Wednesday 6 April 2016

அனுமதிக்கப்பட்டவை தடுக்கப்பட்டவை பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

    ♻அனுமதிக்கப்பட்டவை
தடுக்கப்பட்டவை🚫

           
          🔵பகுதி-4⃣

❤அல்ஹம்துலில்லாஹ்

💠இதுவரை தடுக்கப்பட்டவைகளை பற்றி நாம் பார்த்தோம்
ஆகுமானவை பற்றி அல்லாஹ் குர்ஆன் ஷரீஃபில் கூறுகிறான்

📓மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (உண்ண உங்களுக்கு ) அனுமதிக்கப்பட்ட பரிசுத்தமானவற்றையே உண்ணுங்கள்
                       (2:167)

🌀இவ்வசனத்தின் மூலம் நல்லவை அனைத்தும் ஆகுமனவையே என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்

🌀பொதுவாக ஹராம் என்பதற்கான ஆதாரம் இல்லாத எதையும் ஹலால் என்றே நாம் ஏற்க வேண்டும் .
இது அல்லாஹ் நமக்கு செய்த கருனையும் மகத்தான உபகாரமுமாகும். இதற்காக நாம் இறைவனுக்கு அதிகம் நன்றி செலுத்த வேண்டும் .

🌀மார்க்கத்தை விளங்கிக்கொள்ளாத சிலர் ஹராமுடைய வகைகளை பார்க்கும் போது மனச்சங்கடதிற்க்கு ஆளாகிறார்கள் . ஹலால் உடைய வகைகளை கூறினால் மட்டும் மார்க்கம் இலகுவானது என்று இவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ன ❓

💠ஆகுமாக்கப்பட்ட நல்ல உணவுகளின் பட்டியல் இவர்களுக்கு விவரிக்கப்பட்டால் மார்க்கம் தங்களுடைய வாழ்க்கையை கசப்பாக்கி விடவில்லை என்று நிம்மதி பெறுவார்களா என்ன ❓❔

☘மார்க்கம் இலகுவானது தான் ‼
ஆனால் மக்கள் அதை தவறாக விளங்கிக் கொண்டார்கள் .

☘இலகுவானது என்பது மக்களின் மனோ இச்சை இன்னும் விருப்பங்களுக்கு ஏற்பவாறு அமைந்திருப்பது என்பது பொருளல்ல ; மாறாக மார்க்கம் கூறி இருக்கும் முறையில் தான் இலகு இருக்கிறது ...

☘மார்க்கம் இலகுவானது என்று கூறி தடை செய்யப்பட்டவற்றை செய்வதற்கும்  அனுமதித்தவற்றை செய்வதற்குமிடையே வேறுபாடு உண்டு.

🌿மார்க்கம் இலகுவானது என்பதன் பொருள் நம் மனோ இச்சையின் விருப்பத்திற்கேற்ப அமைந்துள்ளது என்பதல்ல.

🌿இது மட்டுமல்ல அல்லாஹ் சில பொருட்களை ஹராமாக்கி இருப்பதில் பல நுட்பங்கள் இருப்பதை முஸ்லிம்கள் உறுதியாக நம்ப வேண்டும் .
🔹உதாரணமாக அல்லாஹ் சில விஷயங்களை செய்யக்கூடாது என தன் அடியார்களை தடுத்து ,
அவர்கள் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதை சோதிக்கிறான் .

🔹இன்னும் சுவர்க்க வாசிகள் யார் நரக வாசிகள் என்பதையும் இதன் மூலம் சோதிக்கிறான்

🔺நரக வாசிகள் மனோ இச்சைகளையே பின்பற்றுவார்கள்.
நரகம் இச்சைகளைக் கொண்டே சூழப்பட்டிருக்கிறது .

🔸சுவர்க்க வாசிகள் மனதிற்கு சிரமமானதை பொறுமையுடன் சகித்துக் கொள்கிறார்கள் . சொர்க்கம் சிரமானவற்றைக் கொண்டே சூழப்பட்டுள்ளது ...


🍃இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் உள்ள சிரமத்தை நன்மையின் பார்வையுடனும் அல்லாஹ்வின் திருப்தியை வேண்டி கீழ்படிதலின் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அது அவர்களுக்கு சிரமமாக தெரிவதில்லை ...

🍁நயவஞ்சகர்கள் இறைக்கட்டளைகளில் உள்ள சிரமங்களை வேதனை மற்றும் இழப்பின் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் அது அவர்களுக்கு செயல்படுத்த முடியாத கடினமான காரியமாக தெரிகிறது ...


💠தடுக்கப்பட்டதை அல்லாஹ்விற்க்காக விடுவதின் மூலமே அடியான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதை விட சிறந்ததை பகரமாகப் பெறுகிறான், இறை நம்பிக்கையின் இன்பத்தையும் உள்ளத்தில் உணர்கிறான்...

💥அல்லாஹ்வே! எங்கள் அனைவரையும் நீ அமைத்த வரம்புகளை பேணி நடக்கும் நல்லருளை உன்னிடம் வேண்டுகிறோம்..


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 APR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment