Saturday 17 September 2016

​வாழ்த்துகூறும் சகோதரர்களே​

*​வாழ்த்துகூறும் சகோதரர்களே​*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠


✅ தியாக திருநாளை போற்றும் விதமாக முஸ்லீம்களுக்கு வாழ்த்து கூறும் உடன் பிறவா சகோதரர்களே.

✅தாங்கள் வாழ்த்து கூறுகிறீர்கள் அதில் எங்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சி தான் ஆனால் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் இந்த தியாகத்திருநாளை முஸ்லீம்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று.

✅ சுமார் 5000ஆண்டுகளுக்கு முன் இப்ராஹிம் (அலை) என்ற இறைதூதர் இருந்தார் அவர் இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டாவராக இருந்தார் ஆனால் அவருக்கு இறைவன் குழந்தை பாக்கியத்தை வழங்கவில்லை.

✅ அவர் இறைவனிடம் பிராத்தனை செய்தார் பிள்ளை வேண்டும் என்று *அந்த பிராத்தனையை இறைவன் ஏற்று ஓர் ஆண்மகனை கொடுத்தான்.*

✅ சகோதரர்களே சிந்திய்யுங்கள் குழந்தை இல்லாமல் குழந்தை செல்வம் கிடைத்தால் அந்த தந்தை அடையும் மகிழ்ச்சியை  நாம் அனைவரும் அறிந்ததே!!!!

✅அது பலவருடம் இல்லாமல் கிடைத்த பிள்ளை செல்வத்தின் மீது அதிக அன்பையும் பாசத்தையும் பொழிந்து வந்தார் *அங்கே இறைவனின் சோதனை வந்தது*

✳அதாவது அன்பு மகனை பலிகொடுக்க வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு இறைவன் கனவின் மூலம் வெளிப்படுத்தினான் அதை செயல்படுத்த இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூற அந்த அன்பு மகன் இறைவனின் கட்டளைக்கு முழுமையாக நான் கட்டுப்படுவேன் என்று கூறினார்.

✳ அதை செயல் படுத்தவும் துனிந்தார்கள் ஆனால் இது இறைவனின் சோதனை தான் அதில் அவர்கள் வெற்றி பெற இறைவன் அங்கே மகனுக்கு பதிலாக ஓர் ஆட்டை அறுக்க இறைவன்  கட்டளை இட்டான் அதுவே இந்த தியாக திருநாளின் சுறுக்க வரலாறு ஆகும்.

✳அன்பு சொந்தங்களே இதன் மூலம் இறைவன் முஸ்லீம்களிடம் எதிர்பார்பது எல்லாம்

✳ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தார்கள் மீது அன்பும், கருணையும் கொண்டு தன் செல்வத்தை செலவு செய்வது  போன்று,பிற மக்களின் மீது கருணை கொண்டு, அவர்களின் துன்பத்தை நீக்கவும், இன்பத்தை பெருக்கவும், தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதையே!!!!


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872


📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வருபவர்களுக்கு

*​ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வருபவர்களுக்கு​*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


*ஹஜ்ஜின் நோக்கம் என்ன*

✅அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வல்லரஹ்மான் உங்களுக்கு ஹஜ்ஜை நிறைவேற்றும் பாக்கியத்தை கொடுத்தான்

✅💯முஸ்லீம்கள் உள்ளத்தில் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும் ..

✅அல்லாஹ் நமது ஆசைகளை நிராசை ஆக்காமல் பூர்த்தி செய்து தரவேண்டும்.

💐 *ஹஜ் பயனத்தை நிவர்த்தி செய்து தாயகம் திரும்பும் சகோதரர்களே*💐

✅அல்லாஹ் கூறுகிறான்👇🏻

✳...(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!. (2:197)

✅இந்த வருடம் நீங்கள் செய்த ஹஜ்ஜின் மூலமாக நீங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகள் என்ன வென்று புரிந்து கொணடிர்களா?

✅ஹஜ்ஜிலிருந்து திரும்பிய பின் நம்க்குல் என்ன மாற்றம் வேண்டும் என்பதை குறித்துக் கொண்டோமா???

✅ஹஜ் என்பது தொலைதூரம் பயணப்பட்டு, ஆடை ஆபரணங்களை தவிர்த்து, வெயிலிலும் தாகத்திலும் உடல் வருந்தி செய்யப்படும் ஒரு சம்பிரதாயமல்ல.....

✅ ஹஜ் என்பது ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகனை அல்லாஹ்வின் கட்டளைக்காய் பலிகொடுக்க முன்வந்த அருமை நபி இப்றாஹீமின் வழியில், அவரின் வாழ்க்கையை சற்றே வாழ்ந்து பார்க்கவும்.

✅ ஆசாபாசங்களை மறந்து, செல்வ சுகத்தையும், செல்லச்செல்வங்களையும் பிரிந்து மனம் வருந்த உடல் வருந்த இன்னோர் உலகில் சில நாழிகை வாழ்ந்து பார்க்கவும்.

✅ எம் தந்தை இப்றாஹீமின் (அலை)அவர்களின் அழைப்பிற்கு பதிலளித்தவர்களாகவும் செல்லும் ஓர் புனிதப் பயணமே ஹஜ்.

👆🏻இத்தகய  சிறப்பான பயணத்தின் இறுதியில் வெறும் நினைவுகள் மட்டுமே மிஞ்சினால்?

❌ *சில நாட்களில் வீணாகிப் போகக்கூடிய வெறும் பொருட்கள் மட்டுமே எஞ்சினால்??* இதற்காகவா ஆர்ப்பர்க்கிறோம்??? வாருங்கள் சிந்தனை செய்வோம்...

*தொடரும்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872


📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

Sunday 11 September 2016

இஸ்லாம் உயர் மார்க்கம்-3

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------3_


*இஸ்லாம் மார்க்கம் உயர் மார்க்கம்*

✳ஓர் உன்மை முஸ்லீம் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை உனர்ந்து பணி செய்ய வேண்டும்.

✳மேலும் ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி நடக்க வேண்டும் அல்லாஹ் கட்டளை இட்டானோ அதை பற்றியும் விசாரிக்க படுவார்.

 ✳அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! *நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.* (ஸஹீஹுல் புகாரி)

✅தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் ஓர் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதை ஒரு போதும் சகித்துக்கொள்ள மாட்டார்.

✅ அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது.

✅அது எத்தகய  விளைவுகளை எற்படுத்தினாலும் சரியே *அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார்*

✅கடமையில் அலட்சியம் செய்யமாட்டார் தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.

✅ சகோதரர்களே நமது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மார்கத்தின் பெயரால் பல அனாச்சாரங்களை செய்கிறார்கள் ஆனால் அதை கண்டும் காணமல் இருப்பது *ஏன்?*

✳ குழம்பில் உப்பு காரம் இல்லாவிட்டால் பொங்கும் பலர் மார்கத்திர்க்கு வளைந்து கொடுப்பது *ஏன்??*

✅ நமது நபி அவர்கள் கூறியதை நன்கு நினைவில் கொள்ளுங்கள் யாரும் அல்லாஹ்விடம் இருந்து தப்ப முடியாது.


*இஸ்லாம் இதை மட்டுமா கூறுகிறது இல்லை இன்னும் பல விசயங்களை கூறுகிறது தெரியுமா????????*

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

இஸ்லாம் உயர் மார்க்கம்-2

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------2_


✅ *ஓர் முஸ்லிம் முழுமையாக இறை கட்டளைக்கு அடிபணிவார்*

✅உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்க வேண்டும்.

✅ தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார்.

✅ மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார்.

✅ *ஓர் உன்மை முஸ்லிம் அல்லாஹ் & அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

✅“நான் கொண்டு வந்ததற்கேற்ப *தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.*”

 *(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)*

✅ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள்.

 (அல்குர்அன் 4:65)

✅ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக ஏற்று பூரணமாக அடிபணிவதாகும்.

✅இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது.

✅இது தன்மைகள்  முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.

*இஸ்லாம் இன்னும் பல விசயங்களை கூறுகிறது தெரியுமா????????*

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 9: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

​தியாக திருநாளை வரவேற்க்கும் நாம்​ இஸ்லாத்திற்க்கு என்ன தியாகம் செய்தோம்​??????*

*​தியாக திருநாளை வரவேற்க்கும் நாம்​*

 *இஸ்லாத்திற்க்கு என்ன தியாகம் செய்தோம்​??????*


📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      *தியாகம்*


✳பக்ரீத் வந்து விட்டாலே போதும் அனைவரும் நினைவு கூறுவது இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை தான்

✳ஆம் அவர்கள் அந்த அளவிர்க்கு அல்லாஹ்விகாகவும் அவனது மார்க்கத்திர்காகவும் பல துன்பங்களையும் பல தியாங்களையும் செய்துள்ளார்கள்

✳ *வருடாவருடம் இந்த தியாகத்தை நாம் நினைவு கூறுவது என்ன சாங்கியத்திர்காகவா????*

✳அல்லாஹ் இந்த விசயத்தின் மூலம் நம்மிடம் எதிர்ப்பார்பது தான் என்ன

✳நாம் சிந்திக்க வேண்டாமா???

✳இப்ராஹிம் (அலை) அவர்களை  அல்லாஹ் கலீல் (நண்பன்) என்று கூறினானே அது சாதரனமாக நிகழ்ந்ததா????

✳அந்த தகுதியை அடைய இப்ராஹிம் (அலை) அவர்கள் பட்ட துன்பத்தை சொல்லில் அடக்க முடியுமா???

*சகோதரர்களே சிந்திக்க வேண்டாமா?????*

✳அல்லாஹ் இந்த உம்மதிடம் இதன் மூலம் எதிர்பார்பது என்ன சிந்திக்க வேண்டாமா???

✳சகோதரர்களே!!!
அல்லாஹ் நம்மிடம் இதன் மூலம்  எதிர்பார்பது அந்த தியாக மனபான்மை நம்மிடம் வற வேண்டும் என்று தான்.

⁉ ஆனால் நம்மிடம் சிரிய தியாங்கள் கூட இல்லை.

⁉ அவர்கள் பல நாள் பிள்ளை இல்லாமல் பெற்ற பிள்ளையையே தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

✳ ஆனால் நம்மால் சின்ன சின்ன விசயங்களை கூட இறைவனுக்காக தியாகம் செய்ய அஞ்சுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

👇🏻 அவற்றில் சில

      *தொட....ரும்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:8- SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

தியாக திருநாள் ஹஜ்பெருநாள்*

*தியாக திருநாள் ஹஜ்பெருநாள்*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*தியாக திருநாள்*

✅வாழ்நாள் எல்லாம்  இறைப்பணிக்காக  கஷ்டப்பட்டு  சொல்லமுடியாத
துன்பங்களை எல்லாம் சகித்துக்கொண்டு

✅ ஊரையும், நாட்டையும்,
உறவுகள் யாவையும்  விட்டு பல  வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து இறைவனிடம் பிராத்தனை செய்து  பிள்ளையை பெற்று

✅ அந்த பிள்ளை பிறந்த உடன் பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டு இறைக்கட்டளையை நிறைவேற்றியவருக்கு  சோதனை காத்திருந்தது....

✅ *தான் பெற்ற மகனை பலி கொடுக்கச்சொன்னால் நாம் செய்வோமா??*

✅ *இல்லை...நம்முடைய மகன் தான் ஒத்துக்கொள்வானா??*

✅ *இல்லை...நம்முடைய மனைவி ஏற்றுக்கொள்வாரா??*


✅ஆனால் அந்த மகன் ஒத்துக்கொண்டார்👇🏻

✅என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன்.

 *இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.*”37:102.

✅மகனை அறுக்கும் பரிட்சையிலும் இப்ராஹீம் (அலை) வென்றார்....

✅அதற்கு பதிலாகதான் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்
அவரின் தியாகத்தை நினைவு கூறத்தான் குர்பானி கொடுக்கிறோம்.
வருடம் இருமுறை கொண்டாடும் பெருநாளில் ஒரு பெருநாளே
இப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தை நினைவு கூறத்தான்.....

✅ *இப்படிப்பட்ட தலைவரைக் கொண்டுதான் அல்லாஹு  தன் இறையில்லத்தை உயர்த்தினான்....*

✅ *அவர்நின்றுதொழுத இடத்தை மகாமு இப்ராஹீம் என சிறப்பித்துகூறுகிறான்.*

✅ *அவரும்அவர் மனைவியும் செய்த அமல்களே நாம் ஹஜ்ஜில் செய்கிறொம்....*

✅அல்லாஹ் வைத்த எல்லா சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) வெற்றி பெற்றார்கள்✅
அதனால்தான் அல்லாஹ் அவரை உலக மக்களுக்கு தலைவராக ஆக்கியுள்ளான்.

✅இறைவனின் நண்பரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளுக்கு முன் நாம் கஷ்டப்படுவது எல்லாம் ஒரு விசயமே அல்ல....

✅எந்த ஒரு கஷ்டம் ஏற்படும்போதும் இப்ராஹீம் அலை அவர்களின் சோதனைகளைசிந்தித்தால் நம் கஷ்டங்களும்,துன்பங்களும் லேசாகத்தெரியும்.

✅அல்லாஹ் நம்மை வாழும்போது முஸ்லிமாகவும்,மரணிக்கும்போதும் முஸ்லிமாகவும்,மறுமையில் எழுப்பும்போதும் முஸ்லிமாக ஆக்க அருள்புரிவானாக!


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 7: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

வெள்ளிக்கிழமை

*இன்று வெள்ளிக்கிழமை *

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

⚡பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்⚡


✅ *இன்று சில நபிமொழிகள்*✅

*நாட்களிலே சிறந்த நாள்*

 ✅நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)


*பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

*மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்

*பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✅ “எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல்  பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

*ஜும்-ஆவுக்கு நடந்து செல்வதற்குறிய நன்மை:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✅ “எவரொருவர் ஜும்-ஆதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து, வாகனத்தில் ஏறாமல், ஜும்-ஆவுக்காக நடந்து சென்று, இமாமுக்கு அருகாமையில் அமர்ந்து, அவர் சொல்வதை செவிமெடுக்கின்றாரோ அவர் நடந்து சென்ற ஒவ்வொரு எட்டுக்கும், நின்று வணங்கிய, நோன்பு நோற்ற  நன்மை கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவூத்)

*இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் குளித்து ஜும்ஆவுக்குச் சென்று தொழுதுவிட்டு, இமாம்  ஜும்ஆவை  முடிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு ,அவருடன் தொழுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: முஸ்லிம்)

*இத்தினத்தில் அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன்  விசரனைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள்  சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில்  எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை  பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும்  அல்லாஹ் ஹராமாக்கினான்”(ஆதாரம்: அஹ்மத்)

*ஜும்ஆ தினத்தில் குளிப்பது சுன்னத்தாகும்*

 ✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு செல்பவராக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


*இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அதனை சிறந்த முறையில் செவிமெடுக்க அதனை விளங்கி பிரயோஸனம் அடைய வேண்டும்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது ஒருவர் தனது சகோதரனுக்கு வாயை மூடு என்று கூறினால் அவர் தனது ஜும்ஆவை வீனாக்கிவிட்டார்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:2: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

இஸ்லாம் உயர் மார்க்கம்-1

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------1_

 ✅இஸ்லாத்தில் முழுயாக நுழைய இறைநம்பிக்கை பிரகாசிக்க வேண்டும்.

✅முஸ்லீம்களிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் *அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும்.*

✅அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர வேண்டும்.

 ✅ மனிதன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரமும் எனக்கு  எல்லா நிலையிலும் தேவை என்பதை உணர வேண்டும்.

✅ *உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும்.*

 ✅உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார்.

✅இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான் இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி .

 ✅இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார்.

✅அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார்.

👆🏻இது அவரது ஈமானைப் பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.

✅ *வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.*
இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:1: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?​*🐃

🐏 *கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?​*🐃


📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✅ *இஸ்லாமிய மார்க்கம் இலேசானது படைத்தவனுக்கு தெரியும் எனது அடியான் எந்தஅளவு சமாலிக்க முடியும் என்று*

✅ நாம் இஸ்லாமிய சட்டதிட்டங்களை உற்று நோக்கினால் தெரியும் இந்த சத்திய மார்க்கம் எவ்வளவு எளிதாக உள்ளது என்று.

🐏 ஆனால் சிலர் கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

🐏 இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்

❌கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள்.

❌உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் *மிகவும் பலவீனமானதாகும்*

❌ *ஒருவர் கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது.*❌

 ✅கடனாளியாக ஒருவர் இருந்தால் அவர் முதலில்  கடனையே நிறைவேற்ற வேண்டும் என மார்க்கம் நமக்கு பல வகையில் கற்று தருகிறது.

⁉ ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் *ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும்.* மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.

✅நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

✅ அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.

✅ *இவ்வாறு தான் நமது  மார்க்கம் நமக்கு உபதேசிக்கிறது.*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள்.

✅ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (7288)

✅வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.

✅ *எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.*

(அல்குர்ஆன் 2 : 286)

✅அல்லாஹ்வின்  பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது.

✅ *கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (3498)

✅ ஆக சகோதரர்களே நம்மிடம் குர்பானி கொடுக்க வசதி இருந்தால் கொடுப்போம்.

👍🏼 *இல்லையென்றால்  வல்லரஹ்மானிடம் பிராத்திப்போம்*👍🏼

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:31 AUGUST 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

நினைவிருக்கட்டும்

**

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*குர்பானி கொடுப்பவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி*

🗣 *2.9.16 வெள்ளிக் கிழமை  மஹ்ரிபிற்குப்  பிறகு* தமிழகத்தில் துல்ஹஜ்   மாதத்தின்  பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

🗣எனவே குர்பானி குடுக்கவிருக்கும் சகோதரர்கள் வெள்ளிக்கிழமைக்குள்  *நகம் மற்றும் முடியை தேவைப்பட்டால் வெட்டிக்கொள்ளுங்கள்*

🗣 குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் மாதத்தின் பிறையை பார்த்ததில் இருந்து குர்பானி கொடுக்கும்வரை நகம் மற்றும் முடியை வெட்டக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.

🗣ஆகவே சகோதரர்களே குர்பானி எனும் தியாகதிருநாளுக்காக அனைவரும் தங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்


🗣வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் இக்லாஸாகா அவனுக்காக மட்டுமே குர்பானி கொடுக்கும் பாக்கியத்தை வழங்குவானாக!!!!!!!

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*�பேஸ்புக்கில் எம்மை தொடர�* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:30 AUGUST 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

செல்பி குர்பானி*📱

📱 *செல்பி குர்பானி*📱

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💈அன்பார்ந்த சகோதரர்களே இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் தியாக திருநாள் வர இருக்கிறது.!!

📱இந்த தியாக திருநாளில் நாம் செய்ய வேண்டிய  பல அமல்களை அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு கற்று  தந்து உள்ளனர்.!!

💈ஏழை மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.!!

💈உதவி செய்தோமா  ஆம் செய்தோம் .!!

💈ஆனால் இதை எல்லாம் நாம் மறுமைக்காக செய்தோமா என்றால்  இல்லை.!!

💈நாம் செய்தது எல்லாம் பிறருக்கு காட்ட செய்கிறோம்.!!

💈செல்பி கொண்டு நாம் தியாகம் பாழ்படுத்துகிறோம் .

💈இப்படி பட்டவர்களை அல்லாஹ் சொல்லுகிறான்.!!

🔰 *பிறருக்கு காட்ட அமல் செய்தால் அவர்கள் அமல் மறுமை நாளில் தூசிகளாக பறக்கவிட படும் என்று.!!*

💈ஏன் இந்த வசனம் இருப்பது தெரியாதா.?

💈இல்லை என்றால் அல்லாஹ்வின் வார்த்தையின்
முக்கியத்துவம் தெரியவில்லையா.??

💈இந்த மாதிரி செயல் யாரை சந்தோசம் படுத்துவதற்கு .!!

💈இறைவனையா அல்லது மற்றவர்களுக்கா?

💈குர்பானி கொடுப்பது செல்பி எடுப்பதற்காகவா.?

💈நாம் கொடுக்கும் குர்பானி இறைவனுக்கு பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.!!

💈இறைவன் இந்த குர்பானியை எற்று கொள்வானா என்ற பயம் தான் நமக்கு இருக்க வேண்டும்.!!

💈ஆனால் நமக்கோ நம்ம ஆட்டை விட யாரும் நம்ம  எரியாவில் பெரிசா வாங்க கூடாது என்ற கவலையில் இருக்கிறோம்.!!

💈இதில் செல்பியை குத்தகைக்கு எடுத்தவர் போல.!!

💈குர்பானி கொடுக்கும் போது ஒரு போட்டோ.!!

💈அறுக்கும் போது ஒரு போட்டோ .!!

💈அறுத்து முடிந்தவுடன் ஒரு போட்டோ.!!

💈பிரியாணி சாப்பிடும் போது ஒரு போட்டோ.!!

💈இதுல போட்டா நல்லா வரலனா  கவலை படுகிறோம்.!!

💈ஒரு உண்மையான  இறை அடியான் பற்றி அல்லாஹ் கூறுகிறான்..!!

🔰 *நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.*
*(அல்குர்ஆன் : 6:162)*

💈அல்லாஹ் சொல்லும் இந்த நிலை நம்மிடம் இருக்கிறாதா என்று சிந்தித்து பாருங்கள்.!!

💈நாங்க எல்லாம் கலிமா சொன்னவர்கள் என்று வெளியில் சொல்லும் முன் நம் நடை , உடை ,செயல்பாடுகள் , கலிமாவிற்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பாருங்கள்!!

💈ஆனால் நம் செயல் பாடு கலிமாவிற்கு மாற்றமாகவே இன்றைய கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நிசத்தமான உண்மை.!!

💈அன்பான சகோதர்களே .!!

💈நாம் இந்த உலகத்தின் சிறந்த சமுதாயத்தில் வாழ்கிறோம்.!!

💈எளிதாக மார்க்கம்(நேர்வழி) கிடைத்ததால் அதன் பயனை  நாம் அறியவில்லை.!!

💈மற்ற மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்களிடம் பாருங்கள்.!!

💈அப்போது புரியும்.!!

💈நம் வாழ்க்கையின் நோக்கம்.!!

💈காலை முழிப்பது முதல் இரவு தூங்கும் வரை எல்லா விசயங்களிலும் யூத ,நசரானிகள் சூழ்ச்சியில் வாழ்கிறோம்.!!

💈அவர்களால் சூழ்ச்சி செய்ய முடியாத ஒரு இடம் அல்லாஹ்வின் மார்க்கம் தான் .!!

💈அல்லஹ்வின் மார்க்கத்தை அழிக்க முடியாது என்பதால் ,
மாற்ற(அழிக்க)  அவர்களுக்கு நாமே பாலமாக செயல்படுவது தான் வெட்கம் பட வேண்டிய விசயம்.!!

💈இன்ஷா அல்லாஹ் வருகின்ற தியாக திருநாளை அல்லாஹ்வின் நிழலில் கொண்டாடும் பாக்கியத்தை அருள் புரியட்டும்.!!

💈செல்பியில்லாத திருநாள் கொண்டாடுவோம்.

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

நாம் கொடுக்கும் குர்பானி எதர்க்கு????*

*நாம் கொடுக்கும் குர்பானி எதர்க்கு????*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*குர்பானி எதற்கு*

🐃தியாகத்தை நினைவு கூறும் குர்பானி எதற்கு இறைச்சிக்காகவா??

🐃 குர்பானியின் மூலம் நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது ரத்தத்தையோ மாமிசத்தையோ அல்ல. நமது இறைஅச்சத்தை தான்.

பல பகுதிகளில் கூட்டுக்குர்பானி என்ற பெயரில் இறைச்சிக்காகவே குர்பானி கொடுக்கிறார்கள்.

கூட்டுக்குர்பானி என்ற பெயரில் குர்பானி கொடுக்கும் அன்று இறைச்சியை மட்டும் எடுத்துவருவார்கள்

ஆனால் குர்பானி என்றால் என்ன வென்று கூட தெரியாது

குர்பானி கொடுக்கப்படும் பிராணியை கூட பார்த்திருக்க மாட்டார்கள்

குர்பானியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை கடைபிடிக்க மாட்டார்கள்

~ஏதோ சாங்கியத்திர்க்காக குர்பானி கொடுப்பார்கள்~

சகோதரர்களே சிந்தி்யுங்கள்.

அல்லாஹ் நம்மிடம் இந்த தியாக திருநாள் மூலம் எதிர்பார்ப்பது இதையா???

✅ சகோதரர்களே நாம் குர்பானி கொடுப்பதை ஏதோ சாங்கியம் என்று எண்ணாமல் அதை அறுக்கும் இடத்தில் சென்று நீங்கள் கொடுக்கும் பிராணியை பாருங்கள்.


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

ஈதுல் அழ்ஹா

*ஈதுல் அழ்ஹா​*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✳சகோதரர்களே  "ஈதுல் அழ்ஹா"வை *பக்ரீத்* என்று கூறும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது.

❌அது முற்றிலும் தவறான வார்த்தையாகும்.

✳மாற்றுமத சகோதரர்கள் அப்படி சொல்வதால் நாமும் அந்த வார்த்தையே பயன்படுத்துகிறோம்.

✅ சரி அந்த வார்த்தைக்காவது பொருள் தெரியுமா???

✳ *பக்ரீத் என்பதன் பொருள்: பகரா + ஈத்" பகரா என்றால் மாடு. ஈத் என்றால் பெருநாள். மாட்டுப்பெருநாள் என்று பொருள்*

✳இப்படி கூறுவது  நம்முடைய நாட்டிலும் முஸ்லிம் சமூகத்தில் வழக்கமாக ஆகிவிட்டது.

✳ சகோதரர்களே சிந்தியுங்கள் இந்த தியாக திருநாளை நாம் மாட்டுக்காகவா கொண்டாடுகிறோம் இல்லையே பிறகு ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

✳நபி இப்ராஹிம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதே *"தியாக திருநாள் - ﻋﻴﺪ ﺍﻵﺿﺤﻰ - ஈதுல் அழ்ஹா"* என்றே அழைப்பதே சிறந்தது.

✅ அப்படிதான் முஸ்லீம்கள் கூற வேண்டும்

✅ *ஈத் என்றால் பெருநாள் அழ்ஹா என்றால் தியாகம்.*

👍🏼தியாகத்தை போற்றும் பெருநாளை *ஈதுல் அழ்ஹா* என்றே அழைப்போம்👍🏼

❌ *பக்ரீத் என்ற பெயர் மார்க்கத்தில் பின் தங்கிய முகலாயர்களின் ஆட்சியின் போது புகுத்தப்பட்டது.*❌

✅நமது நிகழ்கால இழைய சமுதாய குழந்தைகளுக்கு ஈதுல் அழ்கா, தியாக பெருநாள், அல்லது ஹஜ் பெருநாள் என்று அழகிய வாக்கியங்களையுடைய பெயரை கற்று கொடுப்போம்.

✅பக்ரீத் என்று கூறுவதினால் தவறு ஒன்றும் இல்லையே என நாம் நினைக்கலாம் ஆனா அதில் என்ன பயன் உள்ளது என சிந்திய்யுங்கள்.


✅அழகிய வார்த்தையுடைய பெயர் இருக்கும் போது *மாட்டு பெருநாள் என கூறுவது சரியா?*

✅சகோதரர்களே ஒரு குழந்தை பிறக்கிறது பெயர் வைக்க வேண்டும் என்றால்  அப்துல்லாஹ் மற்றும் பசுமதி என்ற இரு பெயரில் நாம் எதை தேர்வு செய்வோம்.

👆🏻இதில் அழகிய பெயர் எது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

✅அதைப் போன்று மாட்டு பெருநாள், தியாக பெருநாள் இதில் அழகிய பெயர் எது என்பதை வாசகர்கள் முடிவுச் செய்துக் கொள்ளுங்கள்.

*அல்லாஹ் போதுமானவன்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

Sunday 10 July 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-54🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-54🔰

🔶அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார்.

💠 ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான்.

💠ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான்.

💠அவருடைய பிள்ளைகளில் ஒருவர் கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார்.

💠 அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான்.

💠ஸமவ்அல் கொடுக்க மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.

🔶3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை:

💠இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின.

💠எவருடைய சொல்லாவது தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள்.

💠 தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும், அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

🔶4) செயலில் உறுதியுடன் இருத்தல்:

💠 அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும் காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும் தடுத்துவிட முடியாது.

💠 தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.


✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-53🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-53🔰

🔶இதுபற்றி அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸீ தனது கவிதைத் தொகுப்பில் கூறுகிறார்:

🔶”மதிய வேளைக்குப் பின் வடிகட்டியுடன் உள்ள

🔶மஞ்சள் நிறக் கண்ணாடி கெண்டியிலிருந்து

🔶அடையாளமிடப்பட்ட தெளிவான கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி

🔶இடக்கையால் மது அருந்தினேன்.

🔶நான் குடித்தால் என் செல்வங்கள் அனைத்தையும் வாரி இறைப்பேன்.

🔶ஆனால் எனது கண்ணியத்தை கரைபடியாது காப்பேன்.

🔶மது மயக்கம் தெளிந்த பின்னும் வாரி வழங்குவதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன்.

🔶இத்தகைய என் பண்பாடும் பெருந்தன்மையும் உனக்குத் தெரிந்ததே!”

🔶சூதாடுவதையும் தங்களது கொடைத்தன்மையின் வெளிப்பாடாக அவர்கள் கருதினார்கள்.

🔶ஏனெனில், சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர், தான் செலவிட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை ஏழை, எளியோருக்கு கொடுத்து விடுவார்.

🔶இதனாலேயே மது அருந்துவதிலும் சூதாடுவதிலும் எப்பலனுமே இல்லை என்று குர்ஆன் மறுக்கவில்லை.

🔶மாறாக, அதன் பலனைவிட அதன் தீய விளைவுதான் அதிகம் என்று கூறுகிறது.

🔶(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்:

🔶 ”அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன.

🔶 ஆனால், அவற்றிலுள்ள பாவம் அவற்றின் பயனை விட மிகப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)

🔶2) ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அவர்கள் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலும் வாக்குகளைக் காப்பாற்றுவதிலும் மிக உறுதியாக இருந்தனர்.

🔶 தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் அது குறித்து சிறிதும் இலட்சியம் செய்யாமல் தங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.

🔶இதற்கு ஹானி இப்னு மஸ்வூத் ஷைபானி, ஸமவ்அல் இப்னு ஆதியா போன்றவர்களின் சம்பவங்கள் சான்றாகும். (இதிலுள்ள ஹானியின் சம்பவம் ‘ஹீரா நாட்டில் ஆட்சி’ என்ற தலைப்பில் சென்றுள்ளது.)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 08 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-52🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-52🔰

🔶பண்பாடுகள்

🔶அக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை ”அறியாமைக்காலம்” என வருணிக்கப்பட்டது.

🔶 ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன.

🔶அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.

🔶அவையாவன:

🔶1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர்.

🔶இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும் புகழ்ந்து கொண்டனர்.

🔶கடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார்.

🔶அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இருக்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம் விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.

🔶அவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

🔶 இதனால், பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக் கருதினார்கள்.

🔶அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையின் விளைவாக மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர்.

🔶அது ஒரு சிறப்பான செயல் என்பதற்காக அதனை அவர்கள் நேசிக்கவில்லை.

🔶மாறாக, மது அருந்துவது தர்மம் செய்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது.

🔶 செல்வத்தை வாரி இறைப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது என்பதால் அதை நேசித்தனர்.

🔶 அதனாலேயே திராட்சைக் கொடிக்கு ‘கரம்’ (கொடை) என்றும் அதிலிருந்து பிழியப்பட்ட மதுவுக்கு ‘பின்துல் கரம்’ (கொடையின் புதல்வி) எனவும் பெயரிட்டிருந்தனர்.

🔶 எனவேதான், மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக் காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-51🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-51🔰

🔶சுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது.

🔶 மூட நம்பிக்கைகள் மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது.

🔶 மனிதர்கள் கால்நடைகளாக வாழ்ந்தனர்.

🔶பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர்.

🔶 சமூகங்களுக்கிடையில் உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

🔶 குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.

🔶நமது நோக்கமல்ல.

🔶சமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது.

🔶 அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும்.

🔶அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது.

🔶அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான் வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே!

🔶 ஆனால், அரபிய தீபகற்பத்தில் புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை.

🔶இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.

🔶அரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை.

🔶துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன.

😳அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்தன.

🔶 அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர்.

🔶 எனினும், அனைத்து செல்வங்களும் போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன.

🔶 அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 04 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-50🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-50🔰

🔶ஸஅது இப்னு அபீ வக்காஸ், அப்து இப்னு ஜம்ஆ ஆகிய இருவருக்கிடையே ஜம்ஆவின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஜம்ஆவின் விஷயத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மிகப் பிரபலமானதாகும். (பார்க்க ஸஹீஹுல் புகாரி 2053, 2218…)

🔶அரபியர்கள் தங்களது பிள்ளைகளுடன் கொண்டிருந்த தொடர்பு பலவகைகளில் அமைந்திருந்தது.

🔶 அவர்களில் சிலர் தங்களது பிள்ளைகளை உயிருக்குயிராக நேசித்தனர்.

🔶இதைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:

🔶”நமது குழந்தைகள் புவியில் தவழும் நமது ஈரக்குலைகளாவர்.”

🔶தற்காலத்தைப் போன்றே, அக்காலத்தில் சிலர் பெண் பிள்ளைகளை அவமானமாகக் கருதியும் செலவுக்குப்பயந்தும் உயிருடன் புதைத்தனர்.

🔶 மேலும் சிலர், வறுமைக்கு அஞ்சி தங்களின் ஆண் குழந்தைகளையும் கொலை செய்தனர். (பார்க்க அல்குர்ஆன் (6 : 151), (16 : 58, 59), (17 : 31), (81 : 8) எனினும் இப்பழக்கம் பரவலாகக் காணப்படவில்லை.

🔶 காரணம், எதிரிகளுடன் போரிடுவதற்கு அவர்களுக்கு ஆண் மக்களின் தேவை அதிகமாக இருந்தது.

🔶அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர்.

🔶 குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர்.

🔶ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர்.

🔶 இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன.

🔶 அவர்களிடையே அறியப்பட்ட ”உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள்.

🔶ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக்காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது.

🔶 எனினும், சில நேரங்களில் தலைமைத்துவத்தை அடைவதற்காக ஒரே வமிசத்தில் தோன்றியவர்கள் கூட தங்களுக்குள் வாளெடுத்துப் போரிட்டுக் கொண்டனர்.

🔶 எடுத்துக்காட்டாக அவ்ஸ்-கஸ்ரஜ், அப்ஸ்-துப்யான், பக்ர்-தக்லிப் கோத்திரத்தினர் தலைமைப் பதவிக்காக தங்களுக்குள் பகைவர்களாக இருந்தனர்.

🔶பல மாறுபட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பற்றவர்களாக பிரிந்து வாழ்ந்தனர்.

🔶 குடும்பச் சண்டையிலேயே தங்கள் ஆற்றல்களை இழந்தனர்.

🔶 சில நேரங்களில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கிடையில் இருந்த பகைமையின் வேகத்தை குறைத்தன.

🔶 மற்றும் சில நேரங்களில் சமாதான ஒப்பந்தங்களும் நட்பு ஒப்பந்தங்களும் பல மாறுபட்ட கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தின.

🔶புனித மாதங்கள் அவர்களுக்கு அருளாகவும் வாழ்வுக்கும் வியாபாரத்திற்கும் பேருதவியாகவும் அமைந்திருந்தன.

🔶புனித மாதங்களை அவர்கள் கண்ணியப்படுத்தி வந்ததால் அம்மாதங்களில் மட்டும் அவர்கள் முழு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் இருந்தனர்.

📜அபூரஜா அல் உதாதி (ரழி) கூறுகிறார்: ”ரஜபு மாதம் வந்துவிட்டால் நாங்கள் ஈட்டிகளின் கூர்மையை அகற்றும் மாதம் வந்துவிட்டது” என்று கூறி ஈட்டி, அம்புகளின் முனையை அகற்றிவிடுவோம். இவ்வாறே மற்ற புனித மாதங்களிலும் நடந்து கொள்வோம். (ஸஹீஹுல் புகாரி. ஃபத்ஹுல் பாரி)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-49🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-49🔰


🔶சிலசமயம் இரு வகுப்பாரிடையே போர் நடைபெறும்.

🔶அதில், தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றிபெற்ற பிரிவினர் சிறைபிடித்து தங்களது அடிமைகளாக்கி அனுபவிப்பார்கள்.

🔶இதில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் காலம் முழுவதும் அடிமைகளான அவர்களது தாய்மார்களின் பெயர்களுடன் சேர்த்து அழைக்கப்படும் அவமானம் இருந்து வந்தது.

🔶அறியாமைக் காலத்தில் ஆண்கள் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர்.

🔶இஸ்லாம் அதை தடுத்து நான்கு பெண்களுக்கு மேல் மணமுடிக்கக் கூடாது என வரையறுத்தது.

🔶மேலும், இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மணந்து கொண்டனர். தங்களது தந்தை இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து செய்துவிட்டால் அவன் மனைவியை (மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே காணப்பட்டது.


🔶 இவ்விரண்டையும் இஸ்லாம் தடை செய்தது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 22, 23). அவ்வாறே விவாகரத்து செய்வதில் குறிப்பிட்ட முறை எதுவுமின்றி விரும்பிய நேரத்தில் தலாக் (விவாகரத்து) கூறி விரும்பிய நேரத்தில் மனைவியரை திரும்ப அழைத்துக் கொண்டனர்.

🔶 இதை தடை செய்து மூன்று முறைக்கு மேல் இவ்வாறு செய்யலாகாது என இஸ்லாம் வரையறுத்தது. (ஸுனன் அபூதாவூது)

🔶சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விபசாரம் பரவியிருந்தது.

🔶சிலர் மட்டும் இந்த இழிசெயலை வெறுத்து கௌரவத்துடன் வாழ்ந்தனர்.

🔶அடிமைப் பெண்களின் நிலைமை சுதந்திர பெண்களின் நிலைமையைவிட மிக மோசமாக இருந்தது.

🔶அந்த அறியாமைக்கால மக்களில் பெரும்பாலோர் விபசாரத்தை ஒரு குற்றச் செயலாகவே கருதவில்லை.

🔶இது குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே! இன்னவன் என் மகனாவான்.

🔶அறியாமைக் காலத்தில் நான் அவனது தாயுடன் விபசாரம் செய்துள்ளேன் என்றார்.

🔶அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாறான உரிமைக் கோரலுக்கு வாய்ப்பில்லை.

🔶 அறியாமைக் கால செயல்களெல்லாம் முடிந்துபோய் விட்டன. இப்போது குழந்தை அதனுடைய தாயின் கணவனையே சாரும்.

🔶 விபசாரம் புரிந்தவனைக் கல்லால் எறிந்து கொல்லப்படும்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 01 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-48🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-48🔰

🔶ஆனால், கீழ்மட்ட மக்களிடத்தில் ஆண், பெண் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டன.

🔶அவை அனைத்தும் வெட்கமற்ற இழிவான ஈனத்தனமான பழக்க வழக்கங்களாகவே இருந்தன.

🔶 இது குறித்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

🔶திருமணங்கள் அறியாமைக் காலத்தில் நான்கு வகைகளாக இருந்தன.

🎾முதல் வகை:

🔶இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்.

🔶ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

🎾இரண்டாம் வகை:

🔶ஒருவர் தம் மனைவியிடம் ”நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்!” என்று கூறி அனுப்பி விடுவார்.

🔶 அதன்பின் அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார்.

🔶அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார்.

🔶 திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இவ்வாறு செய்து .

🔶இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ழாவு’ என்று அரபியில் பெயர் கூறப்படும்.

🎾மூன்றாம் வகை:

🔶பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள்.

🔶அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப் பின் அவர்கள் அனைவரையும் தன்னிடம் வரச் சொல்வாள்.

🔶அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி அவளிடம் ஒன்று கூடுவார்கள்.

🔶அவர்களிடம் அவள்: ”நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே! (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ”இது உன் குழந்தையே” என தான் விரும்பியவன் பெயரைக் குறிப்பிடுவாள்.

🔶 அக்குழந்தை அந்த நபரிடம் ஒப்படைக்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

🎾நான்காம் வகை:

🔶பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வர்.

🔶 தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.

🔶இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டு வாசலில் கொடியை நட்டு வைத்திருப்பார்கள்.

🔶பலர் அங்கு வந்து போவார்கள். இதில் ஒருத்தி கர்ப்பமாகிக் குழந்தை பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும் முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள்.

🔶அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து அம்மனிதனுடன் அந்தக் குழந்தையை இணைத்து விடுவார்கள்.

🔶அவனிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டு அவனுடைய மகன் என்று பெயர் சொல்லி அழைக்கப்படும்.

🔶அதைத் தன் குழந்தையல்ல என்று அவனும் மறுக்க மாட்டான்.

🔶அல்லாஹ் சத்திய மார்க்கத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள இஸ்லாமியத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத்திருமணங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டான். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:30 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-47

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-47🔰

🔶கிறிஸ்துவ மதம் சிலைவணங்கும் மதமாக மாறியது.

🔶அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்குமிடையே புதுமையானதொரு கலப்படத்தை கிறிஸ்துவ மதம் போதித்தது.

🔶அந்த மதத்தைப் பின்பற்றிய அரபியிடம் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

🔶 ஏனெனில், அதன் போதனைகள் வாழ்க்கை நெறிக்கு ஏற்றதாக இருக்கவில்லை.

🔶 அம்மக்களுக்கு அதிலிருந்து விலகுவதும் சிரமமாக இருந்தது.

🔶அரபியர்களின் ஏனைய மதக்கோட்பாடுகள் சிலைவணங்கிகளின் மதக்கோட்பாடுகளுக்கு ஒத்திருந்தன.

🔶அவர்களின் இதயங்கள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கூட ஒன்றுபட்டிருந்தன.

🔶 இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம்.

🔶இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

🎾சமுதாய அமைப்பு

🔶அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள்.

🔶 அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும்

🔶. பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர்.

🔶ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார்.

🔶சில சந்தர்ப்பங்களில் பெண் விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள்.

🔶அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள்.

🔶 எனினும், எவ்விதக் கருத்து வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான்.

🔶அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான்.

🔶 அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது.

🔶 தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட, பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 29 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

லைலத்துல் கத்ரு

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠

👍 *ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்*👍

💥 *லைலத்துல் கத்ரு*💥

🌴மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)

👆🏽 *இந்த இரவில் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன*👇🏼

✳அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏼

💐 எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (35)

💐லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்று மறைக்கப்பட்டுள்ளது யாருக்கும் தெரியாது.


💐நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.


💐நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.

💐 அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள் லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன்.

💐அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)


💐ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுக ளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🗣அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

💥நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள்.

👍 *அது ஒற்றைப்படை இர வான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்''*

👍என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்''என்று கூறினார்கள்.

🗣அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700)

💐 *சகோதரர்களே*💐

👆🏽மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் *21, 23, 25, 27, 29* ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

💐 *ஆக இந்த இரவுகளில் அதிகமான நன்மைகளை செய்து வல்ல ரஹ்மானின் பொருத்தத்தை அடையக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!!!!!*
💐💐💐💐💐💐💐💐💐💐💐

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻  *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📲 +919994675186

*​பேஸ்புக்கில் எம்மை தொடர​*👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:28  JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-46🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-46🔰

🎾ஸாபியிய்யா:

🔶இது நட்சத்திரங்களை வணங்கும் மதம்.

🔶அதாவது, கோள்களும் நட்சத்திரங்களும் தான் இவ்வுலகை இயக்கி வருகின்றன என்று நம்பிக்கை கொள்ளும் மதமாகும்.

🔶இராக் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியும், தொல்பொருள் ஆராய்ச்சியும் இது இப்றாஹீம் (அலை) அவர்களின் கல்தானி இனத்தவர் மதமாக இருந்தது என தெரிவிக்கின்றன.

🔶 முற்காலத்தில் ஷாம் மற்றும் யமன் நாடுகளில் அதிகமானவர்கள் இம்மதத்தையே பின்பற்றினர்.

🔶எனினும், யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் தோன்றி வலிமை பெற்றபோது ஸாபியிய்யா மதத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்து,

🔶 அதன் வளர்ச்சி பெரிதும் குன்றியது. எஞ்சியிருந்த இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் மஜூஸிகளுடன் கலந்து வாழ்ந்தனர்.

🔶அல்லது அரபிய வளைகுடா பகுதிகளிலும் இராக்கிலும் வாழ்ந்து வந்தனர்.

🔶யமன் நாட்டிலுள்ள ஹீரா பகுதியின் வழியாக இம்மதத்தை பின்பற்றியவர்களின் கலாச்சாரம் அரபியர்களிடமும் பரவியது.

🔶 அவ்வாறே பாரசீகர்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் மதக் கலாச்சாரம் குறைஷியர்களில் சிலரிடமும் காணப்பட்டது.

🔶சமயங்களின் நிலைமைகள்

🔶இஸ்லாமியப் பேரொளி பிரகாசிக்கத் தொடங்கியபோது இம்மதங்களையே அரபியர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

🔶அதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இம்மதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.

🔶‘நாங்களே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் நிலைத்திருக்கிறோம்’ என வாய்ப்பந்தல் கட்டியிருந்த முஷ்ரிக்குகள் உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கச் சட்ட ஏவல்களையும் விலக்கல்களையும் பின்பற்றுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தனர்.


🔶அவர்கள் கற்றுத் தந்த நற்பண்புகளை முழுதும் புறக்கணித்து வாழ்ந்தனர்.

🔶 அவர்களிடையே குற்றங்கள் மலிந்து, சிலை வணங்கிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளும் வழிகேடுகளும் கால ஓட்டத்தில் அவர்களின் மதச் சடங்குகளாக மாறின.

🔶 இச்சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் அவர்களது சமய, சமூக, அரசியல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

🔶யூத மதம் முற்றிலும் முகஸ்துதியாகவும், சர்வாதிகாரமாகவும் மாறியிருந்தது.

🔶அம்மதத் துறவிகளும் அதன் தலைவர்களும் கடவுளர்களாக விளங்கினர்.

🔶 மார்க்க சட்டங்கள் என்ற பெயரால் வாழ்க்கையை நெருக்கடியாக்கி தங்கள் விருப்பத்திற்கேற்ப மக்களைக் கசக்கிப் பிழிந்தனர்.

🔶 மக்களிடையே இறை நிராகரிப்பும், சமூகச் சீர்கேடுகளும் பரவிக் கிடந்தாலும், நேரிய மார்க்கம் சிதைக்கப்பட்டு சீர்கெட்டிருந்தாலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் செல்வங்களை சேகரிப்பதிலுமே கவனம் செலுத்தினார்கள்.

🔶 எத்தகைய உயர் போதனைகளைக் கற்று அதனைப் பின்பற்றி வாழ வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டிருந்தானோ அவையனைத்திற்கும் சமாதி கட்டினர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 28 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-45🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-45🔰

🔶இதைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

🔶அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)

🔶அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (அல்குர்ஆன் 85 : 4 – 7)

🎾கிறிஸ்துவ மதம்:

🔶 ஹபஷியர் மற்றும் சில ரோமானிய குழுக்களின் ஆக்கிரமிப்புகளால் அரபிய நாடுகளுக்குள் இம்மதம் புகுந்தது.

🔶ஹபஷிகள் யமன் நாட்டை முதன்முறையாக கி.பி. 340 ஆம் ஆண்டில் கைப்பற்றினர்.

🔶அவர்களது ஆக்கிரமிப்பு நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.

🔶 கி.பி. 370லிருந்து 378 வரையுள்ள காலத்தில் அவர்கள் யமனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

🔶 எனினும், கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்கள் வெறிகொண்டு அலைந்தனர்.

🔶 ஹபஷியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ‘ஃபீம்யூன்’ எனும் ஓர் இறைநேசர் நஜ்ரான் வந்தடைந்தார்.

🔶அங்கு வசிப்பவர்களை கிறிஸ்துவத்தைத் தழுவ அழைத்தார்.

🔶அவன் வாய்மையையும் அவரது நேரிய மார்க்கத்தையும் கண்ட அம்மக்கள் ஆர்வத்துடன் கிறிஸ்துவத்தில் இணைந்தனர். (இப்னு ஹிஷாம்)

🔶நஜ்ரானில் வசித்த கிறிஸ்துவர்களை மன்னன் தூ நுவாஸ் நெருப்பு அகழியில் எரித்துக் கொன்றானல்லவா!

🔶 அதற்குப் பழிவாங்கும் முகமாக ஹபஷியர்கள் இரண்டாவது முறையாக கி.பி 525ஆம் ஆண்டில் யமனைக் கைப்பற்றினர்.

🔶 அப்போது ‘அப்ரஹா அல் அஷ்ரம்’ என்பவன் யமனை ஆட்சி செய்தான்.

🔶அவன் கிறிஸ்துவத்தை தீவிரமாக பரப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினான்.

🔶 அவன் யமனில் ஒரு கிறிஸ்துவ கோயிலைக் கட்டினான்.

🔶கஅபாவை ஹஜ்ஜு செய்யச்செல்லும் அரபியர்கள் ஹஜ்ஜுக்காக கஅபா செல்வதைத் தடுத்து, தான் கட்டிய கோயிலைத் தரிசிக்க வரவேண்டும்;

🔶 கஅபாவை இடித்துத் தகர்த்திட வேண்டுமென விரும்பினான். ஆனால் கடுந்தண்டனையால் அல்லாஹ் அவனை அழித்துவிட்டான்.

🔶மற்றொரு புறம், ரோம் பகுதிகளை ஒட்டியிருந்த காரணத்தால் கஸ்ஸானிய அரபியர்கள், தங்லிப், தய்ம் வமிசத்தைச் சேர்ந்த அரபியர்களும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.

🔶 இதைத்தவிர ஹீராவின் சில அரசர்களும் கிறிஸ்துவத்தைத் தழுவினர்.

🎾மஜூஸிய்யா:

🔶 (நெருப்பை வணங்கும் மதம்) இது பெரும்பாலும் பாரசீகத்தை ஒட்டியிருந்த அரபியர்களிடம் காணப்பட்டது.

🔶 இராக், பஹ்ரைன், அல் அஹ்ஸா, ஹஜர் மற்றும் அரபிய வளைகுடா பகுதிகளில் வசித்து வந்த அரபியர்களும் இதைப் பின்பற்றினர்.

🔶🔶இது மட்டுமின்றி யமன் நாட்டை பாரசீகர்கள் கைப்பற்றியிருந்த காலத்தில் யமனியர் பலர் மஜூஸி மதத்தில் இணைந்தனர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 27 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை 10☠

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠ இஸ்லாமிய
போர்வையில்
மனஇச்சை 10☠

💚 *அன்பான சகோதரர்களே*💚

❌அந்த மனஇச்சையை பின்பற்றும் வழிகேடர்கள்....🐒

☠தாங்கள் பின்பற்றும் கேடுகெட்ட மனஇச்சைக்கு நபியவர்களின் பொன்மொழி
களிலிருந்தும் ஆதாரம் வைத்துள்ளார்களாம்...❌❌❌❌

என்று இந்த ஹதீஸ்களையும் ஒரு உஸுலையும் காட்டுகிறார்கள்...
👇👇👇👇👇👇👇

💥நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

💥பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

💥எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இதுபோன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.

✳இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும்.

💥 நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

💚 *அன்பான சகோதரர்களே!*💚

✳மேலுள்ள ஹதீஸும் .,அந்த உஸுலும்  இரண்டுமே ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகயிருந்தும் அது அறிவுக்கு உட்படவில்லை என்றால் அதை தூக்கி எறிந்திட வேண்டும் என்று சொல்வதற்காக ஒருபோதும் பயன்படுத்தக் கூடியதல்ல..❓❓❓❓

❌மாறாக மார்க்கத்திற்கு முரணாக நபியவர்களின் மீது இட்டுக்கட்டப் பட்ட செய்தியை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் வண்ணமாக கூறப்பட்டவைகள்.,.💐

☠இவைகளை போய் இந்த வழிகேடர்கள்☠

💐ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸை மறுப்பதற்கு ஆதாரமாக காட்டுவதே போதுமானது..,
இவர்கள் தங்களின் மனஇச்சை நிரம்பிய தவ்ஹீத் என்ற மதத்திற்கு முஸ்லிம்களை மதமாற்ற திட்டம் தீட்டியவர்கள் என்று...☠☠☠☠

💚 *அன்பான சகோதரர்களே*💚

❌❌ஒரு வேளை அவர்கள் கூறுவது போன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் நம்முடைய உள்ளமும் அறிவும் ஏற்றால்தான் இது நபியிடமிருந்து வந்தது என்று நாம் நம்ப வேண்டும் என்று கூறினால் ...❓❓❓

❌ *உலகத்தில் ஒரு ஹதீஸைகூட நம்மால் மீதம் வைத்துக் கொள்ள முடியாது...*❌❌

❌ஏனென்றால் உலகில் ஒவ்வொருவரும் தன் அறிவிற்கு ஏற்க முடியாத ஹதீஸை இதை ஏற்க கூடாது ...

☠ஏனெறால் என் அறிவுக்கு இது உட்பட வில்லை என்று அல்லாஹ்வின் தூதரின் எல்லா சொற்களை காலில் போட்டு மிதித்துவிடுவார்கள்...☠☠☠

🌴அல்லாஹ் பாதுகாப்பானாக🌴

💐 *ஆக அன்பான சகோதரர்களே*💐

☠இந்த வழிகெட்ட மடயர்கள்  ஹதீஸ்கள் அது நபியிடமிருந்தும் உள்ளதுதானா???
என்பதை நீரூபிக்க யாருடைய அறிவை நிர்ணயிக்கப் போகிறார்கள்...❓❓❓❓❓❓❓❓


✳ *சிந்தித்துப் பாருங்கள்*✳

☠இது ஒரு வழிகெட்ட வாதம் என்பதை மட்டும் உங்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைத்துக் கொள்ளுங்கள் சகோதரர்களே!!🍁


🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:26: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் ☠மனஇச்சை 9

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠இஸ்லாமிய போர்வையில்
☠மனஇச்சை  9 ☠

💚அன்பான சகோதரர்களே💚
🌷ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் குர்ஆனிற்கு முரண்படும்,....
 என்று இட்டுக்கட்டக்கூடிய வழிகேடர்களிடம்,... 🐒

அடுத்தபடியாக இப்படி ஒரு கேள்வியையும் நீங்கள் முன்வையுங்கள்...❓❓❓❓❓❓❓❓

📚இமாம் புஹாரி(ரஹ்)
அவர்கள் 📚

🌷இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை தவறுதலாக தன்னுடைய கிரந்தத்தில் பதிவு செய்துவிட்டார்கள் என்று கூறுகிறீர்கள் அல்லவா.?...🗣

சரி...,..🍁🍁🍁🍁

❌""அப்படியானால் உங்களின் அன்னனும் அவரின் பிச்சிலங்களும்  தவறே நிகழ முடியாதவர்களோ❓❓❓❓❓❓❓❓

💀என்று மண்டைகளில் உரைக்கும்படி கேளுங்கள்....💀

💚அன்பான சகோதரர்களே💚

📓புஹாரி என்ற கிரந்தம் எழுதப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்துவிட்டது ...📓

🗓வரலாற்றில் யாராவது ஒருஇமாம்,....🗓

❌இந்த வழிகேடர்கள் கூறுவது போன்று❌

📓குர்ஆனிற்கு முரண்படும் ஒரு  ஹதீஸை இமாம் புஹாரி தெரியாமல் பதிவு செய்துவிட்டார் என்று கூறியதாக காட்ட முடியுமா❓❓❓❓❓❓❓❓❓❓❓

🗣ஒரு போதும் முடியாது....

ஏனென்றால் 🌴அல்ஹம்து லில்லாஹ்🌴

அவர்களெல்லாம் இந்த ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்பட்டவைகள் அல்ல என்று தெள்ளத் தெளிவாக விளக்க
மளித்துள்ளார்கள்...🍁🍁🍁🍁

🐒வழிகெட்ட அன்னன் மத்ஹபின் மூதாதையர்களான முஃதஸிலாக்கள் மட்டுமே இந்த கேடுகெட்ட வாதத்தை முன்வைத்து......

🌴இன்றைக்கும் சத்திய உலமாக்களின் சாபத்தை சம்பாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்திட வேண்டும்..☠☠☠

அல்லாஹ் அந்த வழி கேடர்களின் ஆபத்தான கொள்கையை விட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக...🍁🍁🍁🍁

🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:26: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-44🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-44🔰

🔶இணைவைத்தல், சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவையே அரபிய தீபகற்பத்தில் பரவி இருந்தன.

🔶இது தவிர யூத, கிருஸ்துவ, மஜூஸி, ஸாபி போன்ற மதங்கள் அரபிய தீபகற்பத்தில் ஆங்காங்கே காணப்பட்டன.

🔶இரண்டு கட்டங்களில் யூதர்கள் அரபிய தீபகற்பத்தில் ஊடுருவினர்.

🔶1) ஃபலஸ்தீனத்தை ‘புக்து நஸ்ரு’ என்ற மன்னன் கி.மு. 587 ஆம் ஆண்டு கைப்பற்றி அங்கு வாழ்ந்த யூதர்களை நெருக்கடிக்குள்ளாக்கினான்.

🔶 யூதர்களின் நகரங்களை அழித்து அவர்களது வசிப்பிடங்களை நாசமாக்கினான்.

🔶மேலும், அவர்களில் அதிகமானோரை பாபில் நகருக்கு கைதிகளாக்கிக் கொண்டு சென்றான்.

🔶 இதனால் அவர்களில் ஒரு பிரிவினர் ஃபலஸ்தீனத்தை துறந்து ஹிஜாஸின் வட பகுதிகளில் குடியேறினர்.

🔶2) கி.பி. 70 ஆம் ஆண்டில் ‘டைடஸ்’ என்ற ரோமானிய மன்னன் ஃபலஸ்தீனை கைப்பற்றினான்.

🔶அவன் யூதர்களையும் அவர்களது வசிப்பிடங்களையும் அழித்தொழித்தான்.

🔶அதன் விளைவாக ஏராளமான யூதர்கள் ஹிஜாஸ் பகுதியிலுள்ள மதீனா, கைபர், தீமா ஆகிய நகரங்களில் குடியேறினர்.

🔶 அங்கு தங்களுக்கென சிறந்த வசிப்பிடங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

🔶 இந்த யூதர்களால் அரபியர்களிடையே யூத மதம் பரவ ஆரம்பித்தது.

🔶 இஸ்லாமின் வருகைக்கு முன்பும் இஸ்லாமுடைய வருகையின் ஆரம்ப காலக்கட்டத்திலும் நடந்த அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் யூத மதத்திற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கியத்துவம் இருந்தது.

🔶இஸ்லாம் தோன்றியபோது இருபதுக்கும் மேற்பட்ட யூத கோத்திரங்கள் அரபிய தீபகற்பத்தில் இருந்தன.

🔶 அவற்றில் பிரபலமானவை கைபர், நழீர், முஸ்தலக், குரைளா, கைனுகாஃ ஆகிய கோத்திரங்களாகும். (ஸஹீஹுல் புகாரி, வஃபாவுல் வஃபா)

🔶‘துப்பான் அஸ்அத் அபூ கரப்’ என்பவனால் யூதமதம் யமன் நாட்டிலும் நுழைந்தது.

🔶இவன் மதீனாவின் மீது போர் தொடுத்தான்.

🔶பிறகு அங்கே, யூதர்கள் மூலம் யூத மதத்தைத் தழுவினான்.

🔶 குரைளா குடும்பத்தைச் சார்ந்த இரு யூத அறிஞர்களை அவன் தன்னுடன் யமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான்.

🔶 அதிலிருந்து யமனில் யூதமதம் பரவியது. அபூ கரபுக்குப் பிறகு அவனது மகன் யூஸுப் தூ நுவாஸ் யமனின் அரசனானான்.

🔶 அவன் நஜ்ரான் பகுதியிலிருந்த கிறிஸ்துவர்கள் மீது படையெடுத்து அவர்களை யூத மதத்திற்கு மாறும்படி நிர்ப்பந்தித்தான்.

🔶 அவர்கள் மறுத்துவிடவே பெரும் அகழிகளைத் தோண்டி அதை நெருப்புக் குண்டமாக ஆக்கி அதில் ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் தூ நவாஸ் வீசி எறிந்தான்.

🔶அதில் ஏறத்தாழ இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் கிறிஸ்துவர்கள் வரை கொல்லப்பட்டனர்.

🔶இந்நிகழ்ச்சி கி.பி. 523ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. (இப்னு ஹிஷாம்)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 26 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-43🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-43🔰

🔶4) ஹரமின் வெளிப் பகுதியிலிருந்து வருபவர்கள் கஅபாவை வலம் வரும்போது ‘ஹும்ஸ்’கள் கொடுக்கும் ஆடைகளை அணிந்தே வலம் வருவதை ஆரம்பிக்க வேண்டும்.

🔶இதற்காக வெளியிலிருந்து வரும் ஆண்களுக்கு குறைஷி ஆண்களும், அதே போன்று பெண்களுக்குக் குறைஷிப் பெண்களும் ஆடைகளை நன்மையைக் கருதி இலவசமாகக் கொடுத்து வந்தனர்.

🔶ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் ஆண்கள் நிர்வாணமாக வலம் வருவார்கள்.

🔶 பெண்கள் தங்களது அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு முன்பகுதி திறந்துள்ள ஒரு மேல் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு வலம் வருவார்கள்.

🔶அப்போது அப்பெண்கள் இக்கவிதையைக் கூறுவார்கள்.

”இன்று (உடலின்) சில பகுதிகளோ அல்லது முழுப் பகுதியோ வெளிப்படுகிறது.

🔶அவற்றில் எது வெளிப்படுகிறதோ அதைக் காண்பது எவருக்கும் முறையற்றது.”

🔶இச்செயலைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்:

🔶ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7 : 31)

🔶அதேநேரத்தில் யாரேனும் ஓர்ஆண் அல்லது பெண் தங்களை மேன்மையானவர்களாக கருதி இரவல் ஆடை வாங்காமல் தாங்கள் கொண்டு வந்த ஆடையிலேயே வலம் வந்துவிட்டால் அது முடிந்தவுடன் அந்த ஆடையை எறிந்து விடுவார்கள்.

🔶 வேறு யாரும் அதனைப் பயன்படுத்த மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

🔶5) அவர்கள் இஹ்ராம் அணிந்த பிறகு தங்களது வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வீட்டு தலைவாசல் வழியாக நுழையாமல் பின்பக்கச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியாகவே போவார்கள், வருவார்கள்.

🔶 இந்த மூடத்தனமான செயலை மிகவும் உயர்ந்த நற்செயல் என அவர்கள் கருதினார்கள். இதை கண்டித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:

🔶(நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள்.

🔶 எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர்.

🔶ஆதலால், நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள்.

🔶 அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல்குர்ஆன் 2 : 189) (ஸஹீஹுல் புகாரி)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 25 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-42🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-42🔰

🔶அறியாமைக்கால அரபியர்களிடம் இவ்வாறான மூட நம்பிக்கைகள் நிறைந்திருந்தபோதிலும் இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் சில நெறிமுறைகளும் அவர்களிடையே எஞ்சியிருந்தன.

🔶அந்த மார்க்கத்தை அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்து விடவில்லை.

🛢 எடுத்துக்காட்டாக, இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்துதல், அதனை வலம் வருவது, ஹஜ், உம்ரா செய்வது, அரஃபா முஜ்தலிஃபாவில் தங்குவது, அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதல் போன்ற நற்செயல்கள் அவர்களிடம் நிலைபெற்றிருந்தன.

🔶 எனினும், அந்த நற்செயல்களில் பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியிருந்தனர்.

🔶அந்த மூடநம்பிக்கைகளில் சில,

1) குறைஷிகள் இவ்வாறு கூறி வந்தனர்: நாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததிகள்;

🔶 புனித மக்காவின் பூர்வகுடிகள்; சங்கைமிகு கஅபாவின் நிர்வாகிகள். ஆகவே ”எங்களைப் போன்ற அந்தஸ்தோ உரிமைகளோ வேறு அரபியர் எவருக்கும் கிடையாது” என்றனர்.

🔶 அவர்கள் தங்களுக்கு ‘ஹும்ஸ்’ எனப் பெயரிட்டுக் கொண்டனர். ஹஜ் காலங்களில் நாங்கள் ஹரமின் எல்லையை விட்டு வெளியேறி ஹில் (ஹரம் அல்லாத) பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்று கூறி அவர்கள் ஹஜ் காலத்தில் அரஃபாவில் தங்க மாட்டார்கள்.

🔶 முஜ்தலிஃபாவில் இருந்தே திரும்பி விடுவார்கள்.

🔶இதனைத் தடை செய்து அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தை இறக்கினான்,

🔶பின்னர் மனிதர்கள் திரும்புகின்றந் இடத்திலிருந்தே நீங்களும் திரும்பிவிடுங்கள். (அல்குர்ஆன் 2 : 199) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

🔶2) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ் ஆகிய எங்களுக்குப் பாலாடைக் கட்டி செய்வதும் நெய் உருக்குவதும் இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்டது.

🔶 மேலும், இஹ்ராமில் இருக்கும் போது கம்பளிக் கூடாரங்களில் நுழைய மாட்டோம்.

🔶தோலினால் ஆன கூடாரங்களைத் தவிர மற்ற கூடாரங்களில் நிழலுக்காக ஒதுங்கமாட்டோம். (இப்னு ஹிஷாம்)

🔶3) ஹரமுக்கு வெளியிலிருந்து ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வருபவர்கள் தங்களது பகுதியிலிருந்து கொண்டு வந்த உணவு மற்றும் பானங்களை ஹரமுக்குள் உண்ணவோ பருகவோ கூடாது.

🔶ஹரமின் பகுதியில் கிடைப்பதையே உண்ண வேண்டும். (இப்னு ஹிஷாம்)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 24 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை 8☠

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠இஸ்லாமிய
போர்வையில்
மனஇச்சை 8☠

💐 *அன்பான சகோதரர்களே*💐

🍁முந்திய பதிவில் ஒரு முக்கியமான அடிப்படையை நான் விளக்கியிருந்தோம்..

🌴அதாவது குர்ஆனிற்கு முரண்படுகிற ஒரு மோசமான ஹதீஸை யூதர்களிடமிருந்து  பதிவு செய்தது ஹதீஸ்கலை வல்லுநர்கள்தான் என்று அந்த வழிகெட்ட கூட்டம் ஒரு அபாண்ட பழியை முஹத்திஸீன்கள் மீது சுமத்தியதை சுட்டிக்காட்டி
யிருந்தோம்..🌴

🐒 *இந்த வழிகேடர்கள் தங்களின் வார்த்தையில் எவ்வளவு மோசடிக்காரர்கள் என்பதை மற்றுமொரு கேள்வியின் மூலம் நீங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்...*

🗣 *நீங்கள் இப்படிக் கேளுங்கள்...*🗣

💥 ~இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனிற்கு முரன்படுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்..~

இன்னும் புஹாரி போன்ற,...

🌷ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் புத்தகதில் உள்ள ஹதீஸையும் ஒரு யூதன் இட்டுக்கட்டி
யிருக்கலாம்...
என்கிறீர்கள்....

 👆🏽இதற்கு வலுசேர்க்கும் வண்ணமாக உங்களின் அற்பமான ஒரு யூகத்தை ...
அதாவது புஹாரியும் மனிதர்தானே அவரும் தவறிழைத்  திருக்கலாம் என்றும் அவர்மீதும் பழிசுமத்துகிறீர்கள்..

⁉ *அப்படியென்றால்*

💥புஹாரியில் இந்த இஸ்லாத்தை தகர்க்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை யார் இட்டுக்கட்டியது என்று கேளுங்கள்...❓❓❓

⁉புஹாரியில் நீங்கள் கூறும் ஹதீஸ்கள் அனைத்தும் நபி(ஸல்)அவர்கள் வரைக்கும் சங்கிலித்தொடராக அறிவிப்பாளர் பட்டியலும் இருக்கிறது... அவர்களைப்பற்றிய
வாழ்க்கை வரலாறும் இருக்கிறது...

🗣 *~இப்பொழுது சொல்லுங்கள் இவர்களில் யார் யூதன்~*
❓❓❓❓❓❓❓

🕵கியாமத் வரைக்கும் அவர்களால் தங்களின் கேடுகெட்ட யூகத்திற்கு பதிலளிக்க முடியாது..❌❌❌❌

💐 *அன்பான சகோதரர்களே*💐

💐நான் ஒன்றை மட்டும் எப்போதும் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறேன்...💐

👍 *நிச்யமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனிற்கு  ஒருபோதும் முரண்படாது....*👍

☠ *தனது மனோ இச்சைக்கு மார்க்கத்தை வலைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களின் புத்திக்கு வேண்டுமானால் முரண்படலாம்...*☠

🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

✳✳✳✳✳✳✳✳✳✳

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*​பேஸ்புக்கில் எம்மை தொடர​* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-41🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-41🔰

🎾அர்ராஃப்:

🔶தன்னிடம் வருபவர்களின் சொல், செயல் நிலைகளை ஆராய்ந்து செய்திகளைக் கூறுபவன்.

🛢 எடுத்துக்காட்டாக திருடுபோன பொருள்கள் எங்கிருக்கிறது? திருடியவன் யார்? காணாமல் போன பொருள் எங்கிருக்கிறது? போன்ற விபரங்கள் அனைத்தையும் தன்னால் அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுபவனைப் போல!

🎾முநஜ்ஜிம்:

🔶நட்சத்திரம் மற்றும் கோள்களின் சுழற்சியைக் கவனித்து உலகின் நிலைமைகளையும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் தன்னால் அறியமுடியும் எனக் கூறுபவன்.

🔶இந்த முநஜ்ஜிம்களின் கூற்றை அவர்கள் நம்புவது உண்மையில் நட்சத்திரத்தை நம்புவதாகும்.

🔶அவர்கள் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததின் காரணமாக, மழை பொழிந்தால் அம்மழை பருவ நட்சத்திரத்தின் காரணமாகவே பொழிந்தது என்று கூறுபவர்களாக இருந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

🔶அவர்களிடையே துற்குறி மற்றும் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.

🔶அவர்களுடைய வழக்கத்தில் ஒன்று, ஏதாவதொரு காரியத்தை செய்ய நினைத்தால் ஒரு பறவையை அல்லது மானை விரட்டுவார்கள்.

🔶அது வலப்புறமாகச் சென்றால் அதை நற்சகுனமாகக் கருதி தான் விரும்பியிருந்த காரியத்தை செயல்படுத்துவார்கள்.

🔶 இடப்புறமாகச் சென்றால் அதை அபசகுணமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள்.

🔶இவ்வாறே அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் பிராணிகளோ, பறவைகளோ குறுக்கிட்டால் அதிலும் சகுனம் பார்ப்பார்கள்.

🔶அவ்வாறே அவர்கள் முயலின் கெண்டைக்கால் பகுதியை தங்களது இல்லங்களில் தொங்க விடுவார்கள். (நம் நாட்டில் நரிப்பல், புலிப்பல் மயில் இறகு போன்றவற்றை பயன்படுத்துவதுபோல) சில நாள்கள், மாதங்கள், பிராணிகள், வீடுகள், பெண்கள் ஆகியவற்றிலும் அபசகுனம் பார்த்தனர்.

🔶 மேலும், தொற்று நோய் இருப்பதாகவும் நம்பினர்.

🔶 மேலும் ‘ஹாம்மா’ என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அதாவது, ”ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலையாளியிடம் பழி தீர்க்கப்படாதவரை அவனது ஆன்மா சாந்தியடையாமல் வீடுகளின் மேல் ஆந்தை உருவில் பறந்துகொண்டு ”தாகம்! தாகம்! என் தாகத்தைத் தணியுங்கள்! என் தாகத்தைத் தணியுங்கள்” என கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்.

🔶 கொலையாளியை பழிவாங்கினால் மட்டுமே ஆன்மா சாந்தியடையும்” எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். (ஸஹீஹுல் புகாரி)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday 21 June 2016

இஸ்லாமிய போர்வையில் மனோஇச்சை பகுதி -7☠

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 ​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​​​💠

☠இஸ்லாமிய
போர்வையில் ☠
☠மனோஇச்சை -7☠

💥 *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!!*💥

🐒 ~அந்த ஷைத்தானிய தோழர்கள்~🐒

🌷தன்மனஇச்சைக்கு மாறாக எந்த ஹதீஸ்களெல்லாம் இருக்குமோ ...
அந்த  ஹதீஸ்களில் எல்லாம் குறைகளை தேடித்திரிவார்கள்...

என்பதை முன்பே சுட்டிக்காட்டி
யிருந்தோம்..☠

🌴அதை தொடர்ந்து அடுத்தபடியாக 🌴

🐒அந்த ஷைத்தானிய தோழர்கள் தங்களின் மனஇச்சைக்கு
எதிராக உள்ள
அந்த ஹதீஸ் ஆதரப்பூர்வமானதாக..

அதாவது குறைகாண
முடியாததாக,.. இருந்தால் ...❓❓

✳அப்பொழுது
 அடுத்த கட்ட நடவடிக்கைக்கு
முன் வருவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி
யிருந்தோம்.🐒

❌உதாரணமாக❌
           இப்படி
🗣கூறுவார்கள்..🗣

🌷இந்த ஹதீஸ்🌷

❌ *குர்ஆனிற்கு முரண்படுகிறது.*❌

🐒என்று தன்மனோ
இச்சைக்கு தோதுவாக ஒருசில ஆயத்துகளை எடுத்துக் காட்டி தங்களின் வழிகேட்டிற்கு வலு தேடிக்கொள்வார்கள்..☠☠☠☠☠☠

💚 *அன்பான சகோதரர்களே*💚

💐நான் இங்கு ஒரு அடிப்படையை முன்வைக்கிறேன்...💐

👍 *நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள்  குர்ஆனிற்கு எதிராக ஒருபோதும் பேசமாட்டார்கள்...*
என்பதை வழிகேடர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்..

🗣இதோ அவர்களின் கூற்று..🗣


🎓"இந்த ஆதரப்பூர்வமான ஹதீஸ் ...
               நிச்சயமாக.     நபியவர்கள் கூறியதாக இருக்காது என்பார்கள்...🍁

☠ஆனால் அந்த சொல்லை வைத்துதான் ☠

💐" நம்முடைய சத்திய தூதரின் சொல்லை  பாதுகாப்பற்றது என்று நிறூபிக்க  மாபெரும் சதித்திட்டம் வைத்திருக்கிறார்கள்..
         என்பதை என் எத்தனையோ இஸ்லாமிய சகோதரர்கள் சிந்தித்து பார்க்காமல் அந்த பாதாலக்குழியில் விழுந்து நாசமாகிவிடுகிறார்கள்...🕸

💚 *அன்பான சகோதரர்களே*💚

❓❓நீங்கள் அந்த கயவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேளுங்கள்..❓❓

🌴அப்படியானால் யாரிடமிருந்துங்க இந்த ஆதரப்பூர்வமான ஹதீஸெல்லாம் வந்தது என்று கேட்டுப்பாருங்கள்...❓❓

🐒அந்த வழிகெட்ட கூட்டத்திடமிருந்து வரும் பதில் என்ன தெரியுமா❓

🕸அது ஏதாவது யூதர்களின் கையாடலாக இருக்கும்...என்று வெட்கமே இல்லாமல் தங்களின் மனஇச்சை நிரம்பிய யூகத்தை கூறி,..
இந்த மொத்த இஸ்லாமிய சமூகத்தின் சத்திய தூதரின் சொல்லை பாதுகாப்பு அற்றதாக ஆக்கிவிடுவார்கள்...☠

💐 ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஒரு யூதனே இட்டுக்கட்டியிருப்பான் என்று சொல்வதின் மூலம்..

💐மற்ற எல்லா  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஏன் யூதர்கள் இட்டுக்கட்டி
இருக்கக்கூடாது...??

✳என்ற சந்தேகத்தை மட்டுமே இந்த சமூகத்தில் மீதமாக விட்டுவைக்கிறார்கள்.என்பதை நாம் உணர்ந்து பார்க்க கடமை பட்டிருக்கிறோம்...சகோதரர்களே!!

⁉ *இப்பொழுது கூறுங்கள் இவர்களா இந்த சத்திய தீனிற்கு நலவை நாடுபவர்கள்*❓❓❓

💐அப்படியானால் ஹதீஸ்கலை என்பதும்...💐

💐ஹதீஸ்கலை வல்லுநர்களும் எதுவுமே தெரியாமல் ஹதீஸ்களை யூதர்களிடமிருந்து பெற்று பதிந்துவிட்டார்களா????????

💐அல்லாஹ்வின் நல்லடியார்களே 💐

☠எச்சரிக்கையாக இருங்கள் ..☠

🐒 _*இந்த மனஇச்யாளர்களை உங்கள் சத்திய தீனை கடைபிடிக்க முன்னோடியோக தேர்ந்தெடுத்தால் அழிவை தவிர வேறு எதுவும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்*_🕸

🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 22 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-40🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-40🔰

🔶அவர்களில் எவருக்கேனும் ஒருவரது வமிசம் பற்றி சந்தேகம் எழுந்தால் அவரை 100 திர்ஹம் 100 ஒட்டகைகளுடன் ‘ஹுபுல்’ என்ற சிலையிடம் அழைத்து வருவார்கள்.

🔶தாங்கள் கொண்டு வந்த நாணயங்களையும் ஒட்டகங்களையும் அம்புகளுக்குப் பொறுப்பான பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள்.

🔶 பூசாரி அம்பை எடுப்பார். அப்போது ‘மின்கும்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால், அவரைத் தங்களது இனத்தைச் சேர்ந்தவராக ஒப்புக் கொள்வார்கள்.

🔶 ‘மின்கைகும்’ என்ற அம்பு வந்தால் அவரைத் தங்களுடன் நட்புகொண்ட கோத்திரத்தைச் சேர்ந்தவராகக் கருதுவார்கள்.

🔶‘முல்ஸக்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால் அவர் அதே நிலையில் நீடிப்பார்.

🔶 அதாவது அவருக்கு எந்த வமிசப் பரம்பரையும் கிடையாது. எந்த நட்பு கோத்திரத்தை சேர்ந்தவராகவும் அவரைக் கருத மாட்டார்கள். (இப்னு ஹிஷாம்)

🔶இதுபோன்றே அம்புகள் மூலம் சூதாடும் ஒரு பழக்கமும் அவர்களது வழக்கத்தில் இருந்தது.

🔶 அதாவது, அவர்கள் ஓர் ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள்.

🔶பிறகு அதை அறுத்து 28 அல்லது 10 பங்குகளாகப் பிரிப்பார்கள்.

🔶அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும். ஒன்றில் ‘ராபிஹ்’ என்றும் இரண்டாவதில் ‘குஃப்ல்’ என்றும் அரபியில் எழுதப்பட்டிருக்கும்.

🔶 ஒவ்வொருவரின் பெயரையும் கூறி அம்புகளை உருவும்போது ‘ராபிஹ்’ என்ற அம்பு வந்தால் அவர் பணம் கொடுக்காமல் இறைச்சியில் அவருக்குரிய பங்கை மட்டும் எடுத்துக் கொள்வார்.

🔶 ‘குஃப்ல்’ என்ற அம்பு வந்தால் அவர் தோல்வியடைந்தவர் ஆவார். அவருக்கு இறைச்சியில் பங்கு எதுவும் கிடைக்காது.

🔶ஆனால், அந்த முழு ஒட்டகைக்கான விலையையும் அவரே கொடுக்க வேண்டும்.

🔶மேலும் சோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுகளிலும் ஆருடங்களிலும் அம்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

🎾கான்:

🔶உலகில் நடக்க இருக்கும் செய்திகள் மற்றும் இரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று வாதிடுபவன்.

🔶அவர்களில் தங்களுக்கு ஜின் செய்தி கொண்டு வருகிறது என்று கூறுபவரும் தனது அறிவாற்றலின் மூலம் மறைவானவற்றை அறிவோம் என்று கூறுபவரும் உள்ளனர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 22 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

பிரிவிணை அழிவிர்க்கு ஆரம்பம்~*⁉

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​​*💠

⁉ *~பிரிவிணை அழிவிர்க்கு ஆரம்பம்~*⁉

⁉இஸ்லாம் ஒற்றுமையை விரும்பும் ஒற்றுமையை போதிக்கும் மார்க்கம்.

           ⁉ *ஆனால் இன்று இஸ்லாத்தில் பல பிரிவுகள் பல இயக்கங்கள் என்று தான் மாறும் இத்தகய சூழ்நிலை*⁉

✳ எங்கள் பள்ளியில் தொப்பி போடாமல் தொழக்கூடாது ...என்றது,..ஒரு பிறிவு❌

❌மற்றொரு பிறிவு தொப்பி போடாமல் தொழுவதற்கென்றே நாங்கள் ஒரு பள்ளியை கட்டிக் கொண்டு போகிறோம் என்று பிரிந்து போகிறது.

⁉ *இருவர்களில் நாம் யாரை நாம் குற்றம் சாட்டுவது..*❓

🌺ஒரு முஸ்தஹப்பான காரியத்தை செய்யாவிட்டால் பள்ளிக்குள் வரமுடியாது என்று கூறினார்களே!!!
அவர்களையா??❓❓

          ⁉அல்லது ஒரு முஸ்தஹபான விஷயத்தை வைத்துக் கொண்டு பிரிவிணையை ஏற்படுத்தி பிறிந்து போனார்களே!!
அவர்களையா❓❓❓

2⃣. *விரல்களை அசைத்துக் கொண்டு தொழுதால் இந்த பள்ளியில் தொழவேண்டாம்*
என்று ஒரு கூட்டம் சொல்கிறது.

✳மற்றொரு கூட்டம் இருவேறு கருத்துகள் பொறுந்தும் அந்த விஷயத்திற்காக நாங்கள் எங்களின் விரலசைப்பதற் கென்றே ஒரு பள்ளியை கட்டிக் கொள்கிறோம்...என்று பிறிந்து ஓடிநார்களே...

 ⁉ *இவர்களில் நாம் யாரை குற்றம் சொல்வது...*⁉

👆🏽இன்னும் இதுபோன்ற பல்வேறு மார்க்கத்தில் கட்டாயம் என்று வழியுறுத்தப் படாததை யெல்லாம் தன்மனஇச்சைக்கு ஏற்ப வளைத்து...
மார்க்கத்தில் பிரிவிணை செய்தவர்கள் யார்❓❓
🌴 *மக்களே!!சிந்தித்து பாருங்கள்...*🌴🌴

✳இந்த சமூகத்தின் ஒற்றுமையை அஞ்சி செய்யப்பட்ட சதிகள்தான் எத்தனை??

✳இன்றைக்கு வரைக்கும் அரசியலில் இந்த சமூகம் தமிழ் நாட்டில் இன்னும் ஏன் கால் பதிக்க முடியவில்லை சிந்திக்க வேண்டாமா❓❓

✳நமக்குல் இருக்கும் பிரிவினையே இதர்க்கு காரணம் என்று என்றாவது நாம் சிந்துத்து இருக்கிறோமா?

🗣 *இந்த பிறிவிணைவாதிகள் முதலில் சொல்லி கொடுப்பது ஒன்றுதான்.* 🗣

⚠யாருக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களை பார்த்து இவர்களை ஆதரிக்காதே என்று தான் கூறுகிறார்கள்.


✳எத்தனையோ அரசியலில்  தலைமை தாங்கிய இஸ்லாமிய சகோதரர்கள் நம்முடைய சமூகத்தில் இருந்ததாக வரலாறு சான்று பகறுகின்றது..

✳ஆனால் அதை முற்றிலும் துறந்து விட செய்தவர்கள் இந்த சமூகத்திற்கு நலவை நாடியவர்களா??

✳ *சகோதரர்களே...!!*

✳இயக்கம் அது இது என்று சிறிய சிறிய விசயத்தை காரணம் காட்டி நமக்குல் சன்டை போட்டுக்கொண்டு இருந்தால்.

☝🏻அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் தமிழகத்தில் முஸ்லீம்களே இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும்.

👍 *சிந்திப்போம் செயல்படுவோம்*👍

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-39🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-39🔰

பகுதி-39

📜இதைப்பற்றியே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

🔶எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ”அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவற்றை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). (அல்குர்ஆன் 39 : 3)

🖲(இணைவைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் ”இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 10 : 18)

🔶மூடநம்பிக்கைகள்

🔶அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர்.

🔶அந்த அம்புகள் மூன்று வகையாக இருக்கும்.

🖲முதல் வகை:

🔶இதில் மூன்று அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ‘ஆம்!’ எனவும்

 🔶மற்றொன்றில் ‘வேண்டாம்’ எனவும் எழுதப்பட்டு,

🔶மூன்றாவதில் எதுவும் எழுதப்படாமல் இருக்கும். திருமணம், பயணம் போன்ற முக்கியமானவற்றில் முடிவெடுப்பதற்காக அவற்றில் ஒன்றை எடுப்பார்கள்.

🔶அவற்றில் ‘ஆம்!’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலைச் செய்வார்கள்.

🔶‘வேண்டாம்’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலை அவ்வருடம் தள்ளிப்போட்டு அடுத்த வருடம் செய்வார்கள்.

🔶எதுவும் எழுதப்படாத அம்பு வந்தால் முந்திய இரண்டில் ஒன்று வரும்வரை திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

🖲இரண்டாவது வகை:

🔶இந்த அம்புகளில் குற்றப் பரிகாரம் நஷ்டஈடு போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

🖲முன்றாம் வகை:

🔶இந்த அம்புகளில் ‘மின்கும்’ (உங்களில் உள்ளவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும்

🔶 ‘மின்கைகும்’ (உங்களில் உள்ளவர் அல்லர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும்,

🔶‘முல்ஸக்’ (இணைக்கப்பட்டவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் என மூன்று அம்புகள் இருக்கும்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 21 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

ஃபித்யாவை மறுக்க வழிகேடர்கள் போடும் குட்டிகர்ணம் பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்​*💠

☠ ~*எச்சரிக்கை_4*~☠

🍊ஃபித்யாவை மறுக்க.    வழிகேடர்கள் போடும்🍊
 🐒குட்டிகர்ணம்-4🐒

✳ *அன்பான இஸ்லாமிய சகோதரர்களே.!!*✳

🐒மனஇச்சையை மார்க்க
மாக்கிக் கொண்டவர்கள்🐒

🍁ஸஹாபாக்களின் சொல் இல்லாமலே நாங்கள் இந்த (2:184)
வசனத்தை அறிந்து கொள்வோம் என்று வாயிற்கு வந்தாற்படி
உலறியுள்ளார்கள்...🐒

🌴உண்மையில் அந்த ஆயத்தின் பின்னனியை அறியாமல் நிச்சயமாக அந்த ஆயத்தை யாராலும் அறிய முடியாது என்பதை நாம் அதை சற்று உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம்..🌴

🍁அதை இங்கு நான் பதிவிடுகிறேன்...🔰🔰

🎓"""(நோன்பு)
 வைப்பதற்கு சக்தி பெற்றவரின் மீது ஒருநபருக்கு உணவளிப்பது கடமையாகும்....🎓

📖அல்குர்ஆன்:2:184

🌷இந்த ஆயத்தை🌷

🍁ஒருவர்  ஸஹாபாக்களின் சொல்லில்லாமல் எப்படியும் விளங்க சாத்தியமுள்ளது என்பதையும் இங்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்...🌷🌷

❌சக்தியுள்ளவர் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பது ....
ஏனென்றால் ...
 
❌ *நமக்கெல்லாம் நோன்பு வைக்க அல்லாஹ் சக்தியை தந்திருக்கிறான் அல்லவா...*❓❓❓

  ❌எனவேதான் நோன்பு பிடித்துவிட்டு அதற்கு சக்திகொடுத்த தற்காக உணவளிக்க கூறுகிறான் என்றும் ஒருவர் புரிந்து கொள்ள சாத்தியம் இருக்கிறது..அல்லவா..❌

🌿உண்மையிலேயே

மேலே  இந்த ஆயத்திற்கு விளக்கமாக காட்டப்பட்ட
         அந்த ஸஹாபாக்களின் சொல் மட்டும் இல்லையானால்
 🐒இந்த வழிகேடர்கள் 🐒

    💐 மேலே நான் கூறியவாறுதான் இந்த ஆயத்திற்கு விளக்கமளித்  திருப்பார்கள்..❌

அவ்வாறுதான் அதை விளங்க முடியும்...
🐒எனவே அந்த வழிகெட்ட கூட்டம் கீழே குப்பர விழுந்து விட்டு மீசையில் மண்ணு ஒட்டாத கதையாக பேசுவது.. இந்த மார்க்கத்தை கேளி செய்யும் வண்ணமாகவே உள்ளது,...🐒🐒🐒🐒

🌴இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்

(2:184)வசத்தை ஸஹாபாக்கள் முற்றிலுமாக (மன்சூஹ்)காலாவதியாகிவிட்டது என்று சொன்னார்களா??? பார்ப்போம்...👀👀

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​​பேஸ்புக்கில் எம்மை தொடர​​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 20 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡