Monday 4 November 2019

ஒற்றுமையே வெற்றி

ஒற்றுமையே வெற்றி

சமூகத்தின் ஒற்றுமை ஒற்றுமையில் உள்ளது வேற்றுமையில் இல்லை

சமூகம் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விளையாடுகிறான்.

நாம் இந்த ஒற்றுமை என்ற விஷயத்தில் சிறிய விரிசல் கண்டாலும் ஷைத்தான் நம்மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்த முற்படுகிறான்.

இறைவனின்  அடிமைகள் நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் நம்மை  எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான்.

மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத்
தம் சிந்தையில் ஆழப் பதிக்கத் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

நமது சிந்தனையின் இலக்கு எதுவாக  இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும், வெகுமதியும் அமைகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்பு சமூகமே

சமூகம் பிளந்து கிடக்கும் காரணத்தை உற்று நோக்கினால் ஒற்றுமை குலைய காரணம்
உலக இலாப-நஷ்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும்.

நாம் சிந்திக்க வேண்டும் நமது வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது வேற்றுமையில் கிடையாது.

பலம் நிறைந்த சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால் அதுவே பகையாக மாறிவிடகூடாது

நமது சமூகம் அன்று பத்ர் என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் வெற்றி பெற்றபோது இறைவன் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் பலனையும் ஒருங்கே புகட்டினான் .

அங்கே அவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு ஒற்றுமையும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுகிறான்

அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள்.உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

நமது  சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சகோதரர்களே நாம் சிந்திக்க வேண்டும் முஸ்லிம்களின் எதிரிகள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் சீர் குலைத்திட வேண்டும் என்பதைத்தான்.

முஸ்லீம்களுக்குள் பிளவை உண்டாக்க வேண்டும் என்பது தான்.

அன்பு சொந்தங்களே❗❕

நாம் எந்த நிலையிலும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாக கூடாது என்பதை மனதில் ஆழமாக பதியவேண்டும்.

ஆக இஸ்லாமிய சொந்தங்களே

ஒற்றுமையே வெற்றி தரும்👍என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்து வல்ல ரஹ்மானுக்கு கட்டுப்பட்டு நண் மக்களாக ஒற்றுமையாக வாழகூடிய பாக்கியத்தை இறைவன் நமக்கு வழங்குவானாக!!!

✴✴✴✴✴✴✴✴✴✴

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

இஸ்லாம் என்றால் என்ன


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்பதின் பொருள் இறைவனுக்கு கட்டுப்படுதல்.கீழ்படிதல்,
என்பதாகும்

அதன் இன்னொரு பொருள் அமைதி,சாந்தி
என்பதாகும்.

அதாவது இந்த உலகத்தை  படைத்து பராமரித்து,கண்கானித்துவரும் இறைவன் கூறும் கட்டளை&விலக்கல்களுக்குக் கீழ்படிந்து நடப்பது

மேலும் தனிநபர் வாழ்விலும் அதன்மூலம் சமூக வாழ்விலும் கட்டுப்பாடும்(discipline) நல்லொழுக்கமும் உண்டாகிறது.

அதன்மூலம் ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம்.

அவ்வாறு பேணுதலோடு வாழ்வோருக்கு இம்மையிலும் மறுமையிலும் அமைதி தொடர்கிறது என்பதில் துளிஅளவும் சந்தேகம் இல்லை

அதாவது நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;  எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்

(அல்குர்ஆன் : 3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

(அல்குர்ஆன் : 3:85)



ⓂAKKAL ⓂEDIA

சத்திய மார்கத்தை பேணுவோம்

சத்திய மார்க்கத்தை      பேணுவோம்

த்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும்.

எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான்.

மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல பிழையான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர். சிலர் சத்தியத்தை மறைக்கக் கூடியவர்களாகவும், இன்னும் சிலர் சத்தியத்துடன் அசத்தியத்தை கலக்கக் கூடியவர்களாகவும், மேலும் அசத்தியத்தைக் கொண்டு மாற்று விளக்கம் கூறக்கூடியவர்களாகவும், பல விளக்கங்களுக்குத் தோதுவாக அமையக்கூடிய ஆதார வரிகளை தேடிப் பின்பற்றக் கூடியவர்களாகவும், ஆதாரங்களை அதற்குரிய இடத்தில் பிரயோகிக்காமல் முறைதவறிய அமைப்பில் பயன்படுத்தக்கூடியவர்களாகவும், அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுடைய வாசனங்களுடன் விளையாடக்கூடியவர்களாகவும், வழிதவறிய விடங்களுக்கு நற்பெயர்களை சூட்டி அலங்கரித்துக் காட்டக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே, சத்தியத்தைப் பற்றியும், அதனை விட்டும் திசைதிருப்பக்கூடிய அம்சங்களைப் பற்றியும் பேசுவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், இவ்விடயத்தில் ஒருவர் ஈடேற்றத்தைக் காண்பது மிகச் சிரமமாகும்.

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.

1.அநியாயம் செய்தல்
நாம் அநியாயம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் அதன் காரணமாக அல்லாஹ் எங்களை விட்டும் சத்தியத்தை தூரப்படுத்துவான். இது குறித்து சுமார் 10க்கு மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் வெளிப்படையாகக் கூறியுள்ளான். எடுத்துக்காட்டாக:

மேலும் அல்லாஹ் அநியாயம் புரியக்கூடிய கூட்டத்தாருக்கு நேர்வழி காட்டமாட்டான்.

(அல்மாயிதா: 258)

மேலும், இதே கருத்தில் இடம்பெறக்கூடிய சில வசனங்களைப் பார்க்க வேண்டும் என்றால் பின்வரும் வசனங்களை வாசித்துப் பாருங்கள்!

ஆலு இம்றான்: 86, மாயிதா: 51, அன்ஆம்: 144, தவ்பா: 19, 109, கஸஸ்: 50, அஹ்காப்: 10, ஜுமுஆ: 5, ஸப்: 7

எனவே, அநியாயத்தை விட்டும் விலகியிருக்கும் வரை எம்மை சத்தியம் நெருங்கமாட்டாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2. அறியாமை

இப்பண்பு அனைத்து வகையான பாவங்களுக்கும் அடிப்டையாகக் காணப்படுகின்றது. யார் ஒரு விடயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லையோ அவர் அது தொடர்பான அறிவுக்கு எதிரியாக மாறிவிடுவார் என்பது எதார்த்தமானது. அதன் அடிப்படையிலேயே எம் சமூகத்திற்கு மத்தியில் பல சத்தியத்திற்குரிய அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வடிப்படையைப் பற்றி அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்.

குர்ஆனாகிய அதன் அறிவைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியாததைப் பொய்யாக்குகின்றனர்

(யூனுஸ்: 39)

ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களை விட்டும் நுபுவ்வத்துடைய ஒளி துண்டிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் பித்னாவுடைய இருளில் வீழ்ந்து விடுவார்கள். மேலும், அவர்களுக்கு மத்தியில் பித்அத்கள், பாவமான காரியங்கள் மற்றும் தீங்கான அம்சங்கள் நிகழ்ந்துவிடும்.

(மஜ்மூஉல் பதாவா: 17/310)

இதற்கான பரிகாரம்: மார்க்கத்தை நல்ல முறையில் கற்று எம் மத்தியில் காணப்படும் அறியாமையை போக்குவதாகும்.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அமல்களில் மிகச் சிறந்தது எதுவெனக் கேட்கப்பட்ட போது: “அறிவு” என்றார்கள். அப்போது கேள்வி கேட்ட அம்மனிதர், அதே கேள்வியை மீண்டும் கேட்க, அந்நபித்தோழரும் அதே பதிலை அளித்துவிட்டு அம்மனிதரை நோக்கி, “உனக்கு நாசம் உண்டாகட்டும்! நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றிய அறிவுடன் குறைவான அறிவும், கூடுதலான அறிவும் உனக்குப் பிரயோசனமளிக்கும். மேலும், அல்லாஹ்வைப் பற்றிய அறிவீனத்துடன் குறைவான அறிவும், கூடுதலான அறிவும் உனக்கு பிரயோசனமளிக்க மாட்டாது” என்றார்கள்
ஸுனனுல் பைஹகி)

3. கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல்.

சத்தியம் எதுவென்று தேடிப்பார்க்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை எச்சரித்து அல்லாஹுத்தஆலா பல அல்குர்ஆன் வசனங்களை இறக்கி வைத்துள்ளான். எடுத்துக்காட்டாக,

மேலும், அவ்வாறே உமக்கு முன் எந்தவொரு கிராமத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோரில் ஒருவரை அனுப்பிய போதும் அவர்களிலுள்ள வசதி படைத்தவர்கள் அவரை நோக்கி: நிச்சயமாக எங்களுடைய மூதாதையினரை ஒரு வழியில் இருக்க நாங்கள் அடைந்து கொண்டோம். மேலும், நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்பவர்களாக இருக்கின்றோம் என்று பதிலளிப்பார்கள்”.

(அஸ் ஸுஹ்ருப்: 23)

எனவே, இத்தகைய தடைக்கல்லுக்கு சிறந்த சிகிச்சையாக, நாங்கள் எப்பொழுதும் மார்க்க விடயங்களை ஆதாரத்தோடு எடுக்கக்கூடியவர்களாக மாற வேண்டும்.

4. மன  இச்சையைப்   பின்பற்றுதலும்  உள்ளத்தின் தீர்ப்பை அமல் படுத்துவதும்.

மன இச்சையைப் பின்பற்றுவது தொடர்பாகப் பல தடைகள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா நெடுகில் பதிவாகியுள்ளன. அந்தவிதத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்

“நீர் மன இச்சையைப் பின்பற்றாதீர்! (அவ்வாறு பின்பற்றுவீரென்றால் அதன் காரணமாக) அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் அது உன்னை வழிதவறச் செய்து விடும்”
(ஸாத்: 26)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்:

“ஜாஹிலிய்யாக் காலத்தில் ஒருவர் வெண்ணிறக் கல்லை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வணங்கிவருவார். அதனை விட மிக அழகானதொரு கல்லைக் காணும் போது இரண்டாவது கண்ட கல்லை வணங்க ஆரம்பிப்பார். முதலாவதை விட்டுவிடுவார்”.
(இப்னு கஸீர்: 6/113)

இது தான் மன இச்சையைப் பின்பற்றுதலின் எதார்த்த நிலையாகும்.

மேலும், இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

“மன இச்சையைப் பின்பற்றுபவரை அவருடைய மன இச்சை குருடனாகவும் செவிடனாகவும் மாற்றிவிடும்”.

(மின்ஹாஜுஸ் ஸுன்னா அந்நபவிய்யா: 5/176)