Wednesday 25 September 2019

மீண்டெழுவோம்

மீண்டெழுவோம்

💦பொருளாதார நெருக்கடி வரலாம்
வல்லுனர்கள் கணிப்பு
எதிர்வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது

💦ஆடம்பரப் பொருட்களும்
அத்தியாவசிய பொருட்களும்
வாங்கும் சக்தி
குறைந்துவிட்டது

💦கட்டுமானத்துறை முடங்கிவிட்டது பலதரப்பட்டவர்களுக்கும்
வியாபாரம் நடக்கவும்
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு
வாழ்வளிக்கவும் கட்டுமானத்துறை
முதலிடம் வகிக்கும்

💦தனியார் துறை ஊழியர்கள்
எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது
தமிழகத்தைப் பொருத்தவரை
அதன் தாக்கம் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை
இந்த நிலை வந்தால் வியாபாரம் இன்னும் மந்தமாகும்

💦 இப்படி ஒரு நிலைமை வருவதற்கு முன்பு
நாம் என்ன செய்ய வேண்டும்
என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்

#உணவு #மருத்துவம் #கல்வி
இது போன்ற செலவுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும்
இருந்தாலும் இவற்றிற்கு ஆகும் செலவுகளை குறைவாக
செய்ய பழகிக்கொள்ள
வேண்டும் இதைத்தவிர
மற்ற எல்லா வகையான செலவுகளையும்
தவிர்ப்பதே சிறந்த முடிவாகும்

💦குறிப்பாக ஆடம்பர வாகனம்
நகைகள் உடைகள் எலக்ட்ரிக்
எலக்ட்ரானிக்
பொருள்கள் இதுபோன்ற தேவைகளை நிலைமை சீராகும் வரை தள்ளி வைக்கலாம்

💦 நீண்ட தூரப் பயணங்களுக்கு
தனி வாகனத்தை பயன்படுத்துவதை
தவிர்க்க வேண்டும்

💦 இறைவன் கூறியவை மட்டுமே எக்காலத்திற்கும் பொருந்தும்.

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 7:31

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் நிறைந்தது.

அஹ்மத் 23388

💦திருமணங்களை குறைந்த செலவில் செய்வது இறை திருப்தியை பெறுவதோடு
இந்த கால சூழ்நிலைக்கும்
பொருத்தமாக இருக்கும்

💦 அத்தியாவசிய செலவுகளை தவிர மற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்

💦நிலைமை சீராகும் வரை
செலவுகளை குறைவாகச் செய்ய பழகிக் கொள்ள வேண்டும்
எந்த வகையிலும் கடன் வாங்க கூடாது
என்கிற உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

💦வருவாய்கள் முழுமையாக நின்றுவிடப் போவதில்லை
செலவுகளை குறைவாக செய்தாள்
வரும் வருவாயில் கடன் இல்லாமலும்
நம்மிடம்
இருப்பதை இழக்காமலும்
வாழ்ந்துவிடலாம்

💦ஏற்படவிருக்கும் மோசமான நிலைமையை
வீட்டிலிருக்கும் பெண்களிடமும்
புரிந்துகொள்ளும் வயதை அடைந்த குழந்தைகளிடமும்
பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
அவர்களின் ஒத்துழைப்பு
அவசியமான ஒன்றாகும்

💦பொதுவாகவே நெருக்கடியான காலம் வந்தால்
கொலை கொள்ளை போன்ற
அசம்பாவிதங்கள் நடைபெறும்
அதனால் பாதுகாப்பு
நடவடிக்கையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்

💦நமது நாடு எதையும் தாங்கும் தகுதியுடையது
கூடிய விரைவில் நிலைமை சீரடைந்து விடும்
நாடும் நாமும் மீண்டெழுவோம்
என்று
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்போம்

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

No comments:

Post a Comment