தின் அம்சங்களை உதாசீனம் படுத்திக்கொண்டு சர்வசாதாரணமாக நம்முடைய தேவைகளுக்காக அந்த அம்சங்களை உதறிவிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

🌟ஆனால் நாம் முஸ்லீம்  என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்

💠பெயரை வைத்துக் கொண்டு வேனும் என்றால் அவர்கள் ஒரு முஸ்லிம் என்று அடையாளம் காட்டி கொள்ளலாம்.

🔸ஆனால்...

☝🏾அல்லாஹ்வுடைய பார்வையிலும் அவனுடைய தூதருடைய பார்வையிலும் சஹாபாக்களுடைய பார்வையிலும் அவர்கள் முஸ்லிம் என்று அடையாளம் காணமாட்டார்கள்.

💠ஆகவே அன்பு சொந்தங்களே!!!!!

💥இஸ்லாத்தின் அம்சங்கள் அனைத்தையும் எம் வாழ்வில் நடைமுறை படுத்தி முஸ்லிமாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்

🍃வல்ல ரஹ்மான் அதற்கு உதவி செய்வானாக ஆமீன்


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment