Monday 30 March 2020

நேரத்தை வீணடிக்க வேண்டாம்

இக்கணம் திருந்தவில்லை என்றால் எப்போது திருந்துவோம்

சிந்தித்து செயல்படுவோம்

நவ நாகரீக உலகில் மூழ்கி திளைத்த நம்மை என் நாட்டமில்லாமல் துரும்பும் அசையாது என அவனது வல்லமையை பரை சாட்டியுள்ளான் ரப்புல் ஆலமின் எல்லாப் புகழும் இறைவனுக்கே.

அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து அவர்கள் பிறப்பித்துள்ள ஆணைகளை தவறாமல் பின்பற்றுவோம். ( தலைமைக்கு கட்டுப்படுதல் நபிவழி )

💠 திருக்குர்ஆனை ஓதி வாருங்கள் தமிழ் மொழி பெயர்ப்புகளை ஓதுங்கள் என்று அறிவுரை கூறியவர்களுக்கு மக்களிடமிருந்து கிடைத்த பதில் நேரமில்லை

💠 தொழில் செய்பவர்கள் என் தொழிலை கவனிக்கவே என்னால் முடியவில்லை,

💠 மாணவ கண்மணிகள் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லவே நேரம் சரியாக உள்ளது ஐந்து வேளை தொழுகைகளை தொழுவதே சிரமமாக எண்ணி திரிந்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள்

💠 இறைவன் அனைத்தையும் தழைகீழாக ஆக்கியுள்ளான்.

💠 உலகத்தின் வல்லரசு நாடுகள் பட்டியலில் முதலிடம் வகித்தவர்களே இன்று நோய் தொற்றில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

💠 உலக நாடுகள் அனைத்து வசதிகளும் இருந்தும் செய்வதறியாது திகைத்து உள்ளனர் மக்களை வீடுகளில் அடைப்பதை தவிர...

💠 இந்த தருணத்தையேனும் நம் மறு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உபயோகபடுத்த நாம் நம்மை தயார்படுத்தி கொள்ளல் வேண்டும்.

💠 விடுமுறை நாட்களை தொலைக்காட்சியிலும்,இணையத்திலும் கழிப்பதை போன்று இந்நாட்களையும் வீண் ஆக்காமல் இருப்பதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டும்.

💠 தொழுகைகளை குடும்பத்தோடு ஜமாத்தாக தொழுது வாருங்கள்

💠 தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவதே 27 மடங்கு நன்மை அதிகம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி)

குறைந்தது ஒரு நாளைக்கு 10 பக்கங்களாவது திருக்குர்ஆனை அரபு மொழியில் ஓதி வாருங்கள்,

கண்டிப்பாக இது சிறமமானது அல்ல ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இரண்டு பக்கம் ஓதி வந்தால் இலகுவாக ஒரு நாளில் நம் இலக்கை அடையலாம்.

سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ.) سنن الترمذي( *அல்லாஹ்வின் வேதத்திலிருந்து யாரேனும் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு  ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும். ஆலிப் லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று கூற மாட்டேன். எனினும் அலிப் என்பது ஒரு எழுத்து லாம் என்பது ஒரு எழுத்து மீம் என்பது ஒரு எழுத்தாகும். மூன்றும் மூன்று எழுத்துக்களாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்ருக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளை பெறுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.* அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்:

💠 குர்ஆன் தர்ஜுமாவையும் நாளுக்கு நாள் அரபு குர்ஆனுக்கு ஏற்ப ஓதி வாருங்கள் திருக்குர்ஆனின் முழு சுவையையும் அடையலாம்.

💠 ஹதீஸ் கிரந்தங்களையும் சக்திக்கேற்றார் போல் படித்து வாருங்கள் .இந்த பதிவோடு இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை தரவிறக்கம் செய்து வைத்துகொள்ளுங்கள்.

💠 குறைந்த இவற்றையாவது கடைபிடித்து வாருங்கள் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக.

Sunday 29 March 2020

அவசியம் கடைப்பிடிப்போம்

அவசியம் கடைப்பிடிப்போம்

இத்தாலி அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளின் கவனக்குறைவால் மக்கள் பெருமளவுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்
நமது அரசின் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்
இருந்தாலும் கொரோனா வைரஸ் COVID-19 சம்மந்தமாக நமது
அரசு மேற்க்கொண்ட
ஆரம்பகட்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்காவிட்டாலும் இப்போது முழு கவனத்துடன் தீர்வை நோக்கி செயல்படுகிறது
அதனால் அரசின்
அறிவுரைகளை கேட்டு
அதன்படி நடந்தால் மட்டுமே
அல்லாஹ்வின் உதவியால் மீள முடியும்

144 தடை உத்தரவுக்கு
முழுமையாக மக்கள் இன்னும் கட்டுப்படவில்லை
வந்தால் பார்த்துக்கொள்ளலாம்
என்கிற மனநிலை
பெரும்பாலான இளைஞர்களிடம் இருக்கிறது

இதுவரையில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின்
சர்வேயின் முடிவில்
இறப்பு சதவிகிதம்
பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள்
இதற்கு காரணம்
நமது நாட்டைப் போல
அங்கும் ஆண்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்திருக்கலாம்
என்பதை கவனத்தில் கொண்டு
இனிமேலாவது அரசு நடவடிக்கைகள் அனைத்திற்கும்
இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க
வேண்டும்

ஒரு கார்ட்டூன் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கிறது
வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தீக்குச்சிகள்
நெருப்பு வைக்கப்பட்டு சுற்றி வரும்போது
ஒரு குச்சி மட்டும் விலகி விடுகிறது
அதோடு நெருப்பு தொடர்பு கிடைக்காமல்
அணைந்து விடுகிறது
வைரஸ் பாதிக்காமல் இருக்க
தனித்திருத்தல் என்பது இதேபோன்றுதான்
தொடர்ந்து தாக்குவதற்கு
தொடர்பு கிடைக்காமல் தடுத்துக்கொள்ளலாம்
அதனால் தனிமைப் படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
இன்றளவில் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால்
தனித்திருப்பது ஒன்றே சிறந்த வழியாக இருக்கிறது

நமது நாட்டைப் பொருத்தவரை
வாரக்கணக்கில் வருவாய் நின்று போனால்
நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்கள்
நிறைய இருக்கிறார்கள்
அவர்களுக்கு அரசு உதவி கிடைக்கலாம்
அதை உடனடியாக எதிர்பார்க்க முடியாது
அதனால் அருகில் இருக்கும் வாய்ப்புள்ளவர்கள்
அவர்களுக்கு வலியச் சென்று
உதவிட வேண்டும்
சமைக்கும்போது அடுத்த வீட்டின் சூழ்நிலையை அறிந்து
கூடுதலாக சமைக்க சொன்ன மார்க்கத்தில் நாம் இருக்கிறோம்
இந்த இக்கட்டான
நேரத்தில் அவர்களுக்கு நாம் செய்யும் உதவிகளால் அல்லாஹ் நாடினால் நமது நெருக்கடியிலிருந்து நம்மை காப்பதற்கு காரணமாக அமையலாம்

நெருக்கடியான சூழ்நிலையில்
சில தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
வழி தெரியாமல் சிலர் தடுமாறலாம்
அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதும்
பெரிய நன்மைக்குரிய செயலாகும்
உதாரணமாக தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு செல்ல காவல்துறை அதிகாரியின் அனுமதி பெற்றுக்கொடுப்பது
சொந்த ஊருக்கு செல்வதற்கு அனுமதி வாங்க தெரியாமல் திணறி கொண்டிருப்பவர்களுக்கு
அதற்கான வழியைக் காட்டுவது
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு
தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்
மருந்துகள்
வெளியூரில் போய் வாங்க வேண்டி இருக்கும்
அதுபோன்றவர்கள் யாரென தெரிந்து
அவர்களிடம் மருந்துச் சீட்டுகளையும்
பணத்தையும் பெற்றுக் கொண்டு
காவல் நிலையத்திற்கு சென்று
மருந்து வாங்க டவுனுக்கு செல்வதற்கு அனுமதி வாங்கி
எல்லோருக்கும் தேவையான மருந்துகளை வாங்கி கொண்டு வந்து கொடுப்பது
இது போன்ற இன்னும் பல தேவைகள் இருக்கலாம்
விபரமான இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம்
அதேநேரம் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

Friday 27 March 2020

கியாமத்தின் அடையாளமா

கேட்டதை பார்பதை பரப்புபவன் பொய்யன்

இப்போது சமிப காலமாக ஒரு ஹதீஸ் உலாவிக் கொண்டு இருக்கிறது அதாவது

நபி(ஸல்)அவர்கள் சகாபாக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது.சகாபாக்கள் நபி அவர்களிடம் கேட்டார்கள் கியாமத் நாளின் கடைசி அடையாளம் எதுவென்று? நபி கூறினார் பள்ளியின் வாசல் மூடப்படும் பாங்கு ஓசை கேட்டூம் வீட்டிலே தொழுவார்கள்..ஜூம் ஆ--- லுகர் தொழுகையாக மாற்றப்படும் கொடிய நோய்கள் வந்து கொத்தாக இறப்பார்கள்.... அவ்வப்போது  ஓர் இரவில் மகதி (அலை)அவர்கள் ஊன்றுகோல் ஊன்றி வருவார் அவரை தொடர்ந்து தஜ்ஜால் தோன்றுவான் அதுதான் கியாமத் நாளின் கடைசி அடையாளம் ஆகும்......ஆகையால் தஜ்ஜால் ஆட்சி வந்தது -கியாமத் நெருங்கியது....... ஹதீஸ் 189:17

இங்கு குறிப்பிட்டுல்ல எண் 189:17
எந்த ஹதீஸிலும் இப்படிப்பட்ட எண் இலக்கம் பயண்படுத்தப்படவில்லை.

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தி

அல்லாஹ் விற்க்கும் அவனது தண்டனைக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள்

நமது நபியவர்கள் கூறியதை கூட நினைத்து நீங்கள் பயப்படமாட்டீர்களா??

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!

அறிவிப்பவர் : அலி(ரலி)
ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!'
அறிவிப்பவர் : முகீரா(ரலி)
நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5

இந்த நபிமொழிகளை படித்தாவது திருந்துங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்

பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்