Saturday 13 October 2018

காதலின் பெயரால் எல்லை மீறுதல்

😱  *காதலின் பெயரால் எல்லை மீறுதல்* 😱

*ⓂAKKAL ⓂEDIA*

😱 *காதலித்து ஏமாற்றுபவர்களின் செய்திகள் பல்லாயிரக்கணக்கில் வந்துகொண்டிருந்தாலும் கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழும் காரியத்தை  பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.*

💯 *என் காதலன் நல்லவன் என்று அவனுடன் தனித்திருக்க துணிகிறார்கள். இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, ஏமாற்றப்பட்ட எல்லா காதலிகளும் தங்கள் காதலர்களை இப்படித்தான் நல்லவர்கள் என்று நம்பியிருந்தார்கள்.*

✅ *உண்மையில் நல்லவனாக இருந்தால் அன்னியப் பெண்ணுடன் காதல் என்ற பெயரை பயன்படுத்தி வெளியில் சுற்றவும் தனிமையில் இருக்கவும்,டேட்டிங் செய்யவோ மாட்டான்.*

🚫ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, டேட்டிங் செய்வது தான் காதல் என்றால் அந்த காதலை இஸ்லாம் கண்டிக்கிறது.

✅உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்களின் கண்ணியத்தை பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

💯கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.

🔘உங்கள் காதலன் ஏமாற்றிவிட்ட பின்பு நீங்கள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பின்பு நாளை உங்கள் காதல் கணவருக்கு தெரிய வந்தால்  ”திருமணத்திற்கு முன்பு நீ ஒருவனுடன் ஊர் சுத்தியவள்தானே” என்று கணவன் மனைவியைப் பார்த்து கேட்டாலே போதும் அவளுடைய கற்பு கேள்விக்குரியாகி விடும் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.

🔘கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது.

🔘இருவரும் தங்கள் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.

⚠ஒரு ஆண் அன்னியப் பெண்ணை பார்த்து ரசிக்கக் கூடாது என்பது மார்க்கத்தின் தடை உத்தரவு. இதை மீறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை, அல்லாஹ் கூறுகிறான்👇🏼

📖 இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மறைவிடங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும். இது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.

📖மேலும் இறைநம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். [அல்குர்ஆன் 24:30,31]

👉🏻இந்த வசனங்களில் ஆண், பெண் இருதரப்பினருக்கும் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளவும், கற்பைப் பேணிக்கொள்ளவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

⚠இது எல்லோருக்கும் பொதுவான கட்டளைதான், ஒருவர் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்பதற்காக இதை மீறக் கூடாது. ஏனென்றால் அவள் இவரது மனைவியல்ல, இவர் அவளைத் திருமணம் செய்ய இயலாமல் கூடப் போகலாம்.

உங்களுக்கு சில கேள்விகள்❓

🔹அன்பு மட்டும் தான் காதல் என்றால்

டேட்டிங் கலாச்சாரம் காதலா❓

😱திருமணத்திற்கு பின் சேரலாம் என்று இருக்கும் போது ஏன் இந்த உடலுறவு  வற்புறுத்தலாக முன்னரே நடக்கிறது❓

திருமணத்திற்கு முன்னே கற்பை இழந்தவர்களை  கெடுத்தவனே திருமணம் செய்ய மறுக்கிறானே. ஏன்❓

🔹அதுவும் காதல் என்றால் உங்கள் சகோதரிகளை அவ்வாறு அனுமதிப்பீற்களா❓

🔹வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களுக்கு கேவலத்தை கொடுப்பது தான் காதலா❓

🔹தற்கொலை செய்வது, காதலுக்கு மறுத்தால்  ஆசிட் ஊற்றுவது எல்லாம் காதலா❓

🔹காதலின் பெயரால் கற்பழித்து அவளின் வாழ்வை சீரழிப்பது தான் காதலா❓

🔹இவை எல்லாம் காதலின் பெயரால் நடைபெறவில்லையா❓

📖 *நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல.* நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.

🔥 *தவறான பார்வை மட்டுமின்றி தான் விரும்பும் பெண்ணுடன் கூடாத அசிங்கப் பேச்சுக்களைப் பேசுவதும், தவறான எண்ணத்துடன் தொடுவதும் சிறு விபச்சாரம் என்ற அடிப்படையில் இறைவனிடம் தீமையாக பதியப்படும். அதற்குத் தகுந்தாற்போல் மறுமையில் தண்டனையும் கிடைக்கும்.*

😱 ஆனால் இந்த செயல்களெல்லாம் காதல் என்ற பெயரால் நடந்தால் தவறில்லை என்று ஒழுக்கங்கெட்ட சமூக விரோதிகளால் சினிமாக்கள் மூலமும், கதைகள் மூலமும் சித்தரிக்கப்படுகிறது.

🚫 *வழிகேட்டு ஒழுக்கங்கெட்டுப் போனவர்கள் இந்த சித்தரிப்புகளை நடைமுறைப் படுத்தலாம் ஆனால் நல்வழியில் ஒழுக்கத்துடன் நடக்க விரும்பும் இறைநம்பிக்கையாளன் இதை எதிர்ப்பவனாகத் தான் இருப்பான்.*

⚠ *காதலிப்பவர்கள் கூடாத காரியங்களை செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல*

✅ *ஒழுக்கத்தையும் கவுரவத்தையும் விரும்பும் ஒருவன் இது போன்ற தீமைகளைத் தூண்டுகிற சூழ்நிலைகளை விட்டும் தூரமாக இருக்க வேண்டும்.*

🎙 *நமக்கு வரக்கூடிய கணவனை, மனைவியை ஒழுக்கமாக எதிர்பார்க்கும் நாம் மற்ற ஆண் ,பெண்களிடமும் ஒழுக்கத்தை பேண வேண்டும்.*

📖 *நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் பெண்ணுடன் தனியாக இருக்க வேண்டாம், அப்படியிருந்தால் அவர்களிருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருபான். [நூல்: அஹ்மத் 114, திர்மிதி 2165]*

⚠ *இது எல்லோருக்கும் பொதுவான எச்சரிக்கை என்றாலும் காதலிப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் அவசியம் பேண வேண்டியது. ஏனென்றால் அவர்களை ஷைத்தான் இலகுவாக வழிகெடுத்து விட வாய்ப்பு இவர்களுக்கு தான் அதிகம்.*

〰⚜〰⚜〰⚜〰⚜
⚜ *மக்கள் மீடியா Facebook பக்கத்தை like செய்து கொள்ளுங்கள்​*

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

*குழுமத்தில் இணை*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

No comments:

Post a Comment