Wednesday 15 April 2020

பொறுமை கொள்வோம்



 கஷ்டங்கள் நீங்கிட

நோய்த்தொற்றின் காரணமாக
 ஊரடங்கு உத்தரவை 
அரசு மேலும்  மே மூன்று வரை நீடித்திருக்கிறது
இன்ஷா அல்லாஹ் சில தினங்களில் நோன்பு ஆரம்பமாக இருக்கிறது

நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம்
தடையுத்தரவு காலம்வரை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று ஜமாஅத்துல் உலமா சபை அறிவித்திருக்கிறார்கள்
தலைமைக்கு கட்டுப்படுவது நபி வழியாக இருக்கிறது  
 இது ஒட்டுமொத்த உலமாக்கள் சேர்ந்து எடுக்கும்  மசூரா
அரசு பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது
 என்கிற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை
 சூழ்நிலையை அனுசரித்து
 நடப்பதும்
 ஆட்சிக்கு கட்டுப்படுவதும்
நம் மீது கடமையாக இருக்கிறது

 மார்க்க சட்டங்களை ஆராய்ந்து அதன்பிறகே
 உலமாக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று அறிவித்து இருப்பார்கள்
 அதனால் நம்மீது எந்த குற்றமும் வந்துவிடாது
 அல்லாஹ் மன்னிக்கக் கூடியவனாகவும் கருணை உள்ளவராகவும் இருக்கிறான்


 இன்னும் எங்காவது கூடுதலாக நன்மை கிடைத்துவிடும் என்கிற நோக்கில்
 கூட்டாக ஜும்மா நடத்தலாம் தராவீஹ் நடத்தலாம் என்று கூட்டம் சேர வேண்டாம்.

 எங்காவது நடக்கும் தவறு
 ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும்  அவமானப்படுத்த காரணமாக அமைந்துவிடுகிறது

 50 நபர்கள் கூட்டாக ஜும்மா தொழுகை நடத்தினார்கள்
 அது சரியா என்று டிவிக்களில் விவாதம் நடக்கிறது
 உங்கள் செயலை ஒட்டு மொத்த சமுதாயமும் விரும்பவில்லை என்பதை நாம்
 உணர்ந்து கொள்ளவேண்டும்

தனித்திருந்து  கடமையான தொழுகை மற்றும்
 தராவீஹ் தொழுது
 அதிகமான இபாதத்துகள் செய்தால் அல்லாஹ் நம் மீது
 அதிகமதிகம் பிரியம் கொள்வான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் பலர் நோன்பு காலத்தில் நான்காவது கடமையான
 ஜக்காத் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்
 சரியாக கணக்குப் பார்த்து கொடுத்து கொண்டிருந்தவர்களும்
 இப்போது வியாபார ரீதியிலும்
வேலை இழப்பின் காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால்
 பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது
 இருந்தாலும் கட்டாயக் கடமையாக இருப்பதால்
 நிறைவேற்றியே ஆகவேண்டும்

 இந்தச் சூழ்நிலையில்
 நாம் பல மாதிரியான சிரமங்களையும் செலவுகளையும் சந்திக்கிறோம்
 நமது சிந்தனைகள் திசை திரும்பி விடாமல்
 வழக்கமான நமது கடமையை நிறைவேற்றவும்
 நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
 சொந்தங்கள்
 மற்றும் தேவையுடையவர்களுடைய சிரமங்களைப் போக்கும் வகையிலும்
 இருக்கும் கையிருப்பிணை வேறுவகையில் செலவு செய்வதை குறைத்துக்கொண்டு
 கட்டாய கடமையான ஜகாத்தை சரியாக நிறைவேற்ற
 எல்லாம் வல்ல அல்லாஹ் உதவிட வேண்டும்.

 அடுத்து நோன்பு நாட்களில்
 சதக்கா கொடுப்பது பல மடங்கு நன்மையை பெற்றுத் தரும்
 செயலாக இருக்கிறது
 பாவங்களிலிருந்து நீங்கிட
 நமது துஆ கபுல் ஆகவும்
 நிறைய சதகா கொடுக்க வேண்டும்.

 அவைகளை சிந்தித்து
 நமது பொருளாதாரத்தை சரி செய்து கொள்ள வேண்டும்

நோன்பின் முதல் வாரத்திற்கு பிறகு தடை உத்தரவு காலம் முடிவடைந்துவிடும் இன்ஷாஅல்லாஹ்

 இறைவன் நாடினால் அதிலிருந்து நமக்கு தொழுகை ஜும்ஆ
 தராவிஹ் போன்ற கடமைகளை பள்ளியில் நிறைவேற்றலாம் அனைவரும் இது சம்பந்தமாக அல்லாஹ்விடம் அதிக அதிகம் பிராத்தனை செயாவோம்.

பள்ளிகளில் சமுக இடைவெளியில் நோன்பு கஞ்சி கொடுக்க அரசிடம் அனுமதி கோருவோம் பலருக்கு அதுவே உணவாக கூட இருக்கலாம்.


இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து  யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும்போது   ஓதிய
 லா இலாஹ இல்லா அன்த துஆவை அதிகமதிகம் ஓதி கொள்ளுங்கள் அல்லாஹ் சொல்கிறான்
யூனுஸ் நபியவர்களின் கஷ்டத்தை நீங்கியதைப்போல்
 மூமின்கள் ஓதினால் அவர்களின் கஷ்டத்தையும் நீக்கி
 வெற்றியை கொடுப்போம் என்கிறான்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து
  குடியுரிமை பிரச்சனையிலிருந்து 
கொரோன வரை அனைத்திலும் வெற்றி கிடைக்க
 அனைவரும் துஆ செய்வோம்