Tuesday 12 April 2016

வட்டி பெரும் குற்றம் பகுதி-5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❎வட்டி பெரும் குற்றம்❎

            🔥பகுதி-5


💈நமது சமுகத்தில் வட்டி பல வழிகளில் நமக்கே தெரியாமல் நமது வாழ்க்கையில் பல ரூபத்தில் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

💈அந்த வகையிலே நாம் அறிந்தும் அறியாமலும் வாங்கும் புழக்கத்தில் உள்ள சில வட்டிகளை பார்ப்போம்👇🏻

💸வங்கிகளிலிருந்து பெறப்படும் வட்டி❌

💢ஒருவருடைய வங்கி கணக்கின் தொகையை பொறுத்தும் அந்த தொகை எவ்வளவு காலம் அந்த வங்கியின் கணக்கில் இருக்கிறது என்பதை பொறுத்தும் ஒரு கணிசமான தொகை அந்த வங்கியில் உள்ள நம்முடைய தொகையோடு சேர்க்கப் படுகிறது

👆🏻இந்த தொகையானது வட்டிதான் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை நாம் அனைவரும் தெரிந்த விஷயமே❗

💢சிலர் செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்காக வங்கியில் பணம் இருந்தால் அதிலிருந்து வட்டி வரும் அதன் மூலம் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.

👆🏻இது மாதிரி வைப்பது பெரும் குற்றம் ஆகும். அவர்கர்களுக்கு அல்லாஹ்வுடைய எச்சரிக்கை இருக்கிறது.

💢இன்னும் சிலர் வீட்டில் பணம் வைத்திருப்பதை விட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் பலர் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.


👆🏻இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான்.

❗❕ஆனால் இதன் மூலம் வரும் வட்டியை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது❓

💢அதற்கு இரண்டுவிதமான கருத்துக்களை கூறுவார்கள்.

1.சிலர் அந்த வட்டி தொகையை எடுத்து வேறு யாருக்காவது அதாவது ஏழைகளுக்கு கொடுத்து விடலாம் என்றும்

2 சிலர் அந்த தொகையை அந்த வங்கியிலேயே விட்டு விடுவது நல்லது என்று இரண்டு தீர்வுகள் நமக்கு முன்வைக்கப் படுகிறது.

👆🏻இதில் இரண்டாவது தீர்வே சிறந்தது ஏனென்றால்  அந்த வட்டி பணம் நம்முடைய பணம் இல்லை என்ற போது அதை நம்மால் எப்படி நம் இஷ்டம் போல் அதை பயன் படுத்த முடியும்.

✅அல்லது நாம் வங்கியில் எழுதி கொடுத்துவிடலாம் எனக்கு அதன் மூலம் வரும் வட்டி பணம் வேண்டாம் என்று.

📓வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)


📓வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா.)


🗯 தொடரும்.....

ⓂⓂⓂⓂⓂⓂⓂⓂⓂ

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 13 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment