Sunday 11 September 2016

செல்பி குர்பானி*📱

📱 *செல்பி குர்பானி*📱

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💈அன்பார்ந்த சகோதரர்களே இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் தியாக திருநாள் வர இருக்கிறது.!!

📱இந்த தியாக திருநாளில் நாம் செய்ய வேண்டிய  பல அமல்களை அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு கற்று  தந்து உள்ளனர்.!!

💈ஏழை மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.!!

💈உதவி செய்தோமா  ஆம் செய்தோம் .!!

💈ஆனால் இதை எல்லாம் நாம் மறுமைக்காக செய்தோமா என்றால்  இல்லை.!!

💈நாம் செய்தது எல்லாம் பிறருக்கு காட்ட செய்கிறோம்.!!

💈செல்பி கொண்டு நாம் தியாகம் பாழ்படுத்துகிறோம் .

💈இப்படி பட்டவர்களை அல்லாஹ் சொல்லுகிறான்.!!

🔰 *பிறருக்கு காட்ட அமல் செய்தால் அவர்கள் அமல் மறுமை நாளில் தூசிகளாக பறக்கவிட படும் என்று.!!*

💈ஏன் இந்த வசனம் இருப்பது தெரியாதா.?

💈இல்லை என்றால் அல்லாஹ்வின் வார்த்தையின்
முக்கியத்துவம் தெரியவில்லையா.??

💈இந்த மாதிரி செயல் யாரை சந்தோசம் படுத்துவதற்கு .!!

💈இறைவனையா அல்லது மற்றவர்களுக்கா?

💈குர்பானி கொடுப்பது செல்பி எடுப்பதற்காகவா.?

💈நாம் கொடுக்கும் குர்பானி இறைவனுக்கு பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.!!

💈இறைவன் இந்த குர்பானியை எற்று கொள்வானா என்ற பயம் தான் நமக்கு இருக்க வேண்டும்.!!

💈ஆனால் நமக்கோ நம்ம ஆட்டை விட யாரும் நம்ம  எரியாவில் பெரிசா வாங்க கூடாது என்ற கவலையில் இருக்கிறோம்.!!

💈இதில் செல்பியை குத்தகைக்கு எடுத்தவர் போல.!!

💈குர்பானி கொடுக்கும் போது ஒரு போட்டோ.!!

💈அறுக்கும் போது ஒரு போட்டோ .!!

💈அறுத்து முடிந்தவுடன் ஒரு போட்டோ.!!

💈பிரியாணி சாப்பிடும் போது ஒரு போட்டோ.!!

💈இதுல போட்டா நல்லா வரலனா  கவலை படுகிறோம்.!!

💈ஒரு உண்மையான  இறை அடியான் பற்றி அல்லாஹ் கூறுகிறான்..!!

🔰 *நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.*
*(அல்குர்ஆன் : 6:162)*

💈அல்லாஹ் சொல்லும் இந்த நிலை நம்மிடம் இருக்கிறாதா என்று சிந்தித்து பாருங்கள்.!!

💈நாங்க எல்லாம் கலிமா சொன்னவர்கள் என்று வெளியில் சொல்லும் முன் நம் நடை , உடை ,செயல்பாடுகள் , கலிமாவிற்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பாருங்கள்!!

💈ஆனால் நம் செயல் பாடு கலிமாவிற்கு மாற்றமாகவே இன்றைய கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நிசத்தமான உண்மை.!!

💈அன்பான சகோதர்களே .!!

💈நாம் இந்த உலகத்தின் சிறந்த சமுதாயத்தில் வாழ்கிறோம்.!!

💈எளிதாக மார்க்கம்(நேர்வழி) கிடைத்ததால் அதன் பயனை  நாம் அறியவில்லை.!!

💈மற்ற மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்களிடம் பாருங்கள்.!!

💈அப்போது புரியும்.!!

💈நம் வாழ்க்கையின் நோக்கம்.!!

💈காலை முழிப்பது முதல் இரவு தூங்கும் வரை எல்லா விசயங்களிலும் யூத ,நசரானிகள் சூழ்ச்சியில் வாழ்கிறோம்.!!

💈அவர்களால் சூழ்ச்சி செய்ய முடியாத ஒரு இடம் அல்லாஹ்வின் மார்க்கம் தான் .!!

💈அல்லஹ்வின் மார்க்கத்தை அழிக்க முடியாது என்பதால் ,
மாற்ற(அழிக்க)  அவர்களுக்கு நாமே பாலமாக செயல்படுவது தான் வெட்கம் பட வேண்டிய விசயம்.!!

💈இன்ஷா அல்லாஹ் வருகின்ற தியாக திருநாளை அல்லாஹ்வின் நிழலில் கொண்டாடும் பாக்கியத்தை அருள் புரியட்டும்.!!

💈செல்பியில்லாத திருநாள் கொண்டாடுவோம்.

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment