Tuesday 15 March 2016

💥முஹம்மது நபி பற்றி 🏮இந்து வேதம் 🔥பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💥முஹம்மது நபி பற்றி    
           🏮இந்து வேதம்

                 🔥பகுதி1⃣


💥நபிகள் நாயகம்(ஸல்) பற்றி இந்து வேதம்

☝🏻அல்லாஹ்வின் இறுதித்தூதர் நம் கண்மணி நபிகள் நாயகம் ஸல் பற்றி எண்ணற்ற மத நூற்கள்,வேதங்கள்,எடுத்தியம்புகின்றன.

💥இதில்,குறிப்பாக பைபிள் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டையும்,இந்து மத பல்வேறு பிரிவு மற்றும் உட்பிரிவு வேதங்களிலும் காணக்கிடைக்கின்றன.

💥பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது👇🏻


📖“ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத” சிஷ்ய சாகா ஸமன்விதம்..”

(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)


👆🏻இதன் பொருள்👇🏻

💥அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்).”

💥அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து

💥இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

💥அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்.

💥அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் நாம் தெளிவு பெர

🌍உலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன.


👆🏻இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.

💥கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத்

💥தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


🚩சமஸ்கிருதத்தில் “விஷ்ணு” என்றால் இறைவன்(அல்லாஹ்)

🚩சோமாநிப்” எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி – சமாதனம் என்பதாகும். “ஆமினா” என்பதற்கும் அதுதான் பொருள்.

👍🏻அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.

💥கல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும்


👍🏻“நம்பிக்கையாளர்” என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

🍶ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை

👍🏻 “அல் அமீன்”
 (நம்பிக்கையாளர்) என்றும்  மக்கள் போற்றினர்.

💥மிகவும் உயர்ந்த குடும்பத்தில் – உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது.

💥மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் – ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்கள்.

🗻குகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது.


🗻“ஹிரா” குகையில் இருக்கும் போது தான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.

🔥கல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது.

🔻சுப்ஹானல்லாஹ்🔻


👆🏻இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது

🔥பகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது.

💥நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.

🐎குதிரையேற்றத்திலும்

📌அம்பு எய்வதிலும்

🗡 வாள் போரிலும்

🔥கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது.

💥முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.

💥🔥ஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார்.

🔥 அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.
இதேபோல் நிறைய, கணக்கற்ற வகையில் நபிகள் நாயகம் ஸல் பற்றி பல இந்து வேதங்கள் குறிப்பிடுகின்றன.

☝🏻இறைவன் நாடினால் சிறிது சிறிதாக பார்ப்போம்

🔥என்ன இந்து சகோதரர்களே❗

💥உங்களையும்,
எங்களையும் வழிகாட்ட வந்த தூதர்தான் நபிகள் நாயகம், நீங்கள் எங்கு செல்கிறீர்கள், நீங்கள் வர வேண்டிய இடம் இனிய இஸ்லாம்தான் அதுவே உங்களுக்கும், எங்களுக்கும் ஈடேற்றம் தரும்.

💥தொடரும்

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 03 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment