Sunday 2 April 2017

அனைத்து முஹல்லாவும் தயார் ஆகுமா?????



📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🕋 _பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்._🕋

💧உலகில் வாழக்கூடிய மனிதர்களுக்கு அல்லாஹ் சில சீற்றங்களால் சோதிக்கின்றான்.

💧 இயற்கை சீற்றங்களில் சில இடங்களில் மழையையே பொழியாமல் ஆக்குவதும் உண்டு.

💧 மழையின்றி மனிதன் வாழ முடியாச் சூழ்நிலையும் உருவாகலாம்.

💧இவ்வாறு பஞ்சம் வறட்சி போன்ற அபாயங்கள் ஏற்படும் போது மனிதன் துவண்டுவிடாமல் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

💧இத்தகைய வழிமுறையை தான் நபி (ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத்தந்தார்கள்.

🌧முதலாவதாக மழையை மனிதனால் வரவழைக்க முடியுமா❓

❌சிலர் சொல்வார்கள்...

🎻இசையால் மழையை வரவழைக்கமுடியும்,
🌴மரங்களை வளர்த்துவிட்டால் மழையை வரவழைத்து விடமுடியும்.

🗣யாகங்கள் நடத்தினால் மழையை வரவழைத்துவிட முடியும்.

🐸தவளைக்கும்-தவளைக்கும் திருணம் நடத்தினால் மழையை வரவழைத்துவிட முடியும்.

🐴கழுதைக்கும்-மரத்துக்கும் திருணம் நடத்தினால் மழையை வரவழைத்துவிட முடியும்.

📗இப்படியாக சில மூடநம்பிக்கை சடங்குகளை செய்தால் மழையை வரவழைத்து விடமுடியும் என்பார்கள்.

🎗ஆனால் இது நிச்சயமாக வெறும் கற்பனையே...


அதுமட்டுமன்றி...

🌧பெய்யக்கூடிய மழையை எந்த ஊரில் பெய்யும் என்று எவராலும் சொல்லமுடியாது.

 காரணம் ...

✅ *மழையை இறக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியதாகும்.*

☝🏻 அல்லாஹ் கூறுகிறான்


💦நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது *அவனே மழையையும் இறக்குகிறான்  இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான்.*

💦நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
_(அல்குர்ஆன் : 31:34)_

💢தற்சமயம் தமிழகம் பருவமழை இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

💢இந்த சூழலில் நாம்  மழையை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை (மழை தொழுகை) செய்யவேண்டும்.

❓ *தமிழகத்தின் அனைத்து முஹல்லாக்களும் தயாராகுமா?*

💦💦💦💦💦💦💦💦💦💦💦
*http://makkalmedia1.blogspot.in*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Unit of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡